இன்று அனுமன் ஜெயந்தி! ஆஞ்சநேய வீரரை எந்த நேரத்தில், எப்படி வழிபடுவது? யாரெல்லாம் வணங்கலாம்?
சென்னை: ராமபிரானின் பக்தரான அனுமன் அவதரித்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் ஆஞ்சநேயரின் அருள் கிடைக்க அவரை எப்படி வணங்குவது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
ஆஞ்சநேயர் என்றாலே ராவணன் பிடியில் இருந்த சீதாபிராட்டியை மீட்டது, சஞ்சீவ மலையை தூக்கிக் கொண்டு சென்றது என அவரது வீரம் வெளிப்படும். அது போல் பாசத்தில் அவரை விட சிறந்தவர்கள் இருக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு ராமர் மீது பாசத்தையும் விசுவாசத்தையும் பக்தியையும் காட்டியவர்.

ஆஞ்சநேயருக்கு புத்திக் கூர்மை அதிகம் இருக்கிறது. ராமாயணத்தின் ஆணிவேரே அனுமன் என சொல்லலாம். ஆஞ்சநேயரின் திறமைகள் குறித்து விளக்கும் பகுதிதான் சுந்தரகாண்டம். இதை படித்தாலே துன்பங்கள் தீரும். அது போல் மனமுறுகி பிரார்த்தனை செய்தால் அள்ளி கொடுப்பதில் அனுமன் வள்ளல்.
அனுமன் அவதரித்த தினத்தையே அனுமன் ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் அவர் மார்கழி மாத அமாவாசையில் மூல நட்சத்திரத்தில் பிறந்தார் என சொல்லப்படுகிறது. அந்த வகையில் இன்று அனுமன் அவதரித்த நாளாகும். இந்த அனுமன் ஜெயந்தி ஜனவரி மாதம் தொடக்கத்தில் ஏற்கெனவே வந்துவிட்டது.
தற்போது டிசம்பர் 30ஆம் தேதியான இன்றும் அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. அதாவது இன்றைய தினம் காலை 4.44 மணிக்கு தொடங்கி டிசம்பர் 31 ஆம் தேதி காலை 5.03 மணி வரை அமாவாசை திதி உள்ளது. அது போல் டிசம்பர் 30-ஆம் தேதி அதிகாலை 12.19 மணிக்கு தொடங்கி டிசம்பர் 31 ஆம் தேதி அதிகாலை 01.12 மணி வரை மூல நட்சத்திரம் உள்ளது.
இன்றைய தினம் அமாவாசையும் மூல நட்சத்திரமும் இணைவதால் இன்று முழுவதுமே அனுமன் ஜெயந்தி வழிபாட்டிற்கு சிறந்ததாகும். அனுமன் ஜெயந்தியை யாரெல்லாம் கொண்டாடலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
கல்விக்கு உரிய கிரகமான சூரியனிடமே கல்வியை கற்றார் அனுமன். படிப்பில் சிறந்து விளங்க வேண்டும் என்றால் தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும் என்றாலும் உயர்பதவி கிடைக்கவும் சிறந்த பேச்சாற்றலை பெறவும் அனுமன் ஜெயந்தி அன்று அனுமனை மனதார வழிபடலாம். கர்ப்பிணிகள் இன்றைய தினம் சுந்தரகாண்டம் படிப்பதால் அனுமனை போல் வீரமான ஆரோக்கியமான குழந்தை பிறக்கும் என்பது ஐதீகம்.
இன்றைய தினம் அனுமன் சாலிசா , சுந்தரகாண்டம் படிக்கலாம். முடியாவிட்டால் விஷ்ணு சகஸ்ரநாமத்தில் வரும், "ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே சகஸ்ர நாம தத்துல்யம் ஸ்ரீராம நாம வரானனே" என ராம மந்திரத்தை சொன்னால் ராமனின் அருளும் அனுமனின் அருளும் ஒரு சேர கிடைக்கும்.
ஆஞ்சநேயர் கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. நாமக்கல் பஞ்சவடி ஆஞ்சநேயர் கோயிலில் 1 லட்சத்து 8 வடை மாலை சாத்தப்பட்டு சிறப்பு தீபாராதனை செய்யப்பட்டது. இதை காண பக்தர்கள் அதிகாலை முதலே கோயில் வாசலில் திரண்டு சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.
-
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்? -
ஜனநாயகன் ரூ.500 கோடி பட்ஜெட் படம்! HD பிரிண்ட்டில் வெளியானது எப்படி? தமிழக டிஜிபியிடம் புகார் -
நம்பர் 5.. அடித்து சொல்லும் சர்வேக்கள்! திமுக+ 180 இடங்களை தாண்டுகிறது! அதிமுக ஓவர்? முக்கிய கணிப்பு












Click it and Unblock the Notifications