Aranmanai Kili Serial: ஹை...அர்ஜுன் நடக்கறான்...இப்போ என்ன செய்வாங்க மீனாட்சி அம்மா?
சென்னை: விஜய் டிவியின் அரண்மனை கிளி சீரியலில் கால் நடக்க முடியாமல் இருந்த அர்ஜுன், வாசுகி பாம்பு வந்து தீண்ட இப்போது நடக்க ஆரம்பிக்கிறான்.
குருஜி ஆஸ்ரமத்தில் அர்ஜுனுக்கு சுவாமிஜி வைத்தியம் பார்க்க ஆரம்பிக்க துர்கா செய்த சதி திட்டத்தால் ,பூ நாகம் ஜானுவைத் தீண்டி, ஜானு பச்சிலை மருந்தை கீழே கொட்டிடறா.
பிறகு காடு, மலை, மேடு, புதை குழி என்று மாட்டி ஜானு கஷ்டப்பட்டு கொண்டு வந்த மூலிகையை அர்ஜுனின் அம்மா மீனாட்சி அம்மா தட்டிவிட, அப்போதும் வைத்தியம் நின்று விடுகிறது.
நாக தேவன்
ஒரு வனத்தில் நாகர் குலம் வசிக்கிறார்கள். அவர்களின் தேவனிடம் ஆசீர்வாதம் வாங்கி வந்து பின்னர், வனத்தில் இருக்கும் அஞ்சு தலை பாம்பு வாசுகிக்கு பூஜை செய்துட்டு வரணும்னு சொல்றார். பின்னர் அந்த வாசுகி பாம்பு வந்து அர்ஜுனன் காலை சுற்றி நன்றாக முறுக்கி விட்டு,சென்றதும் அர்ஜுன் நடப்பான் என்று சொல்கிறார்.
அர்ஜுனும் விரதம்
ஜானு விரதம் இருந்து, அர்ஜுனையும் விரதம் இருக்க வைத்து, நாக தேவர்கள் வசிக்கும் வனத்துக்கு போகிறாள், கணவனுடன். அங்கு தேவர்கள்செய்ய சொன்ன அத்தனை விஷயங்களையும் செய்து, பின்னர் வாசுகி பாம்புக்கு பூஜையும் செய்துவிட்டு நாக தேவர்கள் ஆசியுடன் ஆஸ்ரமத்துக்கு திரும்பி வருகிறார்கள்;.
ஆசிர்வாதமாம் என்னது?
மீனாட்சி அம்மாவிடம் ஜானு சென்று, அம்மா நாளைக்கு நான் அர்ஜுன் சாருக்காக விரதம் இருந்து அக்னி சட்டி ஏந்தி, ஹோம குண்டத்தில் போடப் போறேன்.அப்போதுதான் அந்த வாசுகி பாம்பு வந்து அர்ஜுன் சாரை தீண்டி காலை குணமாக்குமாம். இந்த பூஜை நல்லா நடக்கணும்னு என்னை ஆசீர்வாதம் பண்ணுங்கம்மான்னு ஜானு சொல்ல, காபி டம்ளரை வீசி எறியறாங்க மீனாட்சி அம்மா.
வாசுகி பாம்பு
அஞ்சு தலை வாசுகிப் பாம்பான்னு மீனாட்சி அம்மா கத்திவிட்டு, அர்ஜுனை உடனே கூட்டிகிட்டு வரப் போறேன்னு சொல்ல, சுவாமிஜி முடியாதுன்னு சொல்லி , எல்லாரையும் அனுப்பிடறாங்க. வாசுகி பாம்பு வந்து அர்ஜூனின் கால்களை பின்னிக்குது. பின்னர் போக திரும்புகையில், மீனாட்சி அம்மா அர்ஜூன் என்று ஓடி வர, அவங்களை வாசுகி பாம்பு கொத்திருது. இப்போது அர்ஜுன் நடக்கிறான் என்கிற விஷயத்தை மீனாட்சி அம்மாவிடம் ஜானு சொல்ல போன் செய்ய, அவங்க அதை காதில் கூட போட்டுக்காமல், நீ உடனே என் கண் முன்னாடி வந்து நிற்கணும்னு சொல்றாங்க.