விஜய் டிவியில் மீண்டும் “அது இது எது”.. ஆரம்பமே சிறகடிக்க ஆசை பிரபலங்கள்.. முத்து செய்த அட்ராசிட்டி
சென்னை: விஜய் டிவியில் 2009 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட "அது இது எது" ஷோ மீண்டும் இப்போது புதியதாக ஒளிபரப்பாக இருக்கிறது. இதில் இந்த வாரத்தில் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
நடிகர் "சிவகார்த்திகேயன்" தொகுத்து வழங்கிய அது இது எது நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் "சிரிச்சா போச்சு" என்ற ரவுண்டு பெரிய அளவில் பேசப்பட்டது. அது இப்போது மீண்டும் தொடங்கப்பட்டிருக்கும் நிலையில் மக்கள் மத்தியில் இந்த நிகழ்ச்சிக்கு அதிகமான வரவேற்பு இருக்கிறது.

அதே நேரத்தில் விஜய் டிவியில் டிஆர்பியில் முதலிடத்தில் இருக்கும் சிறகடிக்க ஆசை சீரியல் குழுவினர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருப்பது நிகழ்ச்சிக்கு மேலும் வரவேற்பை ஏற்படுத்துகிறது. இந்த நிகழ்ச்சியில் அமுதவாணன், ராமர், நாஞ்சில் விஜயன் உட்பட இன்னும் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
சிறகடிக்க ஆசையில் டுவிஸ்ட்.. அடுத்து நடக்கப்போவது? முத்து கொடுத்த அப்டேட்.. பிரச்சனை நடந்துடுச்சா?
அந்த வகையில் விஜய் டிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது. அந்த வகையில் ஒரு நிகழ்ச்சி தான் அது இது எது நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியை ஆரம்பத்தில் சிவகார்த்திகேயன் தான் தொகுத்து வழங்கி வந்தார். இந்த நிகழ்ச்சியின் மூலமாகவே இவருக்கு பெரிய அளவில் ரசிகர்கள் வட்டாரம் அதிகரித்தது.

ஆரம்பத்தில் விஜய் டிவியில் போட்டியாளராக கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் பிறகு தொகுப்பாளராக மாறி இருந்தார். இப்போது வெள்ளி திரையில் முன்னணி நடிகராக ஜொலித்துக் கொண்டிருக்கிறார். இப்படியான நிலையில் இந்த நிகழ்ச்சியை அதிகமான ரசிகர்கள் மிஸ் பண்ணி வந்தனர். மீண்டும் இது போன்ற ஒரு சிரிப்பு நிகழ்ச்சி வேண்டும் என்று பலர் ஃபீல் பண்ணி வந்திருந்த நிலையில் இப்போது இந்த நிகழ்ச்சியை பட்டி டிங்கரிங் செய்து மீண்டும் ஒளிபரப்புகின்றனர்.

அதில் இந்த வார சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருக்கும் சிறகடிக்க ஆசை சீரியல் முத்து, மீனா, விஜயா மற்றும் ரோகினி போன்றார் நிகழ்ச்சியில் செம ஆட்டம் போட்டு இருக்கின்றனர். அப்போது "சிரிச்சா போச்சு" என்ற ரவுண்டில் எல்லோரையும் சிரிக்க வைப்பதற்காக அமுதவாணன், ராமர், நாஞ்சில் விஜயன் போன்றோர் காமெடி செய்து கொண்டிருக்கின்றனர்.
ஆனால் மீனா யார் என்ன காமெடி செய்தாலும் நான் சிரிக்க மாட்டேன் என்று கெத்து காட்டிக் கண்டிருக்கும் போது, முத்து அங்கு சிரித்து ரகளை செய்து கொண்டிருந்தார். இந்த ப்ரோமோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications