அப்பவே மாசம் ஒரு லட்சம் சம்பாதித்தேன்.. ஆனால் அவரால் அது அழிஞ்சிடுச்சி.. நடிகை நீலிமா எமோஷனல்
சென்னை: நடிகை நீலிமா ராணி தன்னுடைய வாழ்க்கையில் தான் பட்ட கஷ்டங்கள் மற்றும் சந்தோஷங்கள் குறித்து பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.
அப்போது தான் பல வருடங்களுக்கு முன்பே மாதத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் சம்பாதிச்சேன் என்றும் அந்த பணத்தை தன்னுடைய அப்பா சீரழித்து விட்டார் என்பதை பற்றியும் பேசி இருக்கிறார்.

அதோடு தான் கடைநிலையிலிருந்து மீண்டும் எப்படி ஜெயித்து முன்னேறினேன் என்பதை பற்றியும் அந்த பேட்டியில் பேசி இருக்கிறார். அது பற்றி பார்க்கலாம்.
அந்த வகையில் நடிகை நீலிமா ராணி கமல்ஹாசன் நடித்து பெரிய அளவில் ஹிட் அடித்த தேவர் மகன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாக இருக்கிறார். அதற்கு பிறகு பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த இவர் டும் டும் டும் என்ற படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதற்கு பிறகு துணை கதாநாயகியாக பல படங்களில் நடித்திருந்தார்.
அது மட்டும் அல்லாமல் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி சீரியல்களிலும் நடித்திருந்தார். இதுவரைக்கும் 15 -க்கும் மேற்பட்ட தமிழ் மெகா சீரியல்களில் முக்கிய கேரக்டரில் நீலிமா நடித்திருக்கிறார். அதோடு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அரண்மனைக்கிளி, ஜீ தமிழில் தலையணை பூக்கள் போன்ற சீரியல்களில் நடித்தும் இருந்தார்.
அதுபோல ஒரு சில சீரியல்களை இயக்கியும் இருந்தார். இந்த நிலையில் நீலிமா தன்னுடைய வாழ்க்கையில் நடந்த பல சந்தோஷங்கள் துக்கங்கள் குறித்து பேசி இருந்தார். அதோடு அந்த பேட்டியில் தன்னுடைய தந்தை குறித்தும் பேசியிருந்தார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் நான் ஆரம்பத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது மாதம் ஒரு லட்சம் ரூபாய் சம்பாதித்து கொண்டிருந்தேன்.
என்னுடைய அந்த பணத்தை எல்லாம் என்னுடைய அப்பா சூதாட்டத்தில் விட்டுவிட்டார். அது எனக்கு கஷ்டமாக இருந்தது. எப்படி சமாளிக்க போறேன்னு தெரியாத சூழ்நிலையில் தான் நான் ஆரம்பத்தில் இருந்தேன். ஆனால் ஒன்று நான் சொல்ல விரும்புகிறேன். தோல்விகள் தான் வெற்றியின் படிக்கட்டுங்கள்.
ஆனால் அந்த இடத்தில் நான் தளர்ந்து சோர்ந்து போய் அய்யய்யோ அப்பா இப்படி பண்ணிட்டாங்களேன்னு நினைத்திருந்தால் எப்படி வாழ போறோம் எப்படி என் தம்பியை படிக்க வைக்க போகிறோம் என்று நினைத்து இருந்தால் நான் இன்று இந்த அளவிற்கு வந்திருக்க முடியாது.

ஆனால் அந்த இடத்தில் தைரியத்தை விட்டு விடவில்லை. இந்த தைரியத்தை என்னுடைய அப்பா தான் எனக்கு சொல்லித்தந்தார். தன்னம்பிக்கை, தைரியத்தோடு வாழ வேண்டும் என்று எனக்கு கற்றுக் கொடுத்திருந்தார். அதற்குப் பிறகு நான் ஒரு வாடகை வீட்டுக்கு போய் அந்த வாடகை வீட்டை வாங்கும் அளவிற்கு நம்பிக்கை வந்தது.
அந்த தைரியத்திற்கு காரணமும் அந்த தோல்விதான். வெற்றி தோல்விகள் எல்லாமே நம்முடைய வாழ்க்கையில் இருக்கும் அதை நாம் எப்படி பார்த்துக் கொண்டு அதிலிருந்து வெளியே வருகிறோம் என்பது தான் நாம் பார்க்கக்கூடிய விஷயம் என்றும் அந்த பேட்டியில் நீலிமா பேசி இருக்கிறார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications