தமிழ்நாட்ல பெரியார் இருந்தார்.. நீயா நானாவில் கேரள நடிகையை வாயடைக்க வைத்த கரு பழனியப்பன் -FLASH BACK
சென்னை: தந்தை பெரியாரின் 50 வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு கடந்த 2017 ஆம் ஆண்டு இயக்குநர் கரு பழனியப்பன் நீயா நானா நிகழ்வில் பெரியார் குறித்து பேசிய காணொலி தற்போது அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. அப்படி அவர் என்ன பேசினார்? விரிவாக பார்ப்போம்.
தந்தை பெரியாரின் நினைவு நாளான இன்று அவரது சிந்தனைகளையும், செயல்பாடுகளையும் மக்கள் பகிர்ந்து வரும் நிலையில், அவர் பற்றி நீயா நானா நிகழ்வில் இயக்குநர் கரு பழனியப்பன் பேசிய உரை அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. 2017 ஆம் ஆண்டு விஜய் டிவியின் நீயா நானாவில் சாதி தொடர்பான விவாதத்தில் சிறப்பு விருந்தினர்களாக மலையாள நடிகை பார்வதி நாயரும், இயக்குநர் கரு பழனியப்பனும் பங்கேற்று இருப்பார்கள். அப்போது பார்வதி நாயர், தனது பெயருக்கு பின்னால் சாதி பெயரை விரும்பி போட்டு இருப்பதாக தெரிவித்தார்.

அப்போது நெறியாளர் கோபிநாத், "கேரளா கல்வியில் சிறந்த மாநிலமாகவும், கம்யூனிசம் வேறூன்றி இருக்கும் இடமாகவும் இருக்கிறது. தமிழ்நாட்டில் படித்த மக்களே முதலில் சாதி பெயரை போட மறுத்தார்கள். அங்கும் முற்போக்கு கருத்துக்கள் இருப்பதாகவே காட்டப்படுகிறது. ஆனால், அந்த மாற்றம் அங்கு ஏன் நடக்கவில்லை?" என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த பார்வதி நாயர், "அங்கே அவ்வளவு முற்போக்கு இல்லை. கேரள மக்கள் அந்த அளவுக்கு வரவில்லை. அவர்கள் சில விசயங்களில் பழமைவாதத்தில் உள்ளனர். சாதி அமைப்பு மக்களை பிரித்து பார்ப்பதற்காக இல்லை. அவர்களின் தொழில் சார்ந்து உருவானதுதான். எல்லா சாதிக்கும் சமமான மரியாதை உள்ளது." என்றார்.
அப்போது பேசிய கரு பழனியப்பன், "தொழில் சார்ந்து சாதியால் பிரிக்கப்பட்டார்கள் என்கிறார். ஆசிரியராக, விவசாயியாக இருந்தார்கள் என்கிறார். சரி, என்னை மாதிரி கழிப்பிடம் கழுவுபவன் எங்கிருந்தான். உங்கள் வீட்டு கக்கூஸ் கழுவுறவன் எங்கிருந்தான்? அவனுக்கு ஒரு தொழில் வைத்து இருந்தீர்கள் அல்லவா? அவனை அதே தொழிலை செய்ய வைத்தீர்கள் அல்லவா.. அவன் தன் பெயருக்கு பின்னால் என்ன சாதியை போட்டுக்கொள்வான். அங்குதான் பிரச்சனை?
புத்திசாலியாக இல்லாத ஆணை ஒரு பெண் காதலிக்கப்போவது இல்லை, அறிவாளியாக இருக்க வேண்டும் என்று நீங்கள் சொல்வது சரி. இவ்வளவு கருத்து வைத்திருக்கும் பார்வதி நாயர் ஏன் சாதியை தன் பின்னால் வைத்திருக்கிறீர்கள்? விட்டுவிடலாமே என்று அவர் கேட்கிறார்." என்றவுடன் நாயர் என்பது என்னுடைய பெயர் என பார்வதி நாயர் சொல்வார். உடனே கரு பழனியப்பன், "உங்கள் அப்பா வேணுகோபால் பெயருக்கு பின்னால் நாயர் இல்லையே. எனக்கு அப்படி சாதி பெயர் போட வெட்கமாக உள்ளது.
நீங்கள் இவ்வளவு நேரமாக கேட்டீர்கள், கேரளாவில் இவ்வளவு விசயம் இருந்தும் சாதி பெயர் போடுகிறார்களே! இங்கு அது இல்லையே என்று... ஒரேயொரு வித்தியாசம்தான். இங்கு பெரியார் இருந்தார். அங்கு பெரியார் இல்லை. எல்லா மாநிலங்களையும் எடுத்துக்கொள்ளுங்கள், தமிழ்நாட்டில் மட்டும்தான் 60 ஆண்டுகளாக பெயருக்கு பின்னால் சாதி பெயரை போட்டுக் கொள்வதற்கே வெட்கப்பட்டார்கள்." என்றார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications