பல வருட காத்திருப்பு ஓவர்.. இதோ வருகிறது BSNL 4ஜி சேவை.. செம ஃபாஸ்ட்டாம்.. விட்ட இடத்தை பிடிக்குமா?
சென்னை: தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 15ஆம் தேதிக்குள் 4ஜி நெட்வொர்க் சேவை துவக்கப்படும் என பி.எஸ்.என்.எல் தலைமை பொது மேலாளர் தமிழ்மணி தெரிவித்துள்ளார். ஒருகாலத்தில் தனியாருக்கு செம போட்டியாக இருந்த பி.எஸ்.என்.எல். 4ஜி சேவையை அறிமுகம் செய்வதன் மூலம் மீண்டும் முன்னணிக்கு வருமா?
இந்திய அரசின் தொலைத்தொடர்பு பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல், கடந்த சில ஆண்டுகளாக இந்திய டெலிகாம் சந்தையில் தனியார் நிறுவனங்களுடன் போட்டி போட முடியாமல் மிகவும் திணறி வருகிறது. இதன் காரணமாக பி.எஸ்.என்.எல் கடுமையான வருவாய் இழப்பு, சந்தாதாரர்கள் எண்ணிக்கை சரிவு ஆகிய பிரச்சனைகளைச் சந்தித்து வருகிறது. பி.எஸ்.என்.எல் நிறுவனம் தமது ஊழியர்களுக்கே சம்பளம் போட முடியாத நிலைக்கும் சென்றது.

ஒரு காலத்தில் இலவச இன்கமிங் மற்றும் இலவச ரோமிங் என கவர்ச்சிகரமான வசதிகளை பி.எஸ்.என்.எல்தான் அறிமுகம் செய்தது. அதன் மூலம் தொலைத்தொடர்பு சேவை கட்டணங்கள் மிகவும் மலிதாக மாறின. ஆனால், பின்னாட்களில் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, மத்திய அரசின் நிறுவனமான பி.எஸ்.என்.எல் பின்னுக்குத் தள்ளப்பட்டது.
ஜியோ உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் 5ஜி வேகத்தில் சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கும் நிலையில் இன்னும் பி.எஸ்.என்.எல் நெட்வொர்க்கில் 4ஜி இணைய சேவையே வழங்கப்படவில்லை. 2020 காலகட்டத்திலேயே பி.எஸ்.என்.எல் 4ஜி சேவைகள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பி.எஸ்.என்.எல் நிறுவனத்துக்கான 4ஜி டெண்டர்களை மத்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ரத்து செய்தது.
பின்னர் மீண்டும், 4ஜி கொண்டு வருவதில் கவனம் செலுத்தியது பி.எஸ்.என்.எல் நிறுவனம். அதன்படி நாடு முழுவதும் பி.எஸ்.என்.எல். டவர்களை 4ஜி நெட்வொர்க் அளிக்கும் வகையில் கருவிகளை பொருத்தி நவீனமாக்கும் நடவடிக்கைகள் கடந்த 2 ஆண்டுகளாக செய்யப்பட்டு வந்தன. இந்நிலையில், அடுத்த மாதம் முதல் தமிழ்நாட்டில் 4ஜி சேவையை கொண்டு வருகிறது பி.எஸ்.என்.எல்.
இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் பி.எஸ்.என்.எல் தலைமை பொது மேலாளர் தமிழ்மணி கூறுகையில், “தமிழகத்தில், 6,000 பி.எஸ்.என்.எல் தகவல் தொடர்பு டவர்கள் உள்ளன. இவை, 3ஜி சேவையில் இருந்து 4ஜி நெட்வொர்க் சேவைக்கு மாற்றப்பட உள்ளன.
முன்னணி தனியார் தகவல் தொடர்பு நிறுவனங்கள் உள்ளிட்ட வேறு எந்த நிறுவனமும் இதுவரை தகவல் தொடர்பு வசதி ஏற்படுத்தாத, 203 கிராமப் பகுதிகளை தேர்வு செய்து, 200 இடங்களில் பி.எஸ்.என்.எல் டவர்களை அமைத்துள்ளோம்.
புதிய தொழில்நுட்ப கருவி பொருத்தியதும், தமிழகத்தில் 4,65,000 பி.எஸ்.என்.எல் இணைப்புகள் 4ஜி சேவையில் பயன்பெறும். ஏப்ரல் 15ஆம் தேதிக்குள் 4ஜி நெட்வொர்க் சேவை துவங்கப்படும். தனியாரின் 5ஜியும், பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் 4ஜியும் சமமானது தான். இரண்டுக்கும் பெரிய வேறுபாடு இல்லை. பொதுமக்கள் தற்போதைய 3ஜி சிம்முக்கு பதிலாக பி.எஸ்.என்.எல் சேவை மையத்தில் 4ஜி சிம் இலவசமாக பெற்று பயன்பெறலாம்” எனத் தெரிவித்துள்ளார்.
நீண்ட காத்திருப்புக்குப் பிறகு ஒருவழியாக விரைவில் பி.எஸ்.என்.எல் நிறுவனம் 4ஜி சேவையை அறிமுகப்படுத்த உள்ளது. இதன் மூலம், இழந்த வாடிக்கையாளர்களை மீண்டும் கவருமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. பி.எஸ்.என்.எல் 4ஜி சேவை எப்படி செயல்படப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு!












Click it and Unblock the Notifications