Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தேங்காய் அழுகி இருந்தால் அபசகுனமா? பூஜைக்கு உடைக்கும் தேங்காய் கெட்டு போயிருச்சா? அப்ப இதை பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேங்காய் பூஜையில் வைக்கும்போது எப்படி இருக்க வேண்டும் தெரியுமா? பூஜைக்கு உடைக்கப்படும் தேங்காய் அழுகியிருந்தால் அபசகுனமா??

தேங்காயை பொறுத்தவரை, ஆன்மீகத்தில் மிக முக்கியமான இடத்தை பெற்று வருகிறது.. எந்த ஒரு நல்ல காரியம் என்றாலும், அதை மனதில் நினைத்துக் கொண்டு, தேங்காய் உடைத்தால் நன்மை கிட்டும் என்று நம்பப்படுகிறது.

அதேபோல் தீபாவளி, பொங்கல், அமாவாசை, போன்ற விரத நாட்களிலும் தேங்காய் உடைத்து பூஜை செய்து வழிபடுவது வழக்கமாக இருந்து வருகிறது.. தேங்காய்கள் மங்களகரமான பொருளாக வழிபாடுகளில் இடம்பெறுவதற்கு காரணம், தேங்காயில் உள்ள 3 கண்களில், ஒரு கண் பிரம்மாவாகவும், 2வது கண் லட்சுமியாகவும், 3வது கண் சிவனாகவும் பார்க்கப்படுகிறது..

Spirituality Coconut

3 கண்கள்: இப்படி 3 தெய்வத்துக்கும் அர்ப்பணிக்கப்படுவதால், தேங்காய்களை வைத்து பூஜிக்கும்போது, அவைகள் நல்லவிதமாக இருக்க வேண்டும் என்பதே விருப்பமாகும்.

ஆனால், சிலசமயங்களில் தேங்காயை உடைக்கும்போது அது அழுகிவிடக்கூடும். இதைப்பார்த்து பலரும் கலங்கிப்போய்விடுவார்கள். கெட்டுப்போன தேங்காய்கள் பூஜையில் இருப்பது, கெட்ட சகுனமாகவும் சிலர் அச்சம் கொள்வார்கள். தேங்காய் அழுகி இருந்தால் வீட்டிலுள்ளவர்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படும் என்றும் கலங்குகிறார்கள்.

கோவிலில் சாமிக்கு படைக்கும் தேங்காய் மட்டும் அழுகக்கூடாது என்பார்களே தவிர, அது அபசகுனம் கிடையாது. அழுகிய அனைத்து தேங்காயும் காரிய சித்தி ஆவதன் அறிகுறி என்கிறார்கள்.

கண் திருஷ்டி: அதாவது, உடைக்கப்பட்ட அழுகிய தேங்காய் மூலம், நமக்கு வரும் தீய சக்திகள், கண்திருஷ்டிகள் போன்றவை விலகிவிடுமாம். சரீர பீடை, கண்திருஷ்டி, ரோகம், துர் சொப்பனங்கள் போன்றவை அனைத்துமே உங்களைவிட்டு விலக போகிறது என்பதையே அழுகிய தேங்காய் மூலம் உணர்த்தும் அறிகுறியாகும்.

நீங்கள் எந்த காரியத்தை நினைத்து தேங்காய் உடைத்தீர்களோ அந்த காரியம் சித்தியடையும் என்றே இதன் அர்த்தமாகும்.. அடிக்கடி உடல் சரியில்லாமல் போவது, கெட்ட கனவுகள் வருவது இவையெல்லாம்கூட உடனே நீங்கிவிடும்.. எனவே, தெய்வத்திற்கு படைக்க இருந்த தேங்காய் அழுகி இருந்தால், நீங்கள் சந்தோஷப்படவேண்டுமே தவிர, கவலைப்படக்கூடாது என்கிறார்கள்.

சஞ்சலம்: ஒருவேளை, தெய்வத்துக்கு உடைக்கும் தேங்காய் அழுகியிருந்து, உங்கள் மனம் சஞ்சலப்பட்டுக் கொண்டேயிருந்தால், அன்றைய தினமே 5 அல்லது 7 நபருக்கு அன்னதானம் செய்துவிட்டு, மீண்டும் அதே காரியத்தை நினைத்து இன்னொரு தேங்காயை வாங்கி உடைத்து விட்டால் போதும்.. நீங்கள் நினைத்த காரியம் நல்லபடியாக நிறைவேறும்.

அதுவும் நீங்கள் உடைக்கும் தேங்காய் கொப்பரையாக இருந்தால் வீட்டில் சுபகாரியம் நடக்கும்.. அதேபோல, பூஜையில் உடைக்கப்பட்ட தேங்காயில் பூ இருந்தால், வீட்டிற்குள் தனலாபமும், மகிழ்ச்சியான விஷயங்களும் வந்து சேரும் என்று நம்பப்படுகிறது.

இதுதான் நேரம்: அதேபோல எந்த நேரத்தில் தேங்காய் உடைத்தால் என்ன பலன் கிடைக்கும் என்றும் சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.. காலை வேளையில் தேங்காய் உடைத்தால் நினைத்த காரியம் 10 நாட்களில் நடக்குமாம்..

மதிய வேளையில் தேங்காய் உடைத்தால் உங்களுக்கான பலன்கள் ஒரு மாதத்திற்குள் நடக்கும்.. அதேபோல, இரவு நேரங்களில் தேங்காய் உடைத்தால் 6 மாதத்திற்குள் அந்த பலன்கள் உங்களை வந்தடையும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+