கூட்டத்திலிருந்து ஒலித்த,' ரம்மி நாயகன்’.. கடுப்பாகி சரத்குமார் செய்த செயல்.. குவியும் கருத்துக்கள்
சென்னை: பொன்னியின் செல்வன் 2 இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சரத்குமார் கலந்து கொண்டுள்ளார்.
நடிகர் சரத்குமார் மாஸாக என்ட்ரியாகும் போது கூட்டத்தில் இருந்த ஒரு நபர் "ரம்மி நாயகன்" என்று கத்தி இருக்கிறார்.
இதை சற்றும் எதிர்பார்க்காத நடிகர் சரத்குமார் ஒரு நிமிடம் முகம் மாறி திணறி இருக்கிறார்.

ஆன்லைன் சூதாட்டம்
நீண்ட காலமாக ஆன்லைன் ரம்மி சூதாட்டம் விளையாட்டு பலருடைய வாழ்க்கையை சூறையாடி கொண்டு வருகிறது. இந்த விளையாட்டின் மூலம் பலர் பணத்தை இழந்து தற்கொலை செய்து இருக்கிறார்கள். இதனால் இந்த விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினர்களும் தொடர்ந்து வற்புறுத்தி வருகின்றனர். ஆனால் இந்த விளம்பரங்களில் பிரபல நடிகர்கள்தான் நடித்து மக்கள் மத்தியில் இந்த விளையாட்டை வைரலாக்கி பிரபலப்படுத்தி வருகிறார்கள்.

அவசர சட்டம்
இது குறித்து சமூக வலைதளத்திலும் பல சர்ச்சைகள் எழுந்த வண்ணம் இருக்கிறது. ரம்மி உட்பட்ட ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளால் தமிழகத்தில் அதிக அளவில் தற்கொலை சம்பவங்கள் நடைபெறுவதை கருத்தில் கொண்டு இந்த வகை விளையாட்டுகளை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும் என்று தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக அக்டோபர் ஒன்றாம் தேதி அரசால் அவசர சட்டம் கொண்டுவரப்பட்டது.

ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைப்பு
அதுமட்டுமல்லாமல் இந்த சட்டத்திற்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளித்ததால் அக்டோபர் மூன்றாம் தேதி அரசு இதழில் வெளியிடப்பட்டது. அதன்படி சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்களுக்கு மூன்று மாதங்கள் வரை சிறை தண்டனையும் 5000 ரூபாய் அபராதமும் அல்லது இரண்டும் சேர்ந்து தண்டனை விதிக்கப்படும் என்று அந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யும் சட்ட மசோதா பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

காலாவதியான சட்டம்
ஆனால் நீண்ட காலமாக அந்த மசோதா கிடப்பிலிருந்த நிலையில் ஆளுநர் என்.ஆர். ரவி ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலதாமதம் செய்ததால் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த தடை சட்டம் மசோதா காலாவதி ஆகிவிட்டது. ஆனாலும் இந்த விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்து வருகிறார்கள். இந்த விளம்பரத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகளையும் விமர்சித்து சமூக வலைத்தளத்தில் அதிகமாக கலாய்த்து வருகிறார்கள்.

எதிர்பாராத நிகழ்வு
அந்த வகையில் ரம்மி விளம்பரத்தில் நடித்த நடிகர் சரத்குமாரை அடிக்கடி கலாய்த்து வருவது வழக்கம் தான். அதுமட்டுமல்லாமல் சமூக வலைதளத்தில் அவருக்கு ரம்மி நாயகன் என்ற பெயரையும் வைத்து ட்ரோல் செய்து வருகின்றனர். இந்த நிலையில் பொன்னியின் செல்வன் 2 படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் சரத்குமார் கலந்து கொண்டிருந்தார். அந்த விழாவிற்கு சரத்குமார் சந்தோஷமாக மேடையில் ஏறும்போது கூட்டத்தில் இருந்த ஒரு நபர் ரம்மி நாயகன் என்று கத்தி இருக்கிறார். இதை கேட்ட சரத்குமாரின் முகம் மாறி இருக்கிறது. அதை குறித்து சமூக வலைதளத்தில் நெட்டிசன்கள் அதிகமான கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங்












Click it and Unblock the Notifications