நடிப்பை விட்டு விலகியது இதனால்தான்! அந்த மேடையில் நடந்த நிகழ்வு! வெண்ணிற ஆடை மூர்த்தி எமோஷனல்
சென்னை: பழம்பெரும் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி பல திரைப்படங்களிலும் சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் நடித்திருக்கிறார். ஆனால் சமீப காலமாக அவர் எந்த திரைப்படங்களிலும் நடிப்பதில்லை. அது குறித்து சமீபத்தில் சாய் வித் சித்ரா என்ற நிகழ்ச்சியில் நடிகர் லட்சுமணனுடன் பேசி இருக்கிறார்.
அதே நேரத்தில் தான் கடைசியாக நடித்த திரைப்படத்தில் கிடைத்த அனுபவங்கள் குறித்தும் வெளிப்படையாக வெண்ணிற ஆடை மூர்த்தி பேசியிருக்கிறார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் இப்போது உள்ள காலகட்டத்தில் முன்னணியில் இருக்கும் நடிகர்கள் கூட ஒரு சில திரைப்படங்கள் வெற்றி பெறாமல் போய்விட்டாலே பிறகு பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்காமல், இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய்விடுகிறார்கள். ஆனால் தமிழ் சினிமாவில் ஏறக்குறைய மூன்று தலைமுறைக்கு மேலாக பல முன்னணி நடிகர்களோடு நடித்ததோடு திரையுலகில் தனக்கொரு அடையாளத்தையும் ரசிகர்களையும் கவர்ந்து வைத்திருப்பவர்தான் வெண்ணிற ஆடை மூர்த்தி.
இவர் சினிமாவில் மட்டுமல்லாமல் சீரியல்கள் மூலமாகவும் ரசிகர்களை என்டர்டைன்மென்ட் செய்து இருக்கிறார். எம்ஜிஆர், சிவாஜி காலத்தில் தொடங்கி ரஜினி, கமல், அஜித், விஜய் உட்பட பல இளம் நடிகர்களோடும் வெண்ணிற ஆடை மூர்த்தி நடித்திருக்கிறார். இப்படியான நிலையில் சமீபத்தில் வெண்ணிற ஆடை மூர்த்தி அதிகமாக எந்த திரைப்படங்களிலும் காண முடிவதில்லை.
அது குறித்து நடிகர் லட்சுமணன் உடன் பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் நான் எத்தனையோ திரைப்படங்களில் நடித்திருக்கிறேன், சீரியல்களில் நடித்திருக்கிறேன், சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறேன். ஆனால் ஒரு கட்டத்தில் எனக்கு எல்லாமே போதும் என்ற நிலை வந்தது. அது நான் கடைசியாக நடித்த இட்லி என்ற திரைப்படத்தில் நான் அந்த திரைப்படத்தில் நடிகை கோவை சரளா உடன் நான் அந்த படத்தில் நடித்திருந்தேன்.
மிகவும் மகிழ்ச்சியான திரைப்படமாக அந்த திரைப்படம் இருந்தது. அந்த திரைப்படம் முடிவடைந்த பிறகு நடிகர் சங்கத்தில் ஒரு மீட்டிங் நடைபெற்றது. அதில் பலர் இருந்தார்கள் அந்த நேரத்தில் நான் மேடையில் பேசும்போது ஒருத்தங்களுடைய வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது உணவு, உடை, உறக்கம் தான். அதில் உறக்கம் என்பது நாமாக தேடிக்கொள்வது.. நம்முடைய உடம்பு தேடும் போது அதை எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஆனால் உணவும், உடையும் எப்போதுமே அவசியமாக இருக்கிறது. அதில் உடை (அதாவது வெண்ணிற ஆடை மூர்த்தி) என்னுடைய பெயரிலேயே அந்த ஆடை இருக்கிறது. அதுபோல உணவு இப்போது நான் கடைசியாக நடித்திருக்கும் இட்லி என்ற படத்தில் இருக்கிறது. இந்த படத்தோடு நான் என்னுடைய நடிப்பை முடித்துக் கொள்கிறேன் என்று கூறினேன். அங்கிருந்த எல்லோரும் அதிர்ச்சியில் அப்படியே உறைந்து போனார்கள்.
நான் இப்படி ஒரு ரியாக்ஷன் கொடுப்பாங்க என்று கொஞ்சமும் நினைக்கல. அந்த நேரத்தில் மேடையில் இருந்த இயக்குனர் சங்கர் கூட இப்படி எல்லாம் பேசாதீங்க சார் கண்டிப்பா நீங்க என்னுடைய படத்தில் நடிக்கணும் என்று சொன்னார். நான் இல்லை நான் ஒரு முடிவெடுத்துவிட்டேன். இனி நடிக்கப் போவதில்லை. என்னுடைய பெயரில் இருக்கும் ஆடையும் நான் கடைசியாக உணவு தலைப்பில் உள்ள இட்லி படத்தில் நடித்திருக்கிறேன். இதுவே எனக்கு போதும் என்று சொன்னேன்.
அதை தான் இன்று வரைக்கும் நான் ஃபாலோ பண்ணிக் கொண்டிருக்கிறேன். இனி எந்த திரைப்படத்திலும் நான் நடிக்கப் போவது கிடையாது என்று அந்த பேட்டியில் வெண்ணிற ஆடை மூர்த்தி பேசியிருக்கிறார். சமீபத்தில் இவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ராக்ஸ்டார் மனோ என்று பாடகர் மனோவை பெருமைப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது மனோவின் சார்பாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மனோவை பாராட்டி அந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வெண்ணிற ஆடை மூர்த்தி வந்திருந்தார். பல வருடங்களுக்குப் பிறகு இவரை பார்த்த ரசிகர்கள் இவர் மீண்டும் ரசிகர்களை சிரிக்க வைக்க சினிமாவில் வரவேண்டும் என்று கருத்து கூறி வந்தனர். ஆனால் இப்போது இவர் தன்னுடைய முடிவில் உறுதியாக இருப்பதாக கூறி இருக்கிறார்.
-
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
குலதெய்வ கோவிலில் கணவருடன் மகிழ்ச்சியை பகிர்ந்த மணிமேகலை.. அடடா சூப்பர்! குவியும் வாழ்த்துக்கள் -
Super Singer : சூப்பர் சிங்கர் அருணாவிற்கு கல்யாணம்.. மகிழ்ச்சியோடு வெளியிட்ட பதிவு! குவியும் வாழ்த்து -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி












Click it and Unblock the Notifications