ஜோதிடர்கள் யார் கணித்தாலும் 99%தான் பலிக்குமாமே! இது உண்மையா?கிருஷ்ணர் சொன்னது என்ன?
சென்னை: ஜோதிடக்காரர்கள் யார் கணித்தாலும் 99 சதவீதம்தான் ஜோதிடம் பலிக்கும் என்பது தெரியுமா? இதற்கு மகாபாரதத்திலேயே நல்ல உதாரணம் இருக்கிறது என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.
ஜோதிடத்தின் மீது பலருக்கு நம்பிக்கை இருக்கும், சிலருக்கு இருக்காது. ஒருவர் பிறந்த நேரம், ஊர், பிறந்த தேதி தெரிந்துவிட்டால் முக்காலத்தையும் அறிந்து கொள்ளலாம் என ஒரு சிலர் ஏமாற்றி பணம் பறித்து வருகிறார்கள்.

ஆனால் ஜோதிடத்தில் 99 சதவீதம்தான் பலிக்கும் என்ற உண்மை ஒன்று உள்ளது. இதை மகாபாரதத்தில் வரும் உதாரணத்துடன் தெரிந்து கொள்ளலாம். துரியோதனன், பாண்டவர்களை அழிப்பதற்கு போருக்கான சிறந்த நாளை கணித்துக் கொடுக்கும்படி சகாதேவனிடம் கேட்கிறார்.
அதற்கு சகாதேவனும் நாள் குறித்து கொடுக்கிறார். அந்தளவுக்கு சகாதேவன் ஜோதிடக் கலையில் உண்மையாக இருந்தார். போரில் கர்ணன் இறக்கும்போதுதான் கர்ணண்தான் தன் உடன்பிறந்தவன் என்ற உண்மை சகாதேவனுக்கு தெரியவந்தது.
இதனால் தனக்கு தெரிந்த முக்காலமும் உணரும் ஜோதிடக்கலையில் இந்த உண்மையை தெரிந்து கொள்ள முடியவில்லையே என ஜோதிடத்தில் நம்பிக்கை இழந்தார். 18 நாள் நிகழ்ந்த குருஷேத்திரப் போர் முடிவடைந்த பின் சகாதேவன் கிருஷ்ணனைப் பார்த்து, "கிருஷ்ணா ஜோதிடம் என்பது பொய்தானே என்று கேட்கிறார்.
அதற்கு கிருஷ்ணன் ஜோதிடத்தில் அனைத்தும் அறிந்த நீயே இப்படி கூறலாமா? என சொல்கிறார்... ஜோதிடத்தில் அனைவருடைய பிறப்பு ரகசியமும் என் கணிதத்தில் தெரிந்து கொண்டேன். ஆனால் கர்ணன் என் உடன்பிறந்தவன் என்ற ரகசியம் என் ஜோதிட கணிதத்தில் வரவில்லை.
அப்படியென்றால் ஜோதிடம் பொய்தானே கிருஷ்ணா? என்று மீண்டும் கேள்வி எழுப்பினான் சகாதேவன். இதை பொறுமையாக கேட்ட கிருஷ்ணன், அனைத்தையும் நீ ஜோதிடத்தில் தெரிந்து கொண்டதால் பிறகு நான் எதற்கு?
இந்த பதிலை கேட்டவுடன் சகாதேவனுக்கு தூக்கி வாரி போட்டது. ஜோதிடத்தை விட இறைசக்திதான் பெரியது என்பதை உணர்ந்தார் சகாதேவன், எப்படிப்பட்ட சிறந்த ஜோதிடனாக இருந்தாலும் நிச்சயம் அவர்களால் 99 சதவீதம் மட்டுமே தங்களால் கணிக்க முடியும்.
இதன் காரணமாகத்தான் விதி என்பதை கூட இறைவன் மீது நம்பிக்கை வைத்து மதியால் வெல்லலாம் என்று நம் முன்னோர் கூறினர். ஜோதிடத்தில் முழுவதுமாக மூழ்கி விடாமல், இறைவனுடன் முழுமையாக அர்ப்பணிப்புணர்வுடன் இருந்தாலே ஜோதிடத்தின் பலனையும் பெறலாம்.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications