அமெரிக்காவில் நவராத்திரி கொலு! தத்ரூபமாக வைக்கப்பட்ட தசாவதாரம்! ஓங்கி ஒலித்த மகிஷாசுரமர்த்தினி
கலிபோர்னியா: அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள தமிழரான ராஜி கோவிந்தராஜன் வீட்டில், இந்த ஆண்டும் நவராத்திரி விழா, கொலுவுடன் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டு தமிழ் பாரம்பரியத்தை பறைசாற்றினர்.
ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் மஹாளய அமாவாசை முடிந்தவுடன் நவராத்திரி தொடங்கும். இந்த 9 நாட்களும் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய 3 தெய்வங்களை போற்றும் வகையில் தலா 3 நாட்கள் கொண்டாடப்படுகிறது. அதாவது மகிஷாசுரன் என்ற அசுரனை அழிக்க 9 நாட்கள் கொலு வைத்து போரிட்டு 10 ஆம் நாள் வென்றார். அது முதல் மகிஷாசுரமர்த்தினி என அழைக்கப்பட்டாள்.

கொலு வைத்து இறைவனை வழிபட்டால் வாழ்வில் எல்லா காரியங்களிலும் ஜெயம்தான் என்பதற்காகவே மக்கள் அவரவர் வீடுகளில் கொலு வைத்து வழிபடுவர். 3 படிகள், 5 படிகள், 7 படிகள், 9, 11 என நம் வசதிக்கேற்ப கொலு படிகளில் சுவாமி சிலைகளை வைத்து அலங்கரிக்கப்படும். அது போல் புது புது விஷயங்களை கருப்பொருளாக வைத்து பள்ளிக் கூடம், தேசிய ஒருமைப்பாடு, வேற்றுமையில் ஒற்றுமை, கூடி வாழ்ந்தால் கோடி நன்மை உள்ளிட்டவை உணர்த்தும் வகையில் பொம்மைகள் அலங்கரிக்கப்படும்.

இந்த கொலு பொம்மைகளின் வாயிலாக மரங்களை நடுவோம், காடுகளை பாதுகாப்போம், சுற்றுச்சூழலை காப்போம், பிளாஸ்டிக் ஒழிப்போம் உள்ளிட்ட கருத்தை சொல்லும் விதத்தில் கருப்பொருள்களும் இருக்கும். காலம் காலமாக கொலு வைத்து வருபவர்கள் புரட்டாசி மாத அமாவாசை அன்று வைப்பர். சரஸ்வதி பூஜை அன்று முடிவுறும். இந்த இடைபட்ட நாட்களில் தினந்தோறும் சுவாமிக்கு நெய்வேத்யம் செய்யப்படும்.

பெண்கள், கன்னியா குழந்தைகள், வயது வந்த சிறுமிகள் உள்ளிட்டோரை வீட்டிற்கு அழைத்து தாம்பூலம் கொடுக்கப்படும். சுவாமியின் பாடல்கள், ஸ்லோகங்கள் சொல்லப்படும். இந்த பழக்கத்தை வெளிநாடு சென்றாலும் இன்னும் மறக்காமல் பலர் நவராத்திரியை கொண்டாடி வருகிறார்கள்.

அந்த வகையில் தமிழ் ஒன் இந்தியா வாசகரான அமெரிக்காவை சேர்ந்த ராஜி கோவிந்தராஜன், மன்டேக்காவில் உள்ள தனது வீட்டில் ஆண்டுதோறும் தவறாமல் நவராத்திரியை கொண்டாடி வருகிறார். அந்த வகையில் இந்த ஆண்டு 7 படிகள் வைத்து அவற்றில் பரமனின் 10 அவதாரங்களை குறிக்கும் தசாவதாரங்களை வைத்திருந்தார். மேலும் 8 விதமான லட்சுமிகளும் ராஜியின் வீட்டிற்கு கொலு பொம்மைகள் உருவில் ஆசி வழங்க வந்திருந்தனர்.

அது போல் துர்கா, லட்சுமி, சரஸ்வதி, விஷ்ணு ஆகியோரின் பல்வேறு விதமான பொம்மைகள் வைக்கப்பட்டிருந்தன. இந்த நவராத்திரி பூஜையின் போது ஐகிரி நந்தினி, லட்சுமி அஸ்டகம், கந்த சஷ்டி கவசம் ஆகியவை பாடப்பட்டது. மேலும் கர்நாடக வாய்ப்பாட்டுகள், பஜனைகள் உள்ளிட்டவை நடத்தப்பட்டன. இந்த கொலுவை காண 100-க்கும் மேற்பட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்த விழாவில் வீணையும் வாசிக்கப்பட்டது. அறுசுவை உணவு சமைக்கப்பட்டு விருந்தினர்களுக்கு பரிமாறப்பட்டது. இறுதியாக பெண்களுக்கு வெற்றிலை பாக்கு , பூ, பழம், மஞ்சள், குங்குமம், திருமாங்கல்ய சரடு உள்ளிட்ட சுபமான பொருட்கள் தாம்பூலமாக வழங்கப்பட்டன. பின்னர் மங்கல ஆரத்தி எடுக்கப்பட்டு விழா நிறைவடைந்தது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications