வெண்கல தட்டு சத்தம்.. செம்பு நீர்.. கடன் தொல்லை தீர இந்த பரிகாரம் செய்தாலே போதும்.. சிம்பிள் டிப்ஸ்
சென்னை: உழைத்து சம்பாதித்த பணம் கையில் தங்காமல் போவதுண்டு.. இதனால் கழுத்தை நெரிக்கும் கடன் தொல்லைக்கும் ஆளாக நேரிடுகிறது.. இந்த கடன் தொல்லையை தீர்ப்பதற்கும் எந்த வழியும் கிடைப்பதில்லை.. அல்லது அந்த கடனை எளிதாக அடைக்கவும் முடிவதில்லை.. எனவே, குடும்பத்திலுள்ள நிதி நிலைமை சீராக, எளிய பரிகாரங்களை நம்முடைய முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளனர். அந்தவகையில், ஒருசிலவற்றை பற்றி மட்டும் இங்கே பார்ப்போம்.
வீட்டிலுள்ள திருஷ்டி கழிந்தாலே, அல்லது வீட்டிலுள்ள நபர்கள் மீதான திருஷ்டி கழிந்தாலே, தடையின்றி நன்மைகள் வந்து சேரும் என்பார்கள்.

இதற்காகத்தான், ஒரு சிவப்பு துணியில், சிறிது கல் உப்பை முடிச்சு போல கட்டி வாசலில் தொங்கவிட அறிவுறுத்துகிறார்கள்.
வெண்கல தட்டு
வீட்டு பூஜையறையில் வெண்கல தட்டினை வைத்து, அதில் குபேரன் படம் அல்லது குபேரன் சிலையை வைக்க வேண்டும். இதே தட்டில் சில்லறை நாணயங்களையும் போட வேண்டும்.. பிறகு, குபேர காலத்தில் தாமரை திரையில் நெய் விளக்கேற்றி குபேரனை வழிபட வேண்டும்.
இறுதியாக, தட்டிலுள்ள சில்லறை நாணயங்களை 2 கைகளாலும் அள்ளி, எடுத்து, மீண்டும் தட்டிலேயே, சத்தம் வரும்படி போட வேண்டும். காரணம், நாணய சத்த ஒலி குபேரனுக்கு பிடிக்குமாம்.. இதனாலும் வீட்டில் நிதி நிலைமை சீராகும் என்பார்கள்.
மாத சம்பளம் பரிகாரம்
அதேபோல ஒருவர் மாத சம்பளம் வாங்கியதும், அல்லது வியாபாரத்தில் கிடைத்த முதல் லாபத்திலிருந்து வெறும் ரூ.500 நோட்டை மட்டும் எடுத்து, ஒரு கிண்ணத்தில் போட வேண்டும். இந்த 500 ரூபாயுடன் 1 மற்றும் 5 ரூபாய் நாணயம் என இரண்டையுமே போட வேண்டும்.
இந்த சில்லறைகளுடன் 2 ஏலக்காய், துண்டு பட்டை, 2 அண்ணாச்சி மொக்கு, கிராம்பு 3, குண்டு மஞ்சள் போன்ற மசாலா பொருட்களையும் போட வேண்டும். கிண்ணத்தில் உள்ள ரூபாய் நோட்டின் மீது அனைத்து சில்லறை, வாசனை பொருட்களும் பரப்பி இருக்க வேண்டும்.. ஏனென்றால், இந்த வாசனை பொருட்களுக்கு பணத்தை ஈர்க்கும் சக்தி உள்ளது.
இந்த கிண்ணத்தை பூஜை அறையில் வடகிழக்கு மூலை அல்லது குபேரன் வாசம் செய்யும் வடக்கு திசையில் வைக்க வேண்டும். இதற்கு தினந்தோறும் பூஜை செய்ய வேண்டும். இதனால் நிதி நிலைமை சீராகி, கடன் பிரச்சனை தீரும்.
வெள்ளை சூடம்
செவ்வாய், வெள்ளியில் இரவு தூங்குவதற்கு முன்பு, 3 வெள்ளை சூடங்களில் வீட்டில் உள்ளவர்களுக்கு திருஷ்டி சுற்றி வீட்டின் முற்றத்தில் வைத்து ஏற்றினாலும், திருஷ்டி கழிந்துவிடும்.
அதுபோலவே 3 கற்பூரம் 5 கிராம்பு எடுத்து, நெருப்பிலிட்டு எரிக்க வேண்டும். காலை 6 மணிக்குள் அல்லது மாலை 6 மணிக்கு மேல் இதனை செய்தாலும் நிதி நிலைமை சீராகும்.
ஒரு கிண்ணத்தில் 5 கற்பூரம், 5 கிராம்பு, 5 ஏலக்காய் சேர்த்து எரித்து, அதிலிருந்து வரும் புகையை வீடு முழுக்க காட்டினாலும், திருஷ்டி விலகி, நேர்மறை ஆற்றல் வீட்டிற்குள் வரும். செவ்வாய், வெள்ளி ஆகிய 2 நாட்களிலும் சிறிது மஞ்சள் , செம்பு நீரில் கரைத்து, இந்த தண்ணீரை வீட்டை சுற்றி தெளித்து விடுவதால், கண்திருஷ்டி நீங்குவதுடன். செல்வத்தையும் ஈர்த்து கொண்டு வந்துவிடுமாம்.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications