தேங்காய் அழுகி இருந்தால் அபசகுனமா? பூஜைக்கு உடைக்கும் தேங்காய் கெட்டு போயிருச்சா? அப்ப இதை பாருங்க
சென்னை: தேங்காய் பூஜையில் வைக்கும்போது எப்படி இருக்க வேண்டும் தெரியுமா? பூஜைக்கு உடைக்கப்படும் தேங்காய் அழுகியிருந்தால் அபசகுனமா??
தேங்காயை பொறுத்தவரை, ஆன்மீகத்தில் மிக முக்கியமான இடத்தை பெற்று வருகிறது.. எந்த ஒரு நல்ல காரியம் என்றாலும், அதை மனதில் நினைத்துக் கொண்டு, தேங்காய் உடைத்தால் நன்மை கிட்டும் என்று நம்பப்படுகிறது.
அதேபோல் தீபாவளி, பொங்கல், அமாவாசை, போன்ற விரத நாட்களிலும் தேங்காய் உடைத்து பூஜை செய்து வழிபடுவது வழக்கமாக இருந்து வருகிறது.. தேங்காய்கள் மங்களகரமான பொருளாக வழிபாடுகளில் இடம்பெறுவதற்கு காரணம், தேங்காயில் உள்ள 3 கண்களில், ஒரு கண் பிரம்மாவாகவும், 2வது கண் லட்சுமியாகவும், 3வது கண் சிவனாகவும் பார்க்கப்படுகிறது..

3 கண்கள்: இப்படி 3 தெய்வத்துக்கும் அர்ப்பணிக்கப்படுவதால், தேங்காய்களை வைத்து பூஜிக்கும்போது, அவைகள் நல்லவிதமாக இருக்க வேண்டும் என்பதே விருப்பமாகும்.
ஆனால், சிலசமயங்களில் தேங்காயை உடைக்கும்போது அது அழுகிவிடக்கூடும். இதைப்பார்த்து பலரும் கலங்கிப்போய்விடுவார்கள். கெட்டுப்போன தேங்காய்கள் பூஜையில் இருப்பது, கெட்ட சகுனமாகவும் சிலர் அச்சம் கொள்வார்கள். தேங்காய் அழுகி இருந்தால் வீட்டிலுள்ளவர்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படும் என்றும் கலங்குகிறார்கள்.
கோவிலில் சாமிக்கு படைக்கும் தேங்காய் மட்டும் அழுகக்கூடாது என்பார்களே தவிர, அது அபசகுனம் கிடையாது. அழுகிய அனைத்து தேங்காயும் காரிய சித்தி ஆவதன் அறிகுறி என்கிறார்கள்.
கண் திருஷ்டி: அதாவது, உடைக்கப்பட்ட அழுகிய தேங்காய் மூலம், நமக்கு வரும் தீய சக்திகள், கண்திருஷ்டிகள் போன்றவை விலகிவிடுமாம். சரீர பீடை, கண்திருஷ்டி, ரோகம், துர் சொப்பனங்கள் போன்றவை அனைத்துமே உங்களைவிட்டு விலக போகிறது என்பதையே அழுகிய தேங்காய் மூலம் உணர்த்தும் அறிகுறியாகும்.
நீங்கள் எந்த காரியத்தை நினைத்து தேங்காய் உடைத்தீர்களோ அந்த காரியம் சித்தியடையும் என்றே இதன் அர்த்தமாகும்.. அடிக்கடி உடல் சரியில்லாமல் போவது, கெட்ட கனவுகள் வருவது இவையெல்லாம்கூட உடனே நீங்கிவிடும்.. எனவே, தெய்வத்திற்கு படைக்க இருந்த தேங்காய் அழுகி இருந்தால், நீங்கள் சந்தோஷப்படவேண்டுமே தவிர, கவலைப்படக்கூடாது என்கிறார்கள்.
சஞ்சலம்: ஒருவேளை, தெய்வத்துக்கு உடைக்கும் தேங்காய் அழுகியிருந்து, உங்கள் மனம் சஞ்சலப்பட்டுக் கொண்டேயிருந்தால், அன்றைய தினமே 5 அல்லது 7 நபருக்கு அன்னதானம் செய்துவிட்டு, மீண்டும் அதே காரியத்தை நினைத்து இன்னொரு தேங்காயை வாங்கி உடைத்து விட்டால் போதும்.. நீங்கள் நினைத்த காரியம் நல்லபடியாக நிறைவேறும்.
அதுவும் நீங்கள் உடைக்கும் தேங்காய் கொப்பரையாக இருந்தால் வீட்டில் சுபகாரியம் நடக்கும்.. அதேபோல, பூஜையில் உடைக்கப்பட்ட தேங்காயில் பூ இருந்தால், வீட்டிற்குள் தனலாபமும், மகிழ்ச்சியான விஷயங்களும் வந்து சேரும் என்று நம்பப்படுகிறது.
இதுதான் நேரம்: அதேபோல எந்த நேரத்தில் தேங்காய் உடைத்தால் என்ன பலன் கிடைக்கும் என்றும் சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.. காலை வேளையில் தேங்காய் உடைத்தால் நினைத்த காரியம் 10 நாட்களில் நடக்குமாம்..
மதிய வேளையில் தேங்காய் உடைத்தால் உங்களுக்கான பலன்கள் ஒரு மாதத்திற்குள் நடக்கும்.. அதேபோல, இரவு நேரங்களில் தேங்காய் உடைத்தால் 6 மாதத்திற்குள் அந்த பலன்கள் உங்களை வந்தடையும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications