Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வாராரு... வாராரு.. அழகர் வாராரு.. மதுரை சித்திரைத் திருவிழா- நாளை மறுநாள் கொடியேற்றத்துடன் தொடக்கம்!

Subscribe to Oneindia Tamil

மதுரை: தமிழ்நாட்டில் முதன்மையான ஆன்மீகப் பெருவிழாவான மதுரை சித்திரைத் திருவிழா நாளை மறுநாள் கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்குகிறது. சித்திரைத் திருவிழாவின் மிக முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான மீனாட்சி திருக்கல்யாணம் வரும் 8-ந் தேதி நடைபெறும்; இதனைத் தொடர்ந்து மே 11-ந் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

தமிழ்நாட்டில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் ஜாதி, மத பேதமின்றி ஒன்று திரளும் ஒற்றைத் திருவிழாவாக போற்றப்படுவது மதுரை சித்திரைத் திருவிழா. ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழாவுக்காக தென் தமிழ்நாட்டுப் பக்தர்கள் தவமாய் தவமிருந்து காத்திருப்பது வழக்கம்.

Madurai

இந்த ஆண்டு சித்திரைத் திருவிழா நாளை மறுநாள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. மதுரையின் மாசி வீதிகளில் சித்திரை திருவிழா காலத்தில் அருள்மிகு மீனாட்சி - சுந்தரேஸ்வரர் பல வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பர்.

சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகள்

மே 6-ந் தேதி: மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம்

மே 7-ந் தேதி: சுந்தரேஸ்வரரும் அம்மனும் போரிடும் திக்கு விஜயம் நிகழ்ச்சி

மே 8-ந் தேதி: மீனாட்சி அம்மன் திருக்கல்யாண வைபோகம்; மீனாட்சி- சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வில் திருப்பரங்குன்றத்தில் இருந்து வந்து தெய்வானை, முருகப் பெருமான், பெருமாள் பங்கேற்பர்.

மே 9-ந் தேதி: மதுரையம்பதியின் மாசி வீசிதிகள் தேரோட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும்.

மே 10-ந் தேதி: மதுரை அழகர்மலையின் அடிவாரத்தில் எழுந்தருளியிருக்கும் கள்ளழகர் பெருமாள் மதுரையை நோக்கி புறப்படுதல். அழகர்மலையில் இருந்து மதுரை மாநகர் நோக்கி பரிவாரங்கள் புடைசூழ வருகை தரும் கள்ளழகர் பெருமான், நூற்றுக்கணக்கான மண்டபங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்க இருக்கிறார்.

மே 11-ந் தேதி: மாவடியில் கள்ளழகர் பெருமாளை அழைக்கும் எதிர்சேவை நிகழ்ச்சி.

மே 12-ந் தேதி: சித்திரைத் திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியாக, தங்கக் குதிரையில் வீற்ற நிலையில் கள்ளழகர் பெருமாள், கரைபுரண்டோடும் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி.

மே 13-ந் தேதி: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி

மே 15-ந் தேதி: மதுரையில் இருந்து அழகர்மலை நோக்கி கள்ளழகர் புறப்படுதல்.

மே 17-ந் தேதி: மதுரை சித்திரைத் திருவிழா நிறைவடையும்

ஏற்பாடுகள் மும்முரம்

இதனிடையே மதுரை சித்திரைத் திருவிழா-2025 முன்னேற்பாடு பணிகள் குறித்து அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று காலை மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் பி. மூர்த்தி, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மாநகராட்சி மேயர் இந்திராணி பொன் வசந்த், மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா, மாநகர காவல் ஆணையாளர் லோகநாதன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே. அரவிந்த், மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன், மதுரை எம்பி சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

வைகை ஆற்றில் நீர் திறப்பு

இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், இந்த ஆண்டு மதுரை சித்திரைத் திருவிழா, கடந்த ஆண்டுகளை விட மிகவும் சிறப்பாக நடத்தப்படும். இதுவரையிலான கடந்த கால அனுபவங்களைக் கொண்டு சித்திரைத் திருவிழாவை சிறப்பாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. சித்திரைத் திருவிழாவுக்காக, கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்காக வைகை ஆற்றில் விரைவில் தண்ணீர் திறந்துவிடப்படும் என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+