For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சியாமளா நவராத்திரி..வசந்த பஞ்சமி..உங்க ஜாதகத்தில் சரஸ்வதி யோகமிருக்கா? பேசியே ஜெயிக்கலாம்

Google Oneindia Tamil News

மதுரை: சரஸ்வதி யோகம் பெற்றவர்களுக்கு சகல கலைகளையும் கற்று தேறக்கூடிய ஆற்றல் உண்டாகும். வாக்கு சாதுர்யமும், கற்பனை திறனும் உண்டாகும் என்பதால் கலைத்துறையில் பெரிய இடத்தை பிடிக்கும் வாய்ப்பு அமையும். பேசியே காரியம் சாதிப்பவர்கள் சரஸ்வதி யோகமும் பத்திர யோகமும் கொண்டவர்களாக இருப்பார்கள்.
நல்ல அறிவாற்றல், சிறப்பான ஞாபக சக்தி, புக்தி கூர்மை அனைத்தும் அமையும். சியாமளா நவராத்திரி கொண்டாடப்படும் இந்த நாளில் சரஸ்வதி யோகம் என்றால் என்ன அந்த யோகம் யாருக்கு அமையும் என்று பார்க்கலாம்.

 Shyamala Navratri 2023: Vasantha Panchami What is Saraswathi yogam and its benefits

நவராத்திரி என்றவுடன் பொதுவாகவே சாரதா நவராத்திரி என்று சொல்லப்படுகின்ற புரட்டாசி மாதத்தில் வரும் ஆயுத பூஜை, விஜயதசமி உடன் கூடிய நவராத்திரி மட்டுமே அனைவரின் நினைவுக்கும் வரும். நாடு முழுவதும் இந்த நவராத்திரி பண்டிகையை கோலாகலமாக கொலு வைத்து கொண்டாடுவார்கள். புரட்டாசி அமாவாசைக்குப் பிறகு சாரதா நவராத்திரி கொண்டாடப்படும். அதே போல தை மாதத்தில் அமாவாசைக்குப் பிறகு சியாமளா நவராத்திரி கொண்டாடப்படும்

ஒரு ஆண்டுக்கு 4 நவராத்திரிகள் உள்ளன. ஆஷாட நவராத்திரி என்பது வராகி தேவிக்கும் சாரதா நவராத்திரி துர்கா, லட்சுமி, சரஸ்வதிக்கும் கொண்டாடப்படும். சியாமளா நவராத்திரி என்பது இராஜ மாதங்கி தேவிக்கும், வசந்த நவராத்திரி என்பது லலிதா திரிபுரசுந்தரிக்கும் கொண்டாடப்படும்.

சியாமளா நவராத்திரி பண்டிகை நாளைய தினம் தொடங்குகிறது. இந்த காலத்தில் கொண்டாடப்படும் வசந்த பஞ்சமி சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த நாளில் அன்னை சரஸ்வதியை வணங்கினால் கல்வி செல்வம் வற்றாது கிடைக்கும். கோடி கோடியாக செல்வம் இருந்தாலும் கல்விச்செல்வம் இருந்தால் அதன் மதிப்பே தனிதான். அறிவால் எதையும் சாதிக்கலாம். பிறந்த ஜாதகத்தில் கிரகங்கள் எப்படி இருந்தால் கல்வி செல்வம் அதிகரிக்கும் யோகம் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

தை அமாவாசை நாளில் வானத்தில் உதித்த பவுர்ணமி..பட்டருக்கு காட்சி அளித்த திருக்கடையூர் அபிராமி தை அமாவாசை நாளில் வானத்தில் உதித்த பவுர்ணமி..பட்டருக்கு காட்சி அளித்த திருக்கடையூர் அபிராமி

வித்யாகாரகன்,கல்விகாரகன், அறிவுகாரகன் எனப் போற்றப்படும் புதன் பகவான் ஒருவர் ஜாதகத்தில் ஆட்சியோ, உச்சிமோ பெற்று ஜென்ம லக்னத்திற்கோ சந்திரனுக்கோ கேந்திர ஸ்தானங்களில் அமைந்திருந்தால் பத்திர யோகம் உண்டாகிறது. பத்திர யோகம் அமைந்துள்ள ஜாதகருக்கு நல்ல அறிவாற்றல், சிறப்பான ஞாபக சக்தி, புக்தி கூர்மை கிடைக்கும்.

ஒருவரது ஜாதகத்தில் சூரியனும், புதனும் இணைந்து அமையப் பெறுவது புதாதித்ய யோகம். இந்த யோகம் அமையப் பெற்றவர்களுக்கு கல்வியில் ஈடுபாடு, பல கலைகளை கற்றுத் தேறும் வாய்ப்பு, நல்ல அறிவாற்றல், பேச்சாற்றல், எழுத்தாற்றல் யாவும் உண்டாகும். அரசு வழியில் அனுகூலம், வியாபாரத்தில் அதிக ஈடுபாடு உண்டாகும். புதன் சூரியனுக்கு பின் அஸ்தங்கமாகாமல் ஏற்படும் புத ஆதித்ய யோகமே சிறந்த பலனளிக்கிறது. மேலும் சூரியனை கடந்து புதன் நிற்கும்போது அது சுபவெசி யோகமாகவும் ஆகிறது.

தனகாரகன் குரு களத்திரகாரகன் சுக்ரன் வித்யாகாரகன் புதன் ஆகிய மூவரும் லக்ன கேந்திரம், திரிகோணம் அல்லது இரண்டாமிடம் ஆகிய இடங்களில் இருந்தால் சரஸ்வதி யோகம் என பாரம்பரிய ஜோதிட நூல்கள் போற்றுகின்றன. இந்த யோகம் பெற்றவர்கள் ஆயகலைகள் 64ல் குறைந்தது 6,7 கலைகளிலாவது பாண்டித்தியம் பெற்று இருப்பார்கள்.

ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் சுக்கிரன், குரு, புதன் ஆகிய கிரகங்கள் கேந்திர திரிகோணத்திலோ அல்லது 2ம் வீட்டிலோ அமைந்து, குருபகவானும் ஆட்சி அல்லது உச்சம் பெற்றோ நட்பு வீட்டிலோ அமையப் பெற்றால், சரஸ்வதி யோகம் உண்டாகிறது. பெயரிலேயே சரஸ்வதி இருப்பதால் இந்த யோகத்தால் நல்ல கல்வியாற்றல் தேவைக்கேற்ற செல்வம், சமுதாயத்தில் ஓர் கௌரவமான நிலை யாவும் உண்டாகும்.

வித்யாகாரகன்,கல்விகாரகன், அறிவுகாரகன் எனப் போற்றப்படும் புதன் பகவான் ஒருவர் ஜாதகத்தில் ஆட்சியோ, உச்சமோ பெற்று ஜென்ம லக்னத்திற்கோ சந்திரனுக்கோ கேந்திர ஸ்தானங்களில் அமைந்திருந்தால் பத்திர யோகம் உண்டாகிறது. பத்திர யோகம் அமைந்துள்ள ஜாதகருக்கு நல்ல அறிவாற்றல், சிறப்பான ஞாபக சக்தி, புக்தி கூர்மை கிடைக்கும்.

பத்திர யோகம் அமையப்பெற்றவர்கள் தன்னுடைய பேச்சாற்றலால் அனைவரையும் கவர்ந்து விடுவார், கல்வி அறிவு மிகச் சிறப்பாக இருக்கும், கணிதத்தில் மேதையாக இருப்பார். பேச்சால், வாக்கால் முன்னேற்றம் ஏற்படும்.
வக்கீல் பணியில் திறமைசாலியாக இருப்பார். சமுதாயத்தில் மற்றவர்களால் மதிக்கப்படக்கூடிய அளவிற்கு உன்னதமான நிலை உண்டாகும். சகல கலைகளையும் கற்று தேறக்கூடிய ஆற்றல் உண்டாகும். வாக்கு சாதுர்யமும், கற்பனை திறனும் உண்டாகும் என்பதால் கலைத்துறையில் பெரிய இடத்தை பிடிக்கும் வாய்ப்பு அமையும்.

ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் சுக்கிரன், குரு, புதன் ஆகிய கிரகங்கள் கேந்திர திரிகோணத்திலோ அல்லது 2ம் வீட்டிலோ அமைந்து, குருபகவானும் ஆட்சி அல்லது உச்சம் பெற்றோ நட்பு வீட்டிலோ அமையப் பெற்றால், சரஸ்வதி யோகம் உண்டாகிறது. பெயரிலேயே சரஸ்வதி இருப்பதால் இந்த யோகத்தால் நல்ல கல்வியாற்றல் தேவைக்கேற்ற செல்வம், சமுதாயத்தில் ஓர் கௌரவமான நிலை யாவும் உண்டாகும்.

வித்யாகாரகன்,கல்விகாரகன், அறிவுகாரகன் எனப் போற்றப்படும் புதன் பகவான் ஒருவர் ஜாதகத்தில் ஆட்சியோ, உச்சமோ பெற்று ஜென்ம லக்னத்திற்கோ சந்திரனுக்கோ கேந்திர ஸ்தானங்களில் அமைந்திருந்தால் பத்திர யோகம் உண்டாகிறது. பத்திர யோகம் அமைந்துள்ள ஜாதகருக்கு நல்ல அறிவாற்றல், சிறப்பான ஞாபக சக்தி, புக்தி கூர்மை யாவும் அமையும். பத்திர யோகம் உள்ளவர்கள் கற்றவர்களின் சபையில் ஒரு முக்கியமான பங்கு வகிப்பவராக இருப்பார். பலருக்கு ஆலோசனை வழங்கும் திறன் இருக்கும்.

English summary
Shyamala Navratri festival 2023: Saraswathi yogam Here you will find information about the rare Saraswati Yoga and its benefits. The Shyamala Navratri festival of the month of Thai, when Saraswati Puja will celebrate on January 26h 2023 worshipers of Mother Saraswati get education, wisdom and prosperity and success.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X