நடிகை ஷகிலா அந்த மாதிரி கேட்ட கேள்வி..சரமாரியாக பதிலடி கொடுத்த சம்யுக்தா..வெளி வந்த உண்மை..!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை சம்யுக்தா விஷ்ணுகாந்த்க்கு ஆதரவாக நடிகை ஷகிலா பேசிய வார்த்தைகளுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.

சில தினங்களுக்கு முன்பு நடிகை ஷகிலா விஷ்ணுகாந்தை பேட்டி எடுத்திருந்தார்.

அப்போது சம்யுக்தாவிற்கும் அவருடைய அப்பாவிற்கும் ஏதாவது தப்பான உறவு இருக்கிறதா? என்று கேள்வி கேட்டு இருந்தாராம்.

சீரியல் நடிகர்கள் ஆன சம்யுக்தா மற்றும் விஷ்ணுகாந்த் குடும்ப பிரச்சினை சமூக வலைத்தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இவர்கள் இருவரும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை சுமத்தி கொண்டிருப்பதை பார்த்து சின்னத்திரையில் பரவலாக இவர்களுடைய பேச்சு தான் வலம் வருகிறது.

Actress Samyuktha gave a sharp reply Actress Shakila asked that kind of question

இந்த வகையில் நடிகை சம்யுக்தா பிரபல நடிகை ஷகிலாவை மறைமுகமாக திட்டி இருக்கிறார். இந்த பிரச்சனையில் இதுவரைக்கும் சம்யுக்தா எந்த youtube சேனல்களுக்கும் பேட்டி கொடுக்காமல் இருந்த நிலையில் இன்று முதல்முறையாக ஒரு யூடியூப் சேனலில் பேட்டி கொடுத்திருக்கிறார். அப்போது விஷ்ணுகாந்த் பேட்டி கொடுக்கும் போது ஒரு பெண் நடிகை அவரிடம் கேள்வி கேட்டிருந்தார்.

இந்த மாதிரி மோசமான கேள்விகளை எல்லாம் எப்படி தான் கேட்கிறார்களோ? அவர்களுக்கு என்று கொஞ்சம் கூட மனசாட்சி என்பது இல்லையோ? பொதுவாக இன்டர்வியூ எடுப்பவர்கள் யாருக்கும் ஒருதலைபட்சமாக பேச மாட்டார்கள். ஆனால் இந்த பெண் நடிகை அப்படி எல்லாம் பேசி இருக்கிறார் என்று கடும் கோபத்தில் திட்டி இருக்கிறார்.

அதற்கு காரணம் நடிகை ஷகிலா விஷ்ணுகாந்தை சில தினங்களுக்கு முன்பு பேட்டி எடுத்திருக்கிறார். அப்போது சம்யுக்தாவிற்கும் அவருடைய அப்பாவிற்கும் தப்பான உறவு ஏதாவது இருக்கிறதா என்று கேள்வி கேட்டு இருந்தாராம். அது மட்டும் அல்லாமல் சம்யுக்தா லைவில் பேசிக் கொண்டிருக்கும் போது நானும் அந்த வீடியோவை பார்த்தேன். அதில் 150 அரகடு பெண்கள் ஒன்றாக இருப்பது போன்று இருந்தது என்று கூறியிருந்தாராம்.

Actress Samyuktha gave a sharp reply Actress Shakila asked that kind of question

இது குறித்து தான் சம்யுக்தா இப்போது பேட்டியில் பேசியிருக்கிறார். இப்படி எல்லாம் பேட்டி எடுக்கும் ஒரு செய்தியாளர் கேள்வி கேட்கலாமா? இது எவ்வளவு மோசமானது. அப்பா பொண்ணுக்கு இடையில் இருக்கும் உறவு பற்றி கேவலமாக பேசுபவர்கள் என்ன மனநிலையில் இருக்கிறார்கள் என்பது அவர்கள் கேட்கும் வார்த்தையில் இருந்தே தெரிகிறது. என்னைப் பற்றி ஜட்ஜ் பண்ண அந்த நடிகை யார் இப்படி எல்லாம் கேள்வி கேட்க? இதை அவரா செய்தாரா? அல்லது விஷ்ணுகாந்த் சொல்லி கேள்வி கேட்டாரா? என்று கோபத்தோடு திட்டி இருக்கிறார்.

சம்யுக்தாவிற்கு ஆதரவாக அவருடைய அப்பாவும் அந்த பேட்டியில் பேசியிருக்கிறார். அதில் ஒரு அப்பா பொண்ணை கேவலப்படுத்தி மீடியாவில் கேள்வி கேட்பது சரியானதா? நாம தமிழ்நாட்டில் தானே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த மாதிரி ஒரு கேடுகெட்ட புத்தி உள்ளவர்களை என்ன செய்வது என்று கேள்வி கேட்டு இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+