Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சூப்பர் சிங்கர் அஜய் கிருஷ்ணாவிற்க்கு இரண்டாவது குழந்தை பிறந்தது.. உருக்கமான பதிவு! குவியும் கமெண்ட்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் மூலம் பிரபலமான பாடகர் அஜய் கிருஷ்ணா தற்போது தனது குடும்பத்தில் நடந்த ஒரு மகிழ்ச்சியான செய்தியை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். அவருக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது. இதை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் உணர்ச்சிகரமாக பகிர்ந்திருக்கிறார்.

Ajay Krishna Super Singer Vijay TV

அஜய் கிருஷ்ணாவின் பதிவு

அவர் வெளியிட்ட பதிவில் அவர் கூறியிருப்பது, "Our family just got a little bigger, a little louder, and a lot more beautiful. Blessed with a baby... Thank you God for this beautiful gift." இந்த வரிகள் தான் தற்போது ரசிகர்களிடையே அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. குடும்பம் மேலும் அழகாகி விட்டது, இந்த வரம் கிடைத்ததற்கு கடவுளுக்கு நன்றி என்கிற அந்த உணர்ச்சி நிறைந்த வார்த்தைகள், அவரின் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறது.

அஜய் கிருஷ்ணா - குடும்ப வாழ்க்கை

அஜய் கிருஷ்ணா, பாடல்களில் மட்டுமல்லாமல் குடும்ப வாழ்க்கையிலும் மிகவும் செட்டிலாக இருக்கும் ஒருவர். அவரின் மனைவி பிரதிம்மா ஜெஸ்சி (Prathimma Jessy). இந்த தம்பதிக்கு ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை உள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்பே அவர்களின் முதல் குழந்தை பிறந்தபோது கூட ரசிகர்களுடன் அந்த மகிழ்ச்சியை பகிர்ந்திருந்தார். தற்போது இரண்டாவது குழந்தை பிறந்ததன் மூலம், அவர்களின் குடும்பம் முழுமையான மகிழ்ச்சியில் உள்ளது.

யார் இந்த அஜய் கிருஷ்ணா

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானவர். அந்த நிகழ்ச்சியில் தனது குரலால் ரசிகர்களை கவர்ந்தவர். அதிலும் உதித்து நாராயணனைப் போல தத்துரூபமாக பாடி பலரையும் வியக்க வைத்திருந்தார். பின்னணி பாடகராகவும், ஸ்டேஜ் ஷோக்களிலும் பிஸியாக இருப்பவர்.

மெலோடி பாடல்களிலும், லைவ் பெர்ஃபார்மன்ஸ்களிலும் தனக்கென ஒரு ரசிகர் வட்டம் உருவாக்கியவர். சமூக வலைதளங்களிலும் அதிகமாக ஆக்டிவாக இருப்பவர். தனது வாழ்க்கை அப்டேட்ஸ்களை ரசிகர்களுடன் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார்

Ajay Krishna Super Singer Vijay TV

அஜய் கிருஷ்ணா அவருடைய மனைவியை காதலித்து திருமணம் செய்து இருந்தார். சோசியல் மீடியா மூலமாகத்தான் இவர்களுக்குள் நட்பு ஏற்பட்டிருக்கிறது பிறகு இரண்டு குடும்பத்தினரின் சம்மதத்தோடு திருமணம் நடைபெற்று இருக்கிறது. அஜய் கிருஷ்ணாவின் அம்மா சிறு வயதிலேயே இறந்து போன பிறகு அக்காவில் தான் தனக்கு அம்மாவாக இருந்தார்கள் அவர்களுடைய உதவியால் தான் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடிந்தது.

இப்போது தன்னுடைய மனைவிதான் தனக்கு அம்மாவாகவும் குடும்பத்தின் முக்கிய தூணாகவும் மாறி இருக்கிறார் என்று பல இடங்களில் அஜய் கிருஷ்ணா பெருமையாக பேசி இருக்கிறார்.

ரசிகர்களின் வாழ்த்து மழை

அஜய் கிருஷ்ணா இந்த செய்தியை பகிர்ந்ததும், ரசிகர்கள் மட்டுமல்லாமல் பல சின்னத்திரை மற்றும் இசை உலக நண்பர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். "Congrats Ajay anna", "God bless your family", "So happy for you" போன்ற கமெண்ட்களால் அவரது பதிவு நிரம்பி வருகிறது.

சினிமா, ரியாலிட்டி ஷோ, ஸ்டேஜ் பெர்ஃபார்மன்ஸ் என பிஸியாக இருக்கும் அஜய் கிருஷ்ணாவின் வாழ்க்கையில், இந்த புதிய வரவு இன்னும் பெரிய சந்தோஷத்தை சேர்த்திருக்கிறது.

ஒரு கலைஞராக ரசிகர்களின் அன்பை பெற்றவர்... ஒரு குடும்ப மனிதராக இந்த தருணத்தை அனுபவித்து வரும் அஜய் கிருஷ்ணா, தற்போது வாழ்க்கையின் மிக அழகான கட்டத்தை கடந்து செல்கிறார் என்றே சொல்லலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+