இருட்டுல லிப் லாக் சீனைதான் இன்னும் காட்டலை! கமல் பார்த்ததை வெளியே சொல்ல மாட்டார்! கஸ்தூரி
சென்னை: பிக்பாஸ் வீட்டுக்குள்ள இருட்டில் லிப் லாக் சீனையும் பாத்ரூம்குள்ள கொஞ்சறதையும்தான் இன்னும் காட்டலை என நடிகையும் சமூக ஆர்வலருமான கஸ்தூரி விமர்சித்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி 7ஆவது சீசன் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. இந்த சீசனில் பலர் புது முகமாக இருந்தாலும் டிஆர்பி ரேட் ஏறுமா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் புதுமுகங்களும் பல்வேறு சர்ச்சைகளை செய்து வருகிறார்கள்.

இதனால் பிக்பாஸ் டிஆர்பி ரேட்டிங்கில் பின்தங்கவில்லை. பிக்பாஸை பொருத்தமட்டில் கன்டென்ட் கன்டென்ட் என்பதுதான்! இந்த பிக்பாஸ் வீட்டில் வழக்கம்போல் கேங் உருவாக்கி விளையாடுகிறார்கள்.
அந்த வகையில் மாயா, பூர்ணிமா, ஐஸு, ஜோவிகா ஆகியோர் ஒரு கேங்காக செயல்படுகிறார்கள். இதில் மாயாவை ரசிகர்கள் கடுமையாக விமர்சிக்கிறார்கள். பிக்பாஸில் கலகத்திற்கு காரணமே அவர் தான் என விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் பிரதீப் ஆன்டணி இருந்தால் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என கூறி அவருக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார்.
இதற்காக மாயா கேங்கை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். சுத்தி கேமரா இருக்கும் போது அந்த பிக்பாஸ் வீட்டில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என இவர்களுடைய குற்றச்சாட்டு அபத்தமானது என்கிறார்கள். மேலும் பிரதீப்பிடம் கமல்ஹாசன் சரியாக விசாரிக்காமலும் அவர் தரப்பு நியாயத்தை சொல்ல வாய்ப்பு கொடுக்கவில்லை என்றும் விமர்சனங்கள் எழுந்தன.
இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 7 தொடர்பாக நடிகை கஸ்தூரி ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் கூறுகையில் பிரதீப் மகாத்மாவும் கிடையாது, அதே நேரத்தில் மாயா பூர்ணிமாலாம் அன்னை தெரசாவும் கிடையாது. பிக்பாஸில் காட்டுற சண்டையில் நிறைய உண்மை இருக்கும் பாதி பொய் இருக்கும். அங்கு நடக்கும் என்டர்டெயின்மென்டை மக்களுக்கு காட்டமாட்டார்கள்.
அதை கமல் மட்டுமே பார்த்திருப்பார். ஆனால் கமல் பார்த்ததை வெளியே சொல்ல மாட்டார், வெளியே சொன்னால் எல்லாருக்கும் ஆப்பு ஆகிடும். ஒரு பெண்ணை வர்ணிக்கிறது தவறே இல்லை. ஆனால் ஒரு வேலைக்காரி மாதிரி இருக்கா என உங்க வீட்டு பெண்ணை பார்த்து கூட சொல்லக் கூடாது.
ஆனால் நிக்சன் பிக்பாஸ் வீட்டுல வந்து சொல்றாரு. அவருக்கு என்ன திமிர் இருக்கணும். இவர் கோலிவுட் நடிகர் போல இருக்காரா. அதுக்குள்ள மத்தவங்க பற்றி குறை சொல்லுறாரு. பாரதி கண்ணம்மா சீரியலில் நானும் பார்த்திருக்கேன். வினுஷா தங்க சிலை போல் அழகா இருந்தாரு. அவங்க அழகை ஒரு குறை கூட சொல்ல முடியாது.
அந்த கலரு எனக்கு பிடிக்கும். அது நம்ம இந்தியன் கலர். இது என்ன பிக்பாஸ் ஜோடிகள் ஷோவா, யார் யார லவ் பண்றதுனு எல்லாரும் ஒரு முடிவோட இருக்காங்க! இன்னும் இருட்டுல லிப் லாக் கொடுக்குறது, பாத்ரூமில் கொஞ்சுறது இதெல்லாமதான் காட்டலை! மாயாவ பத்தி எனக்கு முதலேயே தெரியும். ஆனாலும் மாயா கேங்குல தான் பிரதீப் இருந்தாரு. கடைசில அவரையே அனுப்பிட்டாங்க!.
அவர் ரொம்ப சீப்பான ஆளுதான். பிரதீப் செய்த காரியம் அவரை மட்டும் அசிங்கப்படுத்தலை அவரது பெற்றோரையும் சேர்த்துதான் அசிங்கப்படுத்திவிட்டன. அது அவருக்கு புரியவில்லை. அத்துடன் மாயா தனது உள்ளாடையை எடுத்து நிக்சனுக்கு காட்டிட்டு இது சும்மா காமெடிக்கு என சொல்லிவிட்டு போறாங்க! ஆனால் அத கமல் சார் தட்டி கேட்கலை. ஆனால் மாயா நீங்க நல்லா கேம் ஆடுறீங்க என பாராட்டிவிட்டு செல்கிறார். இது என்ன என எனக்கு புரியவே இல்லை. இவ்வாறு கஸ்தூரி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications