கூட்டை உடைத்து ஹாயா பறந்த ஜோதிகா.. மமதா பானர்ஜியா? சிவக்குமார் ஓட்டல்ல வாங்கி சாப்பிடறாராம்: பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மும்பையில் செட்டில் ஆவதற்கான காரணத்தை பலமுறை ஜோதிகா, செய்தியாளர்களிடம் சொல்லிவிட்டார்.. தன்னுடைய பெற்றோரை கவனித்து கொள்ள வேண்டும், பிள்ளைகளுக்கு நல்ல படிப்பு வேண்டும் உட்பட பல்வேறு காரணங்களையும் தெளிவுபடுத்திவிட்டார். ஆனாலும், ஜோதிகா மும்பையில் வசித்து வருவது ஏன்? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இதற்கு நடுவில், வெப்சீரிஸ் ஒன்றில் ஜோதிகா சிகரெட் பிடிப்பது போன்ற காட்சி ஒன்றில் நடிக்கவும், மீண்டும் ஜோதிகாவை பற்றி சர்ச்சை வட்டமடிக்கிறது.

இந்நிலையில், BBT Cinema என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன், ஜோதிகாவின் வெப்சீரிஸ் பற்றியும், மும்பையில் குடியேறியதை பற்றியும் பேசியிருக்கிறார்.

Television actress Jyothika Sivakumar

அதில், "ஜோதிகா என்ன மம்தா பானர்ஜியா? அன்னை தெரசாவா? ஜெயலலிதாவா? அரைகுறை ஆடையோடு நடிக்க சொன்னாலும் நடிக்கக்கூடிய நடிகைதானே? ஜோதிகா சாதாரண நடிகைதானே? அதுக்கு எதுக்கு இவ்ளோ பில்டப்?

சூர்யா - ஜோதிகா திருமணம்

சூர்யா - ஜோதிகா திருமணத்தை சிவக்குமார் பலமுறை தடுத்து நிறுத்தினார். ஆனால், சூர்யாவின் அழுத்தம் தாங்காமல் ஜோதிகாவை கட்டி வைத்தார்.. ஆனால், பல கோடி ரூபாய் சொத்துக்களுடன், குழந்தைகளுடன் மும்பைக்கு சென்று செட்டில் ஆகிவிட்டார்.. அதற்கு காரணம் சென்னையில் அவருக்கு பிரைவசி இல்லை.
சிவக்குமார் ஓட்டல்ல வாங்கி சாப்பாடு சாப்பிடறாராம். "உங்களுடைய உழைப்பில் எதுவுமே வேணாம்" என்று சொல்லிவிட்டு, சிவக்குமாரும், அவருடைய மனைவியும் வீட்டில் சில காலம் சாப்பிடுவதில்லை என்றுதான் நான் கேள்விப்பட்டேன். இதற்கு காரணம் ஜோதிகாவுடனான சண்டையாம்.

கங்குவா - தங்கலான்

எந்த நடிகையையும் யாரும் கட்டுப்படுத்த முடியாது. அமலாபால், முதல் திருமணம் செய்தபோது, அவருடைய கணவரின் முக்கிய கோரிக்கையே, திருமணத்துக்கு பிறகு நடிக்கக்கூடாது என்பதுதான். ஆனால், கணவரைவிட, நடிப்புதான் முக்கியம் என்று டைவர்ஸ் செய்துவிட்டார் அமலாபால்.. அதுபோல, ஜோதிகா எந்தவிதமான கட்டப்பாட்டுக்குள்ளும் இருக்க விரும்பவில்லை..

கங்குவா படத்துக்கு ரசிகர்களை திட்டி என்ன பயன்? கங்குவா படம் முன்பேயே விக்ரம் நடித்த தங்கலான் படம் அதேபோல வந்தது.. அப்படியே தங்கலான் படத்தை பார்த்து காப்பி அடித்துவிட்டது போல இருந்தது கங்குவா.. இப்படி படம் எடுத்தால், மக்கள் எப்படி பார்ப்பாங்க.. தங்களது எத்தனை படங்கள் ஹிட்டானாலும், மம்முட்டி, மோகன்லால் இருவரும் 10 கோடி சம்பளத்தை தாண்டியதில்லை.. ஆனால் சிவகார்த்திகேயன் 100 கோடி ரூபாய் சம்பளம் கேட்கிறாராம்..

கூட்டை உடைத்து கொண்டு சென்ற ஜோதிகா

அனைவரும் கூட்டுக்குடும்பமாக இருக்க சிவக்குமார் விரும்புகிறார்.. ஆனால், கூட்டை உடைத்துக் கொண்டு ஜோதிகா வெளியேறிவிட்டார்.. கலாச்சாரத்துக்குள் தன்னை சுருக்கி கொள்ள முடியாது என்று ஜோதிகா சொல்லிவிட்டார்..

ஏன் சென்னையிலிருந்தால், மும்பையிலுள்ள தன்னுடைய அம்மா, அப்பாவை ஜோதிகாவால் கவனித்து கொள்ள முடியாதா? தனக்கு பிரைவசி வேண்டும் என்று நினைக்கிறார்.. சினிமாவில் சிகரெட் பிடிப்பது , பீர் குடிப்பது எப்படியும் நடிக்கலாம். இனி ஜோதிகாவை கட்டுப்படுத்த முடியாது" என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+