இன்று அனுமன் ஜெயந்தி! ஆஞ்சநேய வீரரை எந்த நேரத்தில், எப்படி வழிபடுவது? யாரெல்லாம் வணங்கலாம்?
சென்னை: ராமபிரானின் பக்தரான அனுமன் அவதரித்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் ஆஞ்சநேயரின் அருள் கிடைக்க அவரை எப்படி வணங்குவது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
ஆஞ்சநேயர் என்றாலே ராவணன் பிடியில் இருந்த சீதாபிராட்டியை மீட்டது, சஞ்சீவ மலையை தூக்கிக் கொண்டு சென்றது என அவரது வீரம் வெளிப்படும். அது போல் பாசத்தில் அவரை விட சிறந்தவர்கள் இருக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு ராமர் மீது பாசத்தையும் விசுவாசத்தையும் பக்தியையும் காட்டியவர்.

ஆஞ்சநேயருக்கு புத்திக் கூர்மை அதிகம் இருக்கிறது. ராமாயணத்தின் ஆணிவேரே அனுமன் என சொல்லலாம். ஆஞ்சநேயரின் திறமைகள் குறித்து விளக்கும் பகுதிதான் சுந்தரகாண்டம். இதை படித்தாலே துன்பங்கள் தீரும். அது போல் மனமுறுகி பிரார்த்தனை செய்தால் அள்ளி கொடுப்பதில் அனுமன் வள்ளல்.
அனுமன் அவதரித்த தினத்தையே அனுமன் ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் அவர் மார்கழி மாத அமாவாசையில் மூல நட்சத்திரத்தில் பிறந்தார் என சொல்லப்படுகிறது. அந்த வகையில் இன்று அனுமன் அவதரித்த நாளாகும். இந்த அனுமன் ஜெயந்தி ஜனவரி மாதம் தொடக்கத்தில் ஏற்கெனவே வந்துவிட்டது.
தற்போது டிசம்பர் 30ஆம் தேதியான இன்றும் அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. அதாவது இன்றைய தினம் காலை 4.44 மணிக்கு தொடங்கி டிசம்பர் 31 ஆம் தேதி காலை 5.03 மணி வரை அமாவாசை திதி உள்ளது. அது போல் டிசம்பர் 30-ஆம் தேதி அதிகாலை 12.19 மணிக்கு தொடங்கி டிசம்பர் 31 ஆம் தேதி அதிகாலை 01.12 மணி வரை மூல நட்சத்திரம் உள்ளது.
இன்றைய தினம் அமாவாசையும் மூல நட்சத்திரமும் இணைவதால் இன்று முழுவதுமே அனுமன் ஜெயந்தி வழிபாட்டிற்கு சிறந்ததாகும். அனுமன் ஜெயந்தியை யாரெல்லாம் கொண்டாடலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
கல்விக்கு உரிய கிரகமான சூரியனிடமே கல்வியை கற்றார் அனுமன். படிப்பில் சிறந்து விளங்க வேண்டும் என்றால் தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும் என்றாலும் உயர்பதவி கிடைக்கவும் சிறந்த பேச்சாற்றலை பெறவும் அனுமன் ஜெயந்தி அன்று அனுமனை மனதார வழிபடலாம். கர்ப்பிணிகள் இன்றைய தினம் சுந்தரகாண்டம் படிப்பதால் அனுமனை போல் வீரமான ஆரோக்கியமான குழந்தை பிறக்கும் என்பது ஐதீகம்.
இன்றைய தினம் அனுமன் சாலிசா , சுந்தரகாண்டம் படிக்கலாம். முடியாவிட்டால் விஷ்ணு சகஸ்ரநாமத்தில் வரும், "ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே சகஸ்ர நாம தத்துல்யம் ஸ்ரீராம நாம வரானனே" என ராம மந்திரத்தை சொன்னால் ராமனின் அருளும் அனுமனின் அருளும் ஒரு சேர கிடைக்கும்.
ஆஞ்சநேயர் கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. நாமக்கல் பஞ்சவடி ஆஞ்சநேயர் கோயிலில் 1 லட்சத்து 8 வடை மாலை சாத்தப்பட்டு சிறப்பு தீபாராதனை செய்யப்பட்டது. இதை காண பக்தர்கள் அதிகாலை முதலே கோயில் வாசலில் திரண்டு சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.
-
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications