மருத்துவமனையில் இருக்கும் சாருஹாசன்.. சுஹாசினி செய்த செயல்.. ஆறுதல் கூறும் ரசிகர்கள்
சென்னை: நடிகர் கமல்ஹாசனின் அண்ணன் ஆன சாருஹாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அவருடைய மகள் சுஹாசினி அவர் குறித்து சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். இது இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது. அது பற்றி பார்க்கலாம்.
நடிகர் சாருஹாசன், சந்திரஹாசன், கமல்ஹாசன் மூவருமே அண்ணன் தம்பிகள் தான். மூவரும் சினிமாவில் பல ஆண்டுகளாக தங்களுடைய திறமைகளை காட்டிக்கொண்டிருக்கின்றனர். அதிலும் கமல்ஹாசனை சிறுவயதிலிருந்தே சாருஹாசனும் அவருடைய மனைவியும் தான் வளர்த்து வந்தார்கள் என்று பல பேட்டிகளில் கமல்ஹாசன் கூறி இருக்கிறார்.

கமல்ஹாசன் அவருடைய அம்மாவின் வயிற்றில் இருக்கும் போது தான் சாருஹாசனுக்கு திருமணம் முடிந்ததாம். கமல்ஹாசன் பிறந்த பிறகு சாருஹாசனின் மனைவி கமல்ஹாசனை வளர்த்து வந்ததால் அவரை கமல்ஹாசன் அம்மா என்று தான் கூப்பிடுவாராம். தன்னுடைய அண்ணனை அப்பா என்று கூப்பிடுவாராம். இது பற்றி கமல்ஹாசன் மட்டுமல்ல சாருஹாசனின் மனைவியும் கூறியிருக்கிறார்.
இந்த நிலையில் சாருஹாசன் வெள்ளித்திரை சின்னத்திரை என்று நடித்து இருந்தாலும் ஒரு வழக்கறிஞராகவும் இருந்திருக்கிறார். ஆரம்பத்தில் கமல்ஹாசன் அதிகமாக நடித்துக் கொண்டிருக்கும் போது அவருடைய திரைப்படங்கள் கால் சீட் ஷெட்யூல் போன்ற விஷயங்களை எல்லாம் சாருஹாசன் தான் கவனித்து இருக்கிறார். சமீபத்தில் சாருக்ஹாசன் சினிமாவை விட்டு விலகி இருக்கும் நிலையில் திடீரென்று உடல்நிலை பாதிக்கப்பட்டு இருக்கிறது.

96 வயதாகும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அப்போது சாருஹாசனின் மகளான சுஹாசினி அவரை மருத்துவமனையில் சென்று பார்த்து தன்னுடைய தந்தையை கட்டி அணைத்தபடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அதில் "விடுமுறையா அல்லது என் தந்தைக்கு மருத்துவமனை தங்கும் இடம் என்கிறார்களா? அவர் நன்றாக குணமடைந்து வருகிறார். மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மகள்களின் அன்புடனும் அக்கறையுடனும் அவர் நன்றாக இருக்கிறார் என்று சுஹாசினி பதிவு வெளியிட்டிருக்கிறார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சாருஹாசன் அங்கு புத்தகம் ஒன்றை படித்துவிட்டு தன் பக்கத்திலேயே வைத்திருக்கிறார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் அதிகமாக வைரலாகி வருகிறது. இதற்கு நடிகை ராதிகா சரத்குமார், "ஹாசினி உன்னுடைய அப்பா அன்பான மனிதர். அவரை கவனித்துக் கொள்" என்று கமெண்ட் கொடுத்து இருக்கிறார். அவரை தொடர்ந்து சீரியல் நடிகை சத்யபிரியா, "விரைவில் குணமடையுங்கள் சாரு அண்ணா" என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
அதுபோல நடிகை கனிகா, " நாம் அவருக்காக பிரார்த்தனை செய்து கொள்வோம்" என்று கூறியிருக்கிறார். குஷ்பூ ஹார்ட்டின் சிம்பளை அனுப்பி இருக்கிறார். இப்படியாக பல பிரபலங்களும் அவருடைய உடல்நிலை சரியாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று வேண்டுகோள் வைத்து வருகிறார்கள். அதோடு அவர் மீண்டும் பழைய நிலைமைக்கு வலிமையுடன் திரும்பி வரவேண்டும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
-
நீயா நானாவில் யாமினி சொன்ன காதல் கதை.. கண்கலங்கி நின்ற கோபி நாத்.. கடைசியில் சொன்ன ‘நச்’ அட்வைஸ் -
திவாகருக்குள் தான் ஜாதி வெறி இருக்கு.. குக் வித் கோமாளியில் நடந்தது இதுதான்! கானா வினோத் ஆதங்கம் -
“குக் வித் கோமாளி” போட்டியாளர் மனைவியிடம் திவாகர் ஆபாசமாக அப்படி பேசினாரு! அதனால் தான் பிரச்சனை! மாகாபா விளக்கம் -
சிறகடிக்க ஆசை: மனோஜ்க்கு நடந்த நிச்சயதார்த்தம்.. விஜயாவை சிக்க வைத்த ஸ்ருதி.. முத்துக்கு தெரிந்த விஷயம் -
சித்திரை திருநாளில் கிடைத்த பரிசு.. இரண்டு வருடம் கழித்து பிறந்த குழந்தை.. பிரதீப் ஆண்டனி நெகிழ்ச்சி பதிவு -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை!












Click it and Unblock the Notifications