இன்று காரடையான் நோன்பு! எமனிடம் போய் கணவரின் உயிரை மீட்ட சாவித்திரி! தாலி சரடு மாற்ற நல்ல நேரம் எது?
சென்னை: காரடையான் நோன்பு இன்று அனுசரிக்கப்படும் நிலையில் திருமாங்கல்ய சரடை மாற்றிக் கொள்ள நல்ல நேரம் எது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். மேலும் இந்த நோன்பு யாருக்கு முக்கியமானது என்பதையும் பார்க்கலாம்.
மாசி மாதத்தில் வரும் நோன்புதான் இந்த காரடையான் நோன்பு. இந்த நோன்புக்கு கார அடைகளை செய்து படைக்க வேண்டும். உடன் சிறிது வெல்லம் அடைகளையும் செய்து படைக்க வேண்டும். திருமணமான பெண்கள் தங்களின் திருமாங்கல்யம் நிலைத்திருக்க வேண்டிய அம்பாளை நினைத்து இந்த நோன்பை நோற்கிறார்கள்.

அது போல் குடும்பம் செல்வச் செழிப்புடன் இருப்பதற்கும் இந்த விரதம் முக்கியமானதாகும். இதை சாவித்திரி நோன்பு என்றும் சொல்லலாம். இது மாசி மாதம் முடிந்து பங்குனி தொடங்கும் நாளில் கடைப்பிடிக்கப்படும். இந்த நோன்பை தமிழகம் மட்டுமல்லாமல் வெளிநாட்டில் உள்ள பெண்களும் கடைப்பிடிக்கிறார்கள்.
சாவித்திரி, தனது கணவர் சத்தியவானை எமனிடம் சென்று மீட்டதாக வரலாறு உண்டு. இதற்காக சாவித்திரி மேற்கொண்ட இந்த விரதம்தான் பலனை அளித்தது. காட்டில் இருந்த சாவித்திரி தனது கணவரின் நீண்ட ஆயுளுக்காக அம்பாளிடம் பிரார்த்தனை செய்து நோன்பு இருந்ததே காரடையான் நோன்பு என அழைக்கலாயிற்று.
இந்த விரத நாளன்று காட்டில் கிடைக்கும் பொருட்களை வைத்து கார அடை செய்து அம்பாளுக்கு படையலிட்டு வழிபட்டாள் சாவித்திரி. அப்போது உருகாத வெண்ணெய்யையும் வைத்து வழிபட்டாராம். அந்த பழக்கம் இன்றும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
கார அடை, வெல்ல அடையுடன் வெண்ணெய் துண்டையும் வைத்து படைக்கிறார்கள். இந்த ஆண்டு மார்ச் 14 ஆம் தேதி வெள்ளிக்கிழமை, இன்றைய தினம் இந்த காரடையான் நோன்பு வருகிறது.
இந்த நாளில் திருமணமான பெண்கள் கணவரின் நீண்ட ஆயுளுக்காக தாலி சரடை மாற்றிக் கொள்வார்கள். திருமணமாகாத பெண்கள் கைகளில் மஞ்சள் நிற நோன்பு கயிறை கட்டிக் கொள்வார்கள். காரடையான் நோன்பு இன்று காலை சூரிய உதயத்தின் போது தொடங்கி சூரிய அஸ்தமனத்தின் போது முடியும்.
மார்ச் 14 ஆம் தேதி சூரிய உதயம் காலை 6.40-க்கு தொடங்கியது. அது போல் மாலை சூரிய அஸ்தமனம் 6.31 மணிக்கு மறைகிறது. எனவே இந்த கால கட்டத்தில் பூஜை செய்து வழிபடலாம். மேலும் மாலை 5.30 மணி முதல் 6 மணிக்குள்ளாக தாலி சரடை மாற்றலாம். நோன்பு கயிறையும் கட்டிக் கொள்ளலாம். 6 மணிக்கு மேல் தாலி சரடை மாற்றிக் கொள்ளக் கூடாது.
மேலும் சிலர் செவ்வாய், வெள்ளிகளில் தாலி சரடை மாற்றும் பழக்கம் இல்லாதவர்கள் நேற்றே சரடை மாற்றிக் கொண்டனர். இன்று அடைகளை செய்து நோன்பு கயிறுகளை மட்டும் 6 மணிக்குள்ளாக கட்டிக் கொள்வார்கள்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications