Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முருகனுக்கு அரோகரா.. கந்தசஷ்டி விரதம் 4ம் நாள் நடக்கும் அற்புதம்.. நாலு பேருக்கு நன்மை செய்தால்? செம

Subscribe to Oneindia Tamil

சென்னை: கந்தசஷ்டி விரதத்தின் 4வது நாளான நாளைய தினம், முருகனை எப்படி வணங்க வேண்டும் தெரியுமா? 4ம் நாள் விரதத்தின் சிறப்புகள் என்னென்ன? இந்த பூஜையை செய்வதன் பலன்களும், நன்மைகளும் என்னென்ன தெரியுமா? சுருக்கமாக பார்க்கலாம்.

கந்தசஷ்டி விரதத்தின் 3வது நாள் இன்று நவம்பர் 4ம் தேதி சிறப்பிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளில் ஷட்கோண தீபம் ஏற்றி வழிபடுபவர்கள் 3 தீபங்களை ஏற்றி வழிபட்டு வருகின்றனர்..

spirituality kandha sashti viratham skandha sashti vratham

பிரணவ மந்திரம்: ஷட்கோண கோலத்தின் மத்தியில் ஓம் என்ற பிரணவ மந்திரத்தை எழுதி, அதைச் சுற்றிலும் உள்ள 6 நட்சத்திரங்களில் "சரவண பவ" என்று எழுதி, முதல் நாளில் "ச" என்ற எழுத்தின் மீதும், 2வது நாளில் "ர" என்ற எழுத்தின் மீதும் தீபம் ஏற்றிய நிலையில், இன்று 3வது நாளில் "வ" என்ற எழுத்தின் மீது தீபம் ஏற்றி வழிபட்டுள்ளனர்..

காலை போலவே, இன்று மாலையும் தீபத்தை ஏற்றி வழிபட உள்ளனர். ஆனால், கோலமிடும்போது, ஏற்கனவே உள்ளதை துடைத்து சுத்தம் செய்து விட்டு, புதியதாக கோலமிட்டு, விளக்கேற்ற வேண்டும். காலையில் பயன்படுத்திய பூக்களையும், நைவேத்தியங்களை மாலையில் பயன்படுத்தக் கூடாது.

விசேஷம்: கந்தசஷ்டி விழாவின் 4ம் நாள் நாளைய தினம் செவ்வாய்க்கிழமை வருகிறது.. செவ்வாய் என்றாலே முருகனுக்கேற்ற நாளாகும்.. அதிலும் கந்த சஷ்டியின்போது வரும் செவ்வாய்கிழமை என்றால் கூடுதல் விசேஷமானதாகும். நாளை 4வது நாளில் ஷட்கோண தீபம் ஏற்றி வழிபடுபவர்கள், 4 விளக்குகளை ஏற்றி வழிபட வேண்டும். நைவேத்தியமாக புதினா சாதம் செய்யலாம்.

சரவணபவ எழுத்துக்களில் "ண" என்ற எழுத்தின் மீது தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.. சிவப்பு நிறத்திலான பூக்கள் அல்ல செவ்வரளி பூக்களை கொண்டு வழிபடுவது சிறப்பு.

பசுமாடு: 4வது நாள் என்பதால், ஜீவராசிகளுக்கு உணவளிக்கலாம். இதனால் நம்முடைய கடன் பிரச்சனை குறையும் என்பது நம்பிக்கையாகும். அந்தவகையில், பசு மாட்டுக்கு பழம், கீரை, வெல்லம் கலந்த அரிசி இவைகளில் ஏதாவது ஒன்றை தானமாக வழங்க வேண்டும்... பிறகு நாய்க்கும்,காகத்திற்கும் உணவளிக்கலாம். புறா, கோழி போன்ற ஏதாவது ஒரு ஜீவராசிக்கும் உணவளிக்கலாம்.

மேற்கண்ட 4 ஜீவராசிகளுக்கும் உணவளிக்க முடியாமல் போனால், யாராவது 4 நபர்களுக்கு திருநீறு மற்றும் சுத்தமான நெய்யை தானமாக வழங்கலாம். அல்லது 4 பாக்கெட் விபூதியை, கோவிலுக்கு சென்று யாராவது 4 பேருக்கு வழங்கலாம். ஆனால், இந்த நாளில் காலை 6 மணி முதல் 7 மணிக்குள் வழிபட்டுவிட்டு, மதியம் 1 மணி முதல் 2 மணிக்குள் தானத்தை செய்து விட வேண்டும்.

தானங்கள்: "நாலு பேருக்காவது தானம் செய்யுங்க" என்று பெரியோர்கள் சொன்னது இதற்காகத்தான்.. இதனை கோவிலுக்கு வருபவர்களுக்கோ இவைகளை வேறு ஏதாவது கோவிலுக்கோ தானமாக கொடுக்கலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+