Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மறைந்த சித்ரா பற்றி பல ரகசியத்தை உடைத்த நடிகர்..10 வருட லவ்..! போட்டோ கூட இருக்காம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லையாக நடித்து வந்த சித்ரா சில வருடங்களுக்கு முன்பு திடீர் மரணம் அடைந்திருந்தார்.

விஜே சித்ரா இறப்பு இப்ப வரைக்கும் புரியாத புதிராக தான் இருக்கிறது.

இந்த நிலையில் அவரைப் பற்றி நடிகர் திலீபன் புகழேந்தி பல தகவல்களை பகிர்ந்து இருக்கிறார்.

Actor Dileepan Pugahendi has shared a lot of information about VJ Chitra

விஜே சித்ரா விஜய் டிவியில் ஒளிபரப்பான பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர் சீரியல் மூலமாக பெரிய அளவில் பிரபலம் அடைந்திருந்தார். முல்லை என்ற கேரக்டரில் ரசிகர்களின் மத்தியில் தனி இடத்தையும் பிடித்திருந்தார். இந்த நிலையில்தான் அவருடைய திடீர் மரணம் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்து இருந்தது.

இந்த நிலையில் சித்ரா இறந்து சில வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும் அவர் எப்படி இறந்தார்? எதனால் இறந்தார்? என்று யாருக்கும் தெரியாமல் தான் மூடி மறைக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் நடிகர் திலீபன் அதாவது நெஞ்சில் துணிவிருந்தால், பள்ளிக்கூட போகலாமே, எவன் போன்ற படங்களில் நடித்த நடிகர் தான் சித்ரா பற்றி சமீபத்தில் பேட்டியில் பேசியிருக்கிறார்.

அவர் பேசுகையில் சித்ராவும் நானும் ஏழு வருட நட்பாக இருந்தோம். இருவரும் சேர்ந்து நிறைய புகைப்படங்களை எடுத்து இருக்கிறோம். ஆனால் அந்த புகைப்படங்களை எப்போதும் நான் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டது கிடையாது. காரணம் சித்ராவை வைத்து நான் புகழ் தேட வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. அதனால் தான் அது மாதிரி ஒரு வேலையை நான் செய்யவில்லை என்று கூறி இருக்கிறார்.

அதோடு ஒரு பெண்ணை கிட்டத்தட்ட பத்து வருடமாக காதலித்திருக்கிறாராம். இருவரும் உயிருக்குயிராக காதலித்தார்களாம். ஆனால் திலீபன் அந்த பெண்ணை காதலிக்கும் போது பிற பெண்களோடு டேட்டிங்கெல்லாம் போயிருக்காராம். இது அந்த பெண்ணுக்கு தெரிஞ்சு திலீபனை விட்டு அந்தப் பெண் பிரிந்து விட்டாராம். இந்த தப்பு ஒரு தடவை இல்லையாம். பலமுறை நடந்து இருக்காம். அப்ப எல்லாம் அந்த பெண் அவரை மன்னித்து ஏற்றுக் கொண்டிருக்கிறாராம்.

இப்ப இதை பத்தி எதுக்கு நான் பேசுறேனா அந்த பொண்ணு கிட்ட நான் மன்னிப்பு கேட்க தயாராக இல்ல. அந்த பொண்ணு எங்க இருந்தாலும் நல்லா இருக்கட்டும் என்று கூறியிருக்கிறார். அதோடு பிக் பாஸ் ஐந்தாவது சீசனில் கலந்து கொள்வதற்காக இவருக்கு வாய்ப்பு கிடைத்ததாம். ஆனால் அந்த நேரத்தில் அவரால் கலந்து கொள்ள முடியாமல் ஆகிவிட்டதாம்.

அதுபோல ஆறாவது சீசனிலும் நான் கலந்து கொள்ள முடியவில்லை. ஆனா கண்டிப்பா ஏழாவது சீசனில் நானும் உள்ளே வருவேன் என்றும் பிக் பாஸ் ப்ரோமோக்களில் எல்லாம் நான் கண்டிப்பா இடம் பிடித்து விடுவேன் அந்த அளவிற்கு பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக நான் நிறைய பயிற்சிகள் செய்துக்கிட்டு இருக்கின்றேன் என்று பேசியிருக்கிறார். அதோடு இந்த திலீபன் புகழேந்தி வேறு யாரும் இல்லை கவிஞர் புலமைப்பித்தனின் பேரன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+