அம்மாவின் 90 வது பிறந்தநாளில் நெகிழ வைத்த சுஹாசினி.. பக்கத்திலேயே மணிரத்தினம்.. குவியும் வாழ்த்து
சென்னை: நடிகை சுஹாசினி தன்னுடைய அம்மாவின் 90 வது பிறந்த நாளை தன்னுடைய வீட்டில் எளிமையாக கொண்டாடி இருக்கிறார். சில வாரங்களுக்கு முன்புதான் சுஹாசினியின் அப்பா சாருஹாசன் மருத்துவமனையில் அட்மிட் ஆகி இருந்தார். இப்போது அவரும் தன்னுடைய மனைவியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார்.
நடிகர் கமல்ஹாசனின் அண்ணன் சாருக்ஹாசனுக்கு 96 வயது ஆகும் நிலையில் அவருடைய மனைவிக்கு இன்று 90 வது பிறந்த நாளை அவருடைய மகளான சுஹாசினி மற்றும் அவருடைய கணவர் மணிரத்தினம் இணைந்து கொண்டாடி இருக்கிறார்கள். அப்போது எடுத்த புகைப்படத்தை சுஹாசினி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். இந்த புகைப்படத்தை பார்த்ததும் ரசிகர்கள் பலரும் இவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

நடிகர் சாருஹாசன், சந்திரஹாசன், கமல்ஹாசன் மூவருமே அண்ணன் தம்பிகள் தான். மூவரும் சினிமாவில் பல ஆண்டுகளாக தங்களுடைய திறமைகளை காட்டிக்கொண்டிருக்கின்றனர். அதிலும் கமல்ஹாசனை சிறுவயதிலிருந்தே சாருஹாசனும் அவருடைய மனைவியும் தான் வளர்த்து வந்தார்கள் என்று பல பேட்டிகளில் கமல்ஹாசன் கூறி இருக்கிறார்.
கமல்ஹாசன் அவருடைய அம்மாவின் வயிற்றில் இருக்கும் போது தான் சாருஹாசனுக்கு திருமணம் முடிந்ததாம். கமல்ஹாசன் பிறந்த பிறகு சாருஹாசனின் மனைவி கமல்ஹாசனை வளர்த்து வந்ததால் அவரை கமல்ஹாசன் அம்மா என்று தன் கூப்பிடுவாராம். தன்னுடைய அண்ணனை அப்பா என்று கூப்பிடுவாராம். இது பற்றி கமல்ஹாசன் மட்டுமல்ல சாருஹாசனின் மனைவியும் கூறியிருக்கிறார்.

இந்த நிலையில் சாருஹாசன் வெள்ளித்திரை சின்னத்திரை என்று நடித்து இருந்தாலும் ஒரு வழக்கறிஞராகவும் இருந்திருக்கிறார். ஆரம்பத்தில் கமல்ஹாசன் அதிகமாக நடித்துக் கொண்டிருக்கும் போது அவருடைய திரைப்படங்கள் கால் சீட் ஷெட்யூல் போன்ற விஷயங்களை எல்லாம் சாருஹாசன் தான் கவனித்து இருக்கிறார்.

இழந்த என் சிரிப்பை மீட்டு தந்ததற்கு நன்றி.. அனிதா சம்பத் வெளியிட்ட பதிவு.. குவியும் வாழ்த்துக்கள்
இந்த நிலையில் தான் சில வாரங்களுக்கு முன்பு சாருஹாசன் உடல்நிலை சரியில்லாமல் போக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது அவரை பக்கத்தில் இருந்து கவனித்துக் கொண்ட சுஹாசினி என்னுடைய அப்பா மருத்துவமனைக்கு விடுமுறைக்கு வருவது போல வந்திருக்கிறார். இங்கேயும் புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறார் என்று ஒரு பதிவு வெளியிட்டு இருந்தார். இது இணையத்தில் பலருடைய கருத்துக்களை பெற்று வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா












Click it and Unblock the Notifications