ராதிகா வேலைக்கு ஆப்பு வைத்த பாக்கியா..பழனிச்சாமி கேட்ட கேள்வி..கடுப்பாகும் ஈஸ்வரி..திடீர் திருப்பம்
சென்னை: பாக்கியாவை ராதிகா ஆபீஸில் காக்க வைத்து அவமானப்படுத்த பாக்கியா கோபம் ஆகிறார்.
அங்கு வரும் எம்டி இடம் ராதிகாவை பற்றி பாக்கியா போட்டு கொடுக்க ராதிகா மன்னிப்பு கேட்கிறார்.
பாக்கியா சோகமாக இருப்பதை பார்த்து அதற்கு காரணம் ராதிகா தான் என்று தெரிந்து ஈஸ்வரி ராதிகாவை திட்டுகிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் மே 23ஆம் தேதிக்கான எபிசோட் ஆரம்பத்தில் பாக்கியா ஆபீஸில் ராதிகா ரூம்பிற்கு வெளியே காத்துக் கொண்டிருக்க ராதிகா வேண்டும் என்று பாக்யாவை அலட்சியம் செய்து கொண்டு அங்கே இங்கே என அழைத்துக் கொண்டிருக்கிறார்.

பின்னர் பாக்யா என்னை எதற்காக அழைத்தீர்கள் என்று மீண்டும் கேட்க சும்மாதான் உங்களை கூப்பிட்டேன். சாப்டீங்களா என்று நலம் விசாரிக்க அதனால் கடுப்பாகும் பாக்கியா எதற்காக என்னை இப்படி செய்றீங்க என்று கேள்வி கேட்க, நம்ம ரெண்டு பேருக்கும் நல்ல பாண்டிங் வர வேண்டும் என்று நான் இப்படி செய்கிறேன் என்று நக்கலாக சிரிக்கிறார். இதனால் கடுப்பாகி வெளியே வரும் பாக்கியா அப்போது செல்வி போன் பேச அவரிடம் பேசிக் கொண்டிருக்கிறார்.
அந்த நேரத்தில் அங்கே ஆபீஸ் எம்டி வருவதை பார்த்து அவரிடம் சார் கொஞ்சம் பேச வேண்டும் என்று சொல்ல, என்ன பேச வேண்டும் சொல்லுங்க என்று அவரும் கேட்க கேண்டினில் ராதிகா அடிக்கடி இது நல்லா இல்ல, அது நல்லா இல்லன்னு சொல்லிகிட்டே இருக்காங்க. இதெல்லாம் பொறுத்துக்கிட்டு தான் நான் இருந்தேன்.. இதெல்லாம் சின்ன சின்ன விஷயங்களுக்காக கோவப்படக்கூடாதுன்னு நெனச்சுக்கிட்டு இருந்தேன்.
ஆனால் இன்று என்னை வெயிட் பண்ண வச்சு காலையில என்ன சமைச்சீங்க என்று என கேள்வி கேட்கிறாங்க என்று சொல்ல, அப்படி எல்லாம் செய்றவங்க ராதிகா கிடையாது என்று எம்டி சொல்ல, செய்கிறார்களே சார் என்று பாக்கியா சொல்ல நான் பேசுறேன் என்று ராதிகாவை போனில் வர வைத்து ராதிகாவிடம் விசாரிக்கிறார்.
ராதிகா ஆரம்பத்தில் இல்லை சார் நான் எதுவும் தப்பாக பேசவில்லை என்று சொல்ல, உங்களுக்கு இருக்கும் பர்சனல் கோபங்களை இங்கே காட்டக்கூடாது என்று ராதிகாவை எம்டி திட்ட பிறகு ராதிகா மன்னிப்பு கேட்டுவிட்டு இனி அப்படி செய்ய மாட்டேன் என்று கூறிக்கொண்டு வெளியே வருகிறார். வெளியே பாக்யாவிடம் என்ன போட்டு கொடுக்கிறீங்களா என்று கேட்கிறார்.
நீங்க பண்ற டார்ச்சர் எல்லாம் பொறுத்துக்கிட்டு இருக்கிறதுக்கு எனக்கு தேவையில்ல. சார் சொன்னதை கேட்டீங்க இல்ல இனிமே நீங்க ஏதாவது வம்பு பண்ணுனா என்னோட அடி பயங்கரமா இருக்கும் என்று கோபமாக பேசிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார்.

அடுத்ததாக ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாசுக்கு வந்த பாக்யா சந்தோஷமாக இருப்பதை பார்த்து எல்லோரும் என்ன என்று கேட்க, ரொம்ப நாளா முடிக்காமல் இருந்த ஒரு பிரச்சனைக்கு இன்று முடிவு வந்துவிட்டது என்று கூறுகிறார். பிறகு அங்கு இருக்கும் டீச்சர் இன்று கான்வகேஷன் ஆரம்பிக்கலாம் என்று சொல்ல பழனிச்சாமி நான் வருகிறேன் என்று ஒவ்வொரு வரிடமும் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார்.
பிறகு பழனிச்சாமி பாக்கியாவிடம் இங்கிலீஷில் காலையில் என்ன சமைச்சீங்க என்று கேள்வி கேட்க, அதற்கு பதில் சொல்ல முடியாமல் முதலில் பாக்கியா திணறிக் கொண்டிருக்க பிறகு கொஞ்சம் கொஞ்சமாக யோசித்து பேசி சமாளிக்கிறார்.
அடுத்ததாக வீட்டிற்கு வரும் பாக்கியா எல்லோரிடமும் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது பாக்கியா டல்லாக இருப்பதைப் பார்த்த எழில் நீ நல்லா இருக்கியா மா என்று கேட்க, நல்லாத்தான் இருக்கிறேன் என்று சொல்லிக் கொண்டிருக்க மீண்டும் மீண்டும் துருவி கேட்டுக் கொண்டிருக்க, ஆபீஸில் ராதிகா செய்ததை பற்றி பாக்கியா சொல்ல இன்னைக்கு ராதிகா வரட்டும் நான் பார்த்துக்கொள்வேன் என்று ஈஸ்வரி கோபமாக திட்டுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
இதுவும் கடந்து போகும்.. பாடலாசிரியர் கார்த்திக் நேத்தாவின் மறுபக்கம்.. நீயா நானாவில் கண் கலங்கிய அம்மா -
நீயா நானாவில் யாமினி சொன்ன காதல் கதை.. கண்கலங்கி நின்ற கோபி நாத்.. கடைசியில் சொன்ன ‘நச்’ அட்வைஸ் -
சித்திரை திருநாளில் கிடைத்த பரிசு.. இரண்டு வருடம் கழித்து பிறந்த குழந்தை.. பிரதீப் ஆண்டனி நெகிழ்ச்சி பதிவு -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications