ஷபானாவின் புது சீரியல்.. டைட்டில் கொஞ்சம் கூட எதிர்பார்க்கலையே! இப்படி மிரட்டுறாங்களே?கதை இதுதானா?
செம்பருத்தி சீரியல் பிரபலமான ஷபானா சன் டிவியில் மிஸ்டர் மனைவி என்கிற புது சீரியலில் நடிக்கிறார்.
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியல் மூலம் பிரபலமான நடிகை ஷபானா சன் டிவியில் புதிய சீரியலில் அறிமுகம் ஆகிறார்.
நடிகை ஷபானா மாறுபட்ட கோணத்தில் சன் டிவியில் மிஸ்டர் மனைவி என்கிற சீரியலில் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் மிஸ்டர் மனைவி சீரியலின் முதல் பிரமோ இன்று வெளியாகி இருக்கிறது.

செம்பருத்தி பார்வதி
ஜீ தமிழில் டிஆர்பி யில் முதலிடத்தில் பல வருடங்களாக பிடித்து வந்து சீரியல் என்றால் அது செம்பருத்தி சீரியல் ஆகத்தான் இருக்க முடியும். இந்த சீரியலில் முதல் முறையாக தமிழில் அறிமுகமான ஷபானா நடித்திருந்தார். முதல் சீரியலே இவருக்கு ரசிகர்களின் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பையும், பிரபலத்தையும் கொடுத்தது. இந்த சீரியலில் பார்வதியாக ரசிகர்கள் மனதில் இப்ப வரைக்கும் ஜொலித்து வருகிறார். இந்த சீரியல் முடிவடைந்ததும் மீண்டும் ஷபானா எந்த சீரியலில் நடிப்பார் என்று ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்திருந்தனர்.

கேரளா பொண்ணு
ஷபானா கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். முதல் முறையாக தமிழ் சீரியலில் அறிமுகமாகி தமிழ்நாட்டு பையனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஆரம்பத்தில் செழியன் கேரக்டரில் நடித்த ஆரியன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

புதிய சீரியல்
இந்த நிலையை செம்பருத்தி சீரியல் நடித்துக் கொண்டிருக்கும் போது ஷபானாவிற்கு திருமணம் நடைபெற்றது. அந்த சீரியல் முடிவடைந்த பிறகு ஷபானா எந்த சீரியலிலும் நடிக்காமல் இருந்து வந்தார். தற்போது சன் டிவியில் மிஸ்டர் மனைவி என்ற சீரியலில் இதுவரைக்கும் நடித்து வந்த கேரக்டரில் இருந்து மாறுபட்டு நடித்து இருக்கிறார். ஷபானாவின் லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பல்வேறு கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

விரைவில் ஒளிபரப்பு
சீரியலின் பெயரை பார்த்ததுமே ரசிகர்கள் அப்போ இந்த சீரியலில் ஷபானாவிற்கு தான் ரோல் அதிகமாக இருக்கப் போகிறது என்று கருத்து கூறி வரும் நிலையில், இது ஷபானாவின் துருதுறுப்பு தனத்தை வெளிக்காட்டும் விதமாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று பலர் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். இவருக்கு இவருடைய பாட்டி கொடுக்கும் அலப்பறைகள் அதிகமாக இருக்கிறதே என்று நெட்டிசன்கள் கலாய்க்க, போகப் போகத்தான் தெரியப்போகிறது இந்த சீரியல் ரசிகர்களின் மத்தியில் எந்த அளவிற்கு இடம் பிடிக்கும் என்று அதிலும் குறிப்பாக இந்த சீரியல் இறுதி கட்டத்தை எட்டி இருக்கும் கண்ணான கண்ணே சீரியல் முடிவடைந்ததும் ஒளிபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
“என் கால் மேல் ஏறி நில்” சூட்டிங் ஸ்பாட்டில் உதயநிதி சொன்ன வார்த்தை! அந்த நொடி எதிர்பார்க்கல! சீரியல் நடிகை ஒபன் -
விஜய் பிரண்ட் சஞ்சீவ்வை சுற்றும் பிரச்சனை.. உண்மை தெரியாமல் பேசாதீங்க! ஓபனாக உடைத்து பேசிய ப்ரீத்தி சஞ்சீவ் -
ஐடி விங் மூலமாக வெறுப்பை பரப்புறாங்க.. பொறுப்பு உங்களிடமே உள்ளது தலைவரே! வெளுத்த நடிகை நிவேதா -
யூத் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்..! ப்ளூ சட்டை மாறன் ஒரே வார்த்தையில் இப்படி சொல்லிட்டாரே! -
ஜனநாயகனின் “Mute” செய்யப்பட்ட அரசியல் வசனம்.. இதுதான் காரணமா? விஜய்க்கு கிடைக்கும் நிம்மதி! -
சினிமாவை விட்டு விலகும் திரிஷா.. காரணம் இதுதானா? அதிர்ச்சி பின்னணி! லீக்கான தகவல்கள் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு!












Click it and Unblock the Notifications