திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவம்! நாளை முதல் அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து!

Subscribe to Oneindia Tamil

திருப்பதி: திருச்சானூர் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவத்தையொட்டி நாளை (நவம்பர் 26ஆம் தேதி) முதல் டிசம்பர் 8ஆம் தேதி வரை அனைத்து ஆர்ஜித சேவைகளையும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெறும் பிரம்மோற்சவத்தை போல் திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலிலும் வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. அந்த வகையில் இந்த பிரம்மோற்சவம் நாளை முதல் தொடங்குகிறது.

tiruchanoor

இதன் முதல் நிகழ்வாக ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறுகிறது. வரும் 27ஆம் தேதி குங்கும அர்ச்சனை காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை நடைபெறும். அது போல் 28ஆம் தேதி துவஜரோஹனம், இரவு சின்ன சேஷ வாகனத்தில் சுவாமி உலா வருதல் நடைபெறும்.

அது போல் 29ஆம் தேதி காலை பெரிய சேஷ வாகனத்திலும் மாலை அம்ச வாகனத்திலும் வீதியுலா நடைபெறுகிறது. அது போல் வரும் 30-ஆம் தேதி இரவு சிம்ம வாகனத்திலும் டிசம்பர் 1ஆம் தேதி கல்பவிருக்ஷ வாகனத்திலும் மாலை அனுமந்த வாகனத்திலும் அடுத்த நாள் டிசம்பர் 2ஆம் தேதி பல்லக்கு வாகனத்திலும் மாலை கஜ வாகனத்திலும் டிசம்பர் 3ஆம் தேதி சர்வபூபால வாகனத்திலும், மாலை தங்க ரதத்திலும், இரவு கருட வாகனத்திலும் சுவாமி திருவீதி உலா நடைபெறும்.

அது போல் டிசம்பர் 4ஆம் தேதி சூர்ய பிரபை வாகனத்திலும் மாலை சந்திர பிரபை வாகனத்திலும் டிசம்பர் 5ஆம் தேதி ரதோஸ்வமும் நடைபெறும். அடுத்த நாள் டிசம்பர் 6ஆம் தேதி பல்லக்கு உற்சவமும் பஞ்சமி தீர்த்தமும் மாலை புஷ்பயாகமும் நடைபெறுகிறது. அன்றுடன் பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.

திருச்சானூர் பத்மாவதி கோயிலில் நடைபெறும் பிரம்மோற்சவத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் செய்துள்ளது. இந்த பிரம்மோற்சவத்தையொட்டி திருச்சானூர் கோயிலில் அனைத்து ஆர்ஜித சேவாக்களும் நாளை முதல் டிசம்பர் 8ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+