Vastu Secrets: வீட்டில் 7 குதிரை படம் வைத்தால் என்ன பலன்?.. வாஸ்து சொல்லும் ரகசியங்கள்!
Vastu Secrets: பலரின் வீட்டிலும் 7 குதிரைகள் ஓடும் படம் வைத்திருப்பதை பார்த்திருப்போம். வாஸ்து சாஸ்திரத்தின்படி இந்த 7 குதிரைகள் படத்தை வீட்டில் வைப்பது ஏன், இதனால் கிடைக்கும் பலன்கள் என்ன, எந்த திசையில் வைக்க வேண்டும், எந்தப் படங்களை பயன்படுத்தக் கூடாது, பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
வாஸ்து மற்றும் ஆன்மிக நம்பிக்கைகளின் படி வீட்டில் வைக்கப்படும் ஓவியங்களுக்கும், சிலைகளுக்கும் முக்கிய இடம் உள்ளது. குறிப்பாக குதிரை படம் அல்லது 7 குதிரைகள் ஓடும் ஓவியம் பலராலும் அதிர்ஷ்டத்தின் சின்னமாக பார்க்கப்படுகிறது. சமீப காலங்களில் வீடுகள், அலுவலகங்கள், தொழில் நிறுவனங்கள் போன்ற இடங்களில் இந்த வகை ஓவியங்களை வைக்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது.

7 குதிரை ஓடும் படம்
வாஸ்து சாஸ்திரப்படி, குதிரை என்பது வெற்றி, வேகம், முன்னேற்றம் மற்றும் சக்தியின் அடையாளமாக கருதப்படுகிறது. அதிலும் 7 என்ற எண் மிகவும் அதிர்ஷ்டமான எண்ணாக பார்க்கப்படுவதால், 7 குதிரைகள் ஒன்றாக ஓடும் படம் சிறப்பு வாய்ந்ததாக நம்பப்படுகிறது. இந்த படம் வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரித்து, பணவரவு மற்றும் தொழில் வளர்ச்சிக்கு உதவும் என்று கூறப்படுகிறது.
அதிர்ஷ்டம்
குறிப்பாக தொழில் செய்பவர்கள், புதிய முயற்சி தொடங்குபவர்கள், வேலை வாய்ப்புக்காக முயற்சி செய்பவர்கள் ஆகியோர் இந்த ஓவியத்தை அலுவலகத்தில் வைத்தால் நல்ல முன்னேற்றம் கிடைக்கும் என பலர் நம்புகின்றனர். மனதில் தைரியம், நம்பிக்கை மற்றும் உற்சாகம் அதிகரிக்கவும் இது உதவும் என்று வாஸ்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
எந்த திசையில் வைக்கலாம்
வாஸ்து சாஸ்திரப்படி, குதிரை படம் வீட்டின் ஹாலில் அல்லது வேலை செய்யும் அறையில் வைக்கப்படுவது நல்லது. கிழக்கு அல்லது வட திசையில் வைப்பது சிறந்த பலன்களை தரும் என கூறப்படுகிறது. மற்ற திசைகளில் வைப்பதை தவிர்ப்பது நல்லது. குறிப்பாக ஓடும் குதிரைகள் வீட்டுக்குள் வரும் திசையில் இருப்பது நல்ல சக்தியை ஈர்க்கும் என்று நம்பப்படுகிறது.
தவிர்க்க வேண்டியவை
ஆனால், சில வகை குதிரை படங்களை தவிர்க்கவும் வேண்டுமாம். சோகமாக நிற்கும் குதிரை, காயமடைந்த குதிரை அல்லது போர்க்கள குதிரை போன்ற படங்கள் வீட்டில் எதிர்மறை எண்ணங்களை உருவாக்கும் என்பது வாஸ்து நம்பிக்கை. மனதிற்கு உற்சாகத்தையும், நேர்மறை எண்ணங்களையும் தரும் அலங்காரங்களை வீட்டில் வைத்திருப்பது நல்ல சூழலை உருவாக்க உதவுவதால், அதனை வாஸ்து முறைப்படி வைத்தால் பல நல்ல பலன்கள் கிடைக்கும்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications