நடிகை வனிதாவின் முன்னாள் கணவர் பீட்டர் பால் வீட்டில் கட்டு கட்டாக கிடந்த பணம்..?வெளிவரும் மர்மம்
சென்னை: நடிகை வனிதாவின் மூன்றாவது கணவரான பீட்டர் பால் சமீபத்தில் மரணமடைந்து இருந்தார்.
அவருடைய இறப்பிற்கு பிறகு கட்டு கட்டாக அதிகமான பணம் அவருடைய வீட்டில் கண்டெடுக்கப்பட்டதாக செய்திகள் பரவி வருகிறது.
அதோடு பீட்டர் பால் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு தன்னுடைய முதல் மனைவியின் குழந்தைகளுக்காக தன்னுடைய சொத்தை எழுதி வைத்ததாகவும் தகவல்கள் பரவுகின்றது.

வெள்ளிதிரையில் நடிகையாக அறிமுகம் ஆகி பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்து சின்னத்திரை ரசிகர்களின் மத்தியிலும் பிரபலமடைந்த வனிதா சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவருடைய வாழ்க்கை திறந்த புத்தகமாக இருந்து வருகிறது. இவருடைய வாழ்க்கையில் நடக்கும் இன்ப, துன்பங்கள் என அனைத்துமே ரசிகர்களுக்கு தெரிந்ததுதான். அந்த வகையில் தான் சில வருடங்களுக்கு முன்பு நடிகை வனிதா மூன்றாவது ஆக பீட்டர் பால் என்கிற நபரை திருமணம் செய்திருந்தார்.
பீட்டர் பால் கிராபிக்ஸ் டிசைனர் ஆகவும் இருந்து வந்த நிலையில் அவரை கிறிஸ்தவ முறைப்படி தான் வனிதா திருமணம் செய்திருந்தார். திருமணத்திற்கு பிறகு இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஒரு சில மாதங்களிலே இருவரும் பிரிந்து இருந்தனர். இவர்களுடைய பிரிவுக்கு பீட்டர் பாலின் அதிகமாக குடிப்பழக்கம் காரணம் என்று கூறப்பட்டு இருந்தது. இந்த நிலையில் சமீபத்தில் பீட்டர் பால் இறந்து இருக்கிறார். இது பலரையும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது,
இந்த நிலையில் பீட்டர் பால் வீட்டில் கட்டு கட்டாக பணம் எடுக்கப்பட்டு இருப்பதாகவும், அவர் தனது குடும்ப சொத்துக்களை வைத்திருப்பதாகவும் ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. அந்த வகையில் பீட்டர் பால் ஒரு சிறந்த விசுவல் எபெக்ட் டைரக்டர் என்பது அனைவருக்கும் தெரிந்திருந்தாலும், அவர் ஒரு சிறந்த கடின உழைப்பாளியாகவும் விடாமுயற்சி கொண்ட நபராக இருந்திருக்கிறார்.
அதோடு வனிதாவின் youtube சேனலை இம்ப்ரூ பண்ணுவதற்காக தான் ஆரம்பத்தில் வனிதாவின் வாழ்க்கையில் நுழைந்ததாகவும் கூறப்படுகிறது அது போல ஒரு விஷுவல் எஃபெக்ட் டைரக்டராக இவருக்கு அதிகமான பணம் கிடைக்கிறது. அது மட்டுமல்லாமல் இவர் நண்பர்கள் பலரோடு சேர்ந்து பணியாற்றவும் செய்து இருக்கிறார் என்றும் அந்த பணம்தான் இப்போது இவருடைய வீட்டில் இருந்திருக்கும் என்றும் பலர் கருத்து கூறி வருகிறார்கள்.

இந்த நிலையில் கடைசி நேரத்தில் அதாவது இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு தன்னுடைய முதல் மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் சில சொத்துக்களை பீட்டர் பால் எழுதி வைத்திருக்கிறார் என்றும் அவர்களுக்கு உதவும் வகையில் தான் கொஞ்சம் பணமும் வீட்டில் வைத்திருந்ததாகவும் செய்திகள் வெளியாகி இருக்கிறது.
இந்த பணத்தை இப்போது அவருடைய வீட்டில் உள்ளவர்கள் கண்டெடுத்திருப்பதாகவும், இவ்வளவு பணத்தை அவர் வீட்டில் வைத்திருந்தாரா என்றும் பலர் வியந்து போய் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இருந்தாலும் பீட்டர் பால் கடைசி காலத்தில் தனியாக இருந்திருக்கிறார். அப்படி இருக்கும் போது வீட்டிற்குள் இவ்வளவு பணம் எப்படி சேர்த்து வைத்திருக்கிறார் என்றும் சிலர் கேள்வி எழுப்பு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications