இந்த நிலைமைக்கு காரணம் பாக்யராஜ் தான்.. நான் வேலை செய்றது பிடிக்கலைன்னா.? மனம் திறந்த நடிகை சுலக்ஷனா
சென்னை: வெள்ளித்திரையில் அறிமுகம் ஆகி தற்போது சின்ன திரையில் நடித்துக் கொண்டிருக்கும் சுலக்ஷனா சமீபத்தில் நடிகர் பாக்கியராஜ் பற்றி சில தகவல்களை பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சுலக்ஷனா முதல்முறையாக நடிகர் பாக்கியராஜ் உடன் தான் தூறல் நின்னுபோச்சு என்ற திரைப்படத்தில் தமிழில் அறிமுகம் ஆகி இருக்கிறார்.
எனக்கு ஒரு குரு என்றால் அது பாக்யராஜ் தான் என்று தன்னுடைய திரை பயணத்தை குறித்து பல தகவல்களை கூறி இருக்கிறார்.

நடிக்க கிடைத்த வாய்ப்பு
சூட்டிங் பார்க்க போன ஒரு மூன்று வயது குழந்தை அங்கே நடிப்பதற்காக தேர்வாகி இருந்த குழந்தை அழுது கொண்டிருந்ததை பார்த்து, அந்தக் குழந்தையை சமாதானப்படுத்தி, நடிக்க சொல்லி கொடுக்க, அங்கிருந்த தயாரிப்பாளரும், இயக்குனரும் வியந்து போய் நீயே இந்த இடத்தில் நடிக்கிறியா? என்று கேட்க, அதற்கு அந்த குழந்தையும் இது என்ன பெரிய வேலையா? நான் நடிக்கிறேன் பாருங்க என்று மூன்று வயதிலேயே நடிக்க தொடங்கியது தான் நடிகை சுலக்ஷனா. இவர் முதல் முதலாக காவியத்தலைவி என்ற படத்தில் குழந்தை கிருஷ்ணாவாக நடிக்க தொடங்கி இருக்கிறார். அப்போது அவருடைய பெயர் பேபி டோலியாக தான் இருந்திருக்கிறது. பிறகு இவருடைய நடிப்பை பார்த்து அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைத்திருக்கிறது.

தூறல் நின்னு போச்சு திரைப்படம்
குழந்தை நட்சத்திரமாகவே நடித்துக் கொண்டிருந்த சுலக்ஷனாவிற்கு பாக்கியராஜ் நடித்த தூறல் நின்னு போச்சு என்ற திரைப்படத்தின் மூலமாகத்தான் தமிழ் கதாநாயகியாக மாறி இருக்கிறார். சுலக்ஷனா தூறல் நின்னு போச்சு திரைப்படத்திற்கு முன்பு இரண்டு வேறு மொழி திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். அதை பார்த்து தான் பாக்கியராஜ் இவருக்கு இந்த வாய்ப்பு கொடுத்திருந்தாராம். முதல் முதலாக தமிழில் கதாநாயகியாக நடிக்கும் போது இவருக்கு புதுமுகமாகத்தான் இருந்திருக்கிறது. அப்போது எப்படியும் ஒரு செட்யூல் நடித்து முடித்ததும் நம்மளை அனுப்பி விடுவார்கள் என்று நினைத்துதான் தான் சுலக்ஷனா நடித்தாராம் ஆனால் நான் பாஸாகி விட்டேன். முதல் திரைப்படம் நன்றாக ஓடியதால் தான் என்னுடைய கேரியர் மாறியது என்று கூறியிருக்கிறார்.

சொல்லிக் கொடுத்த குரு
நடிகர் பாக்கியராஜ் ஒரு இயக்குனராக பலர் படங்களை இயக்கியிருந்தாலும் நடிகை சுலக்ஷனாவிற்கு குருவாகவே இருந்திருக்கிறார். சுலக்ஷனாவிற்கு பல கரக்க்ஷன்களை சொல்லிக் கொடுத்து இப்படி செய்யலாம் அப்படி செய்யலாம் என்று சொல்லிக் கொடுத்து நடிப்பில் இப்ப வரைக்கும் அவர் தொடர்ந்து கொண்டிருப்பதற்கு காரணம் அன்று பாக்யராஜ் சொல்லிக் கொடுத்தது தான் என்று அவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். ஆனால் அந்த திரைப்படத்திற்கு பிறகு தனக்கு அவரோடு நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்று கூறி இருக்கிறார்.

பாராட்டு கிடைக்கவில்லை
திரைப்படத்தில் நான் நடிக்கும் போது என்னுடைய நடிப்பை பாக்யராஜ் பாராட்டவே இல்லை என்றும் நான் அவர் நினைத்தபடியே அப்படியே நடித்து முடித்து இருக்கிறேன். அதனால் தான் என்னை பாராட்டவில்லை என்று நினைக்கிறேன். ஒருவேளை நான் நடித்தது பிடிக்கவில்லை என்றால் அவர் அப்போவே சொல்லி இருக்கணும்..!? ஆனால் அப்படி சொல்லவில்லை. அப்போ நான் சரியாகத்தான் செய்திருக்கிறேன் என்று கூறி இருக்கிறார். முதல் படமே சுமார் ஒரு வருடங்களுக்கு ஓடி இருக்கிறது. இது மகிழ்ச்சியாக தான் இருந்ததாம். இப்ப வரைக்கும் நடிகை சுலக்ஷனா 450 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறாராம். வெள்ளி திரையில் மட்டுமல்லாமல் சின்ன திரையிலும் பல சீரியல்களில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார். இவருடைய நடிப்பில் விஜய் டிவியில் ஒளிபரப்பான தெய்வம் தந்த வீடு ரசிகர்களின் மத்தியில் அதிகமாக இவர் நடிப்பை பாராட்ட வைத்தது.

தொடரும் நடிப்பு
சன் டிவியில் ஒளிபரப்பான கண்ணான கண்ணே சீரியலிலும் சுலக்ஷனா நடித்து வந்திருந்தார். அடுத்தடுத்து பல சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவருடைய காலத்தில் திரைப்படங்களில் நடித்து வந்த பல நடிகைகள் இருந்த இடம் தெரியாமல் ஒதுங்கி விட்டனர். ஆனால் இவர் இப்பவும் தன்னுடைய நடிப்பு வாழ்க்கையில் பயணித்துக் கொண்டே இருக்கிறார்.
-
“எப்போது என்ன நடக்கும்னு சொல்ல முடியாது! அது வேதனையான சம்பவம்” நடிகை பிரியங்கா மோகன் உருக்கம் -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை












Click it and Unblock the Notifications