"இவா என்ன பத்தினி மாதிரி வந்திருக்கா” நடிகை விசித்ராவை கலங்கடித்த நபர்.. காரணம் அதுதானாம்
சென்னை: 90ஸ் காலகட்டத்தில் பல திரைப்படங்களில் நடித்து பிரபலம் அடைந்த நடிகை விசித்திரா சமீபத்தில் முடிவடைந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மூன்றாவது இடத்தை பிடித்திருந்தார்.
அது மட்டுமல்லாமல் பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்து இப்போது சீரியல்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் தன்னுடைய சினிமா வாழ்க்கை மற்றும் சினிமாவால் தான் பட்ட கஷ்டங்கள் குறித்து நடிகை விசித்ரா பேட்டியில் மனம் திறந்து பேசி இருக்கிறார் அது பற்றி பார்க்கலாம்.
நடிகை விசித்ரா ஆரம்ப காலகட்டத்தில் கவர்ச்சியான கேரக்டரிலும், காமெடியான கேரக்டர்களிலும் நடித்து பிரபலமடைந்திருந்தார். அதோடு தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற தென்னிந்திய மொழிகளிலும் நடித்திருந்தார். நடிப்பு மட்டுமல்லாமல் சில திரைப்படங்களில் ஒரு பாடல்களுக்கும் டான்ஸ் ஆடி இருக்கிறார்.
குறிப்பாக விசித்ரா பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் நடிகர் ரஜினிகாந்த் நடித்த முத்து திரைப்படத்தில் செந்திலுக்கு ஜோடியாக இவருடைய நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டு இருக்கும். அதுபோல சேரன் பாண்டியன் திரைப்படத்திலும் இவர் நடித்திருப்பார். இந்த நிலையில் தன்னுடைய திருமணத்திற்கு பிறகு சில வருடங்கள் நடிக்காமல் இருந்த நிலையில் இப்போது மீண்டும் நடிக்க தொடங்கி இருக்கிறார். ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் என்ற சீரியலில் நடித்து வருகிறார்.
அது மட்டுமல்லாமல் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் நான்காவது சீசனில் கலந்து கொண்டு மூன்றாவது இடத்தை பிடித்திருந்தார். இவர் தான் வெற்றி பெறுவார் என்று ரசிகர்கள் ஆரம்பத்தில் இருந்து கூறி வந்தனர். என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பேட்டி ஒன்றில் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த மோசமான நிகழ்வு பற்றி கூறியிருக்கிறார்.
அதாவது நான் 1990 இல் நடிகையாக அறிமுகமான சமயத்தில் வெளியான தலைவாசல் திரைப்படம் பெரிய அளவில் ஹிட் அடித்தது. முதல் படமே எனக்கு பெரிய அளவில் பிரபலமும் கிடைத்தது. அந்த படத்தில் நான் நடித்திருந்த மடிப்பு அம்சா என்ற கேரக்டர் எனக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது.

அந்தப் படத்தின் வெற்றிக்கு பிறகு நான் என்னுடைய அப்பாவோடு ஒரு ஹோட்டலுக்கு சாப்பிட சென்றேன். தலைவாசல் படம் முடிந்த நேரத்தில் எனக்கு வரிசையாக நிறைய பட வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தது. அதனால் பிஸியாகவே இருந்தேன். அப்படியான நேரத்தில் தான் நான் என்னுடைய அப்பாவோட ஹோட்டலுக்கு சாப்பிட போனேன். அப்போ புடவை கட்டிக்கொண்டு போயிருந்தேன்.
அப்போ ஹோட்டலில் நாங்க சாப்பிட அமர்ந்து இருந்த டேபிளுக்கு இரண்டு டேபிள் தள்ளி ஒரு மூன்று பசங்க அமர்ந்து இருந்தார்கள். அதுல ஒருத்தன் மட்டும் இவ என்னடா பெரிய பத்தினி மாதிரி புடவை கட்டிக்கிட்டு வந்து இருக்கா அப்படின்னு கேட்டார். நானும் அப்பாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம். முதலில் அவர் என்ன விதத்துல அப்படி சொன்னார் என்று எனக்கு புரியல. பிறகு தான் எனக்கு தோணுச்சு. தலைவாசல் படத்தில் நான் நடித்த அந்த கதாபாத்திரம் என்னுடைய நிஜ வாழ்க்கையை தாக்கி இருக்கிறது என்று அந்த பேட்டியில் விசித்திரா பேசியிருக்கிறார்.
-
விஜய் டிவியில் மீண்டும் சேரும் பாக்கியலட்சுமி கோபி பாக்கியா.. ஹீரோ யாரு தெரியுமா? பிக் பாஸ் பிரபலம் ஹேப்பி -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு












Click it and Unblock the Notifications