பொடுகை போக்க ரச்சிதா மகாலட்சுமி செய்த ஈசி டிப்ஸ் இதுதானா? இத்தனை காரணங்களும் இருக்கிறதா?
சென்னை: நடிகை ரச்சிதா மகாலட்சுமி தான் எப்படி எளிமையாக தன்னுடைய தலைமுடியை பராமரித்து வருகிறேன் என்று கூறியிருக்கிறார்.
பலருக்கும் இருக்கும் பொடுகு பிரச்சனைக்கும் எளிமையான வீட்டு வைத்திய முறையை மகாலட்சுமி கூறியிருக்கிறார்.
தலைமுடி அலை அலையாக காற்றில் அசைந்தாட இந்த எளிமையான குறிப்புகளை பாலோ பண்ணினால் போதுமாம். அதை பார்க்கலாம்.

சமீபத்தில் ஆண்களையும் பெண்களையும் அதிகமாக வாட்டி வதைத்து வரும் ஒரு பிரச்சனை என்றால் அது தலைமுடி பிரச்சனை தான். இது இல்லாதவர்களே இல்லை என்று சொல்ல முடியும்.. பலருக்கும் இப்போது இளம் வயதிலே நரைமுடி வந்து விடுகிறது. தலை முடி எல்லாம் கொட்டி போய் சொட்ட தலையாக மாறிவிட்டதே என்று கண்ணாடி முன்பு நின்று பலர் கண்ணீர் விடுகின்றனர்.
இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும் பலருக்கு இது இயற்கை வழியாக வந்த பொழுதிலும் தற்போது எடுத்துக் கொள்ளும் உணவு முறையாலும், பழக்க வழக்கங்களாலும் தான் அதிகமானோருக்கு முடி கொட்டும் பிரச்சனை இருந்து வருகிறது. ஆனால் இருக்கும் முடியை இழந்து விடாமல் அதை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று பலர் போராடிக் கொண்டிருக்கின்றனர். தலைமுடி பிரச்சனையால் பலர் திருமண வாழ்க்கை கூட கை கூடாமல் தவித்து வருபவர்களும் இருக்கதான் செய்கின்றனர்.
தற்போது அதற்கெல்லாம் தீர்வு சொல்லும் விதமாக தான் அனுபவபூர்வமாக உணர்ந்த விஷயங்களை சின்னத்திரை நடிகையான ரச்சிதா மகாலட்சுமி கூறியிருக்கிறார். இவர் சரவணன் மீனாட்சி சீரியல் மூலமாக சின்னத்திரையில் பிரபலமடைந்ததாலே இப்ப வரைக்கும் இவரை மீனாட்சி என்று தான் அதிகமான ரசிகர்கள் அழைத்து வருகின்றனர். கர்நாடகாவை சேர்ந்த இவர் தமிழ் ரசிகர்களின் ஃபேவரைட் கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு இவர் தற்போது திரைப்படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தன்னுடைய தலைமுடியை பாதுகாத்துக் கொள்ளவும், பொடுகை போக்க என்னவெல்லாம் செய்யலாம் என்றும் பல தகவல்களை பகிர்ந்து இருக்கிறார்.
பொடுகை விரட்டுவதற்கு ரச்சிதா எடுத்துக் கொள்ளும் முதல் விஷயம் கருவேப்பிலை எண்ணெய் தானாம். வீட்டிலேயே தயார் செய்த கறிவேப்பிலை எண்ணையை வாரத்திற்கு இரண்டு முறை தடவி கொள்வாராம். அது போல நெல்லிக்காய் ஜூஸ் குடித்தால் தலைமுடிக்கு அவ்வளவு நல்லது என்று பலரும் கூறியிருப்பார்கள். அதையே இவரும் செய்வாராம். வாரத்திற்கு ஒருமுறை கட்டாயம் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து விடுவாராம்.

அதுமட்டுமில்லாமல் பலரும் முகத்திற்கு தான் பச்சைப்பயிறு யூஸ் பண்ணுவார்கள் ஆனால் ரச்சிதா பொடுகை போக்குவதற்காக பச்சைபயிறும் வெந்தயத்தையும் ஊறவைத்து அந்த பேஸ்ட்டை தலையில் தடவி பின்பு குளிப்பாராம். அதுபோல முட்டையின் வெள்ளை கருவை முடி மற்றும் வகிட்டில் தடவி குளித்தால் குளிர்காலத்தில் கூட பொடுகு வராது என்றும் கூறியிருக்கிறார்.
அதுபோல இயற்கையாக கிடைக்கும் கற்றாழை ஜெல்லை தலைமுடியில் தடவி வந்தால் முடி திக்காக வளரும், பொடுகு பிரச்சனையும் இருக்காது என்று தன்னம்பிக்கை ஊட்டும் விதமாக இவர் கூறியிருக்கிறார்.
-
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்!












Click it and Unblock the Notifications