Arjun: அஜித் படத்தோட முடிச்சுகிறேன்! இனி அப்படி நடிக்கவே மாட்டேன்! அர்ஜுன் எடுத்த முடிவு! பாராட்டும் ரசிகர்கள்
சென்னை: சினிமாவில் ஹீரோவின் கேரக்டரை பார்த்து அதே போல நாமும் மாறனும் என்கிற ஆசை பலருக்கு உண்டு. அதேபோல அர்ஜுன் போலீஸ் ஆகவும் மாஸான அதிகாரியாகவும் நடித்து பார்த்திருப்போம். அதேபோல ஆகவேண்டும் என்று பலர் ஆசைப்பட்டு அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். இந்த நிலையில் அர்ஜுன் இனி நான் சினிமாவில் வில்லனாக நடிக்க மாட்டேன் என்று முடிவு எடுத்திருக்கிறார். அது குறித்து அவர் பேசிய பேட்டி தான் இப்போது பலருடைய பாராட்டை பெற்று வருகிறது.
ஆக்சன் கிங் அர்ஜுனுக்கு 90ஸ் காலகட்டத்தில் இருந்து இப்ப வரைக்கும் அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அதிலும் இவர் அதிகமாக சண்டை காட்சிகளில் தத்ரூபமாகவே சண்டை போட்டு மிரள விடுவார். இவருடைய ஃபைட் காட்சி பார்ப்பதற்காக பலர் கண் இமைக்காமல் பார்த்த காலமும் உண்டு. அது போல இவருடைய படங்களில் நாட்டுப்பற்று அதிகமாக இருக்கும். ஜெய்ஹிந்த் படத்தில் ஒரு போலீஸ் அதிகாரியாக வந்து அனைவருடைய மனதையும் ஆக்கிரமித்தவர் தான்.
இப்ப கூட ஒவ்வொரு சுதந்திர தின விழாவிலும், குடியரசு தின விழாவிலும் அந்த பட பாடல்கள் தான் வைரலாகும். அந்தப் பாடலில் நெஞ்சை நிமிர்த்தி கொண்டு அர்ஜுன் நிற்கும் காட்சிகள் பார்க்கும்போதே ஒருவித கம்பீரமான உணர்வு ஏற்படும். ஆனால் சமீப காலமாக அவர் சில திரைப்படங்களில் வில்லனாகவும் நடித்து வருகிறார். அஜித் நடித்த மங்காத்தா படத்தில் வில்லனாக நடிக்க தொடங்கினார். அதற்குப் பிறகு விடாமுயற்சி, லியோ படத்தில் மெயின் வில்லனாகவும் நடித்திருப்பார்.

அர்ஜுன் நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர் என்று பல முகத்தோடு இருந்தாலும் இவருடைய வில்லன் கேரக்டர் பெரிய அளவில் ரசிகர்களுக்கு திருப்தி கொடுக்கவில்லை. இவரை மாஸ் ஹீரோவாகவும் முன்னோடி என்றும் பார்த்த நிலையில் இப்படி மாறிட்டாரே என்பது பலருக்கு வருத்தமாகவும் இருந்து வருகிறது. இது குறித்து அர்ஜுனிடமே பலர் பேசி இருக்கிறார்கள்.
இது பற்றி சமீபத்தில் அவர் ஒரு பேட்டியில் பேசும்போது, அஜித் நடித்த விடாமுயற்சி திரைப்படம் தான் நான் வில்லனாக நடித்த கடைசி படம். அதற்குப் பிறகு நான் வில்லனா நடிக்க மாட்டேன். ஏன்னா அது என்னுடைய ரசிகர்களுக்கு பிடிக்கல. என்னை வில்லனாக பார்க்க முடியலனு சொல்லுறாங்க. உங்களை பாசிட்டிவ்வாவே பார்த்துட்டு ஒரு வில்லனா பாக்குறது பிடிக்கலைன்னு சொல்லுறாங்க.
நான் வில்லனாக நடிச்சதுக்கெல்லாம் எனக்கு விருது கிடைச்சிருக்கு. ஆனாலும் அது என் ரசிகர்களுக்கு பிடிக்கல என்பதால் இனி நான் வில்லனா நடிக்கிறது இல்லை. எத்தனையோ முன்னணி நடிகர்கள் வில்லனாக நடித்திருக்கிறார்கள். ஆனால் அர்ஜுன் நடித்ததை தான் ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
ஏற்கனவே ஒரு பேட்டியில் அர்ஜுன் பேசும்போது, என்னுடைய படத்தை பார்த்து சிலர் போலீஸ் அதிகாரியாகவும் ராணுவத்தில் ஆபிஸர் ஆகவும் மாறியதா சொல்லி இருக்கிறார். ஒருமுறை அர்ஜுன் காரில் போய்க்கொண்டிருக்கும் போது ஒரு அவசர போன் வந்திருக்கிறது. போனை எடுத்து பேசிக் கொண்டே போகும்போது அங்கு டிராபிக் போலீஸ் நின்று இருக்கிறார்கள். காரை நிறுத்தியதும் இவரும் கார் கண்ணாடியை இறக்கி இருக்கிறார்.
அர்ஜுனை பார்த்ததும் அங்கிருந்த போலீஸ்காரர் சார் நீங்களா நீ என்று அதிர்ச்சியடைந்தாராம். பிறகு நீங்க போங்க சார் என்று சொல்லி இருக்கிறார். ஆனால் அர்ஜுனுக்கு தான் ஒரு மாதிரி இருந்துச்சாம். நாம போன் பேசி வண்டி ஓட்டுவது தப்பு தானே அதனால பைன் போட்டுக்கோங்க என்று சொன்னாராம், அப்போது அந்த போலீஸ்காரன் சார் நான் உங்களை பார்த்து தான் போலீஸ் அதிகாரி ஆகணும்னு நினைச்சு எக்ஸாம் எழுதி பாஸ் ஆகி இந்த வேலைக்கு வந்தேன்.
நீங்க எங்களோட முன்மாதிரி சார். அதனால நான் பைன் போடல இனி அப்படி மட்டும் நடந்து கொள்ளாதீங்க என்று சொன்னாராம். இது எனக்கு ரொம்பவும் வருத்தமாவும், சந்தோஷமாகவும் இருந்தது என்று அர்ஜுன் பேசி இருந்தாரு. அதுபோல இவரை ரோல் மாடலாக நினைச்சவங்களுக்கு இவருடைய நெகட்டிவ் கேரக்டர் அதிருப்தியை கொடுத்து இருக்கிறது என்பது உண்மைதான்.
-
“எப்போது என்ன நடக்கும்னு சொல்ல முடியாது! அது வேதனையான சம்பவம்” நடிகை பிரியங்கா மோகன் உருக்கம் -
அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்திற்கு கூட வரலையே.. சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் பிரேக் அப்? -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications