பாக்கியலட்சுமி சீரியலை விட்டு விலக காரணம் இதுதான்! கர்ப்பம் அல்ல.. வெளிப்படையாக பேசிய ரித்திகா
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தா கேரக்டரில் நடித்து வந்த நடிகை ரித்திகா அந்த சீரியலில் இருந்து சில மாதங்களுக்கு முன்பு விலகி இருந்தார். இந்த நிலையில் தற்போது அவர் கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் தான் எதற்கு சீரியலை விட்டு விலகினேன் என்பது பற்றி பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.
பொதுவாக ஒரு சில நடிகைகள் மட்டும் தான் பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பெண் போல மனதில் எளிமையாக இடம்பிடித்து விடுகிறார்கள். அதில் ஒருவர் தான் நடிகை ரித்திகா. இவர் ஆரம்பத்தில் விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பல ரசிகர்களை கவர்ந்திருந்தார். அதுபோல விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியிருக்கிறார்.

அது மட்டும் இல்லாமல் சில ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பாட்டு பாடியும் அசத்தி இருக்கிறார். அதோடு அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலமாகத்தான் நடிகையாக அறிமுகமானார். அந்த சீரியலில் கதாநாயகனின் தங்கை கேரக்டரில் வினோதினியாக நடித்திருந்தார். அதற்கு பிறகு தான் பாக்கியலட்சுமி சீரியலும் நடித்திருந்தார். இந்த சீரியலில் இவரை பார்த்தாலே அய்யோ பாவம் என்று சொல்கிற மாதிரியான கேரக்டர் தான் இவருக்கு. எப்போதும் அதிர்ந்து பேசாத கேரக்டரில் ரித்திகா கச்சிதமாக பொருந்தி இருந்தார்.
சீரியலில் இவருடைய கேரக்டர், காதலித்து திருமணம் செய்த கணவர் தன் கண்முன்னே இறந்து போய்விட்ட பிறகு தன்னுடைய குழந்தையோடு கணவரின் பெற்றோரோடு ரித்திகா வாழ்வது போல தான் அந்த சீரியலில் காட்சிகள் இருந்தது. பிறகு எழிலை காதலித்து இருப்பார். பல போராட்டங்களுக்குப் பிறகு பாக்யா முயற்சியால் எழில் மற்றும் அமிர்தாவுக்கு திருமணமும் நடைபெற்றது.

திருமணத்திற்கு பிறகு அமிர்தா பாக்யாவிற்கு பக்கபலமாக இருந்து வந்தார். அந்த நேரத்தில் தான் ரித்திகாவிற்கு திருமணம் நடைபெற்றது. ரித்திகா குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது kpy பாலா அவர் பின்னாடி சுற்றி காதலிப்பது போன்று பேசிக்கொண்டே இருப்பார். இதனால் இவர்கள் இருவரும் காதலிக்கிறார்களா? என்று கூட பலர் கேள்வி எழுப்பி வந்தனர்.

ஆனால் இது குறித்து ரித்திகா மற்றும் பாலா இருவரும் விளக்கம் கொடுத்திருந்தனர். அதில் நாங்கள் நிகழ்ச்சிக்கு கண்டெண்டுக்காக தான் இப்படி பேசிக் கொண்டே இருக்கிறோம். எங்களுக்குள் எதுவும் கிடையாது என்று கூறியிருந்தனர். அதுபோலவே பாக்கியலட்சுமி சீரியலில் ரித்திகா நடித்துக் கொண்டிருக்கும் போது விஜய் டிவியில் முக்கிய பொறுப்பில் இருக்கும் வினு என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகும் தொடர்ச்சியாக பாக்கியலட்சுமி சீரியலில் நடித்துக் கொண்டிருந்தார். ஆனால் திடீரென்று அந்த சீரியலில் இருந்து விலகி விட்டார். பிறகு எதிலும் நடிக்காமல் இருந்த நிலையில் தற்போது ஒரு திரைப்படத்தில் நடித்து இருக்கிறார். அதே நேரத்தில் நிறைமாத கர்ப்பமாக இருக்கும் ரித்திகா தான் எதற்காக சீரியல் மற்றும் சினிமாவை விட்டு விலகினேன் என்று கூறியிருக்கிறார்.

அதில் அவர் பேசுகையில் நான் கல்யாணத்திற்கு பிறகு நடிக்க வேண்டும் என்று தான் நினைத்திருந்தேன். நான் நடிக்க கூடாது என்று என்னுடைய கணவரோ அல்லது என்னுடைய அம்மா வீட்டிலோ என் கணவர் வீட்டிலோ யாரும் சொல்லவில்லை. ஆனால் எனக்கு உடல் நிலையில் சில பிரச்சனைகள் வந்தது. அதனால் தான் நான் நடிப்பை விட்டு விலகி இருந்தேன்.

அந்த நேரத்தில் சில மாதங்கள் கழித்து நான் கர்ப்பமாக இருந்தேன். இது கடவுள் கொடுத்த வரம் என்பதால் இதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு இந்த வாழ்க்கைக்கு தயாராகி விட்டேன். இப்போது நாளை அல்லது மறுநாள் எனக்கு குழந்தை பிறக்கும் என்று டாக்டர் சொல்லி இருக்கிறார்கள். குழந்தை பிறந்து ஓரளவிற்கு செட்டில் ஆனதும் மீண்டும் நடிக்க தொடங்குவேன். உடல்நிலை பிரச்சனை காரணமாகத்தான் நான் சீரியலை விட்டு விலகினேன் என்று ரித்திகா விளக்கம் கொடுத்திருக்கிறார்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம்












Click it and Unblock the Notifications