அமிர்தாவை தேடி வந்த கணேசன்.. மறுபக்கம் மாலினி வீட்டில் சிக்கிய செழியன்.. பாக்யா சொன்ன வார்த்தை

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் செப்டம்பர் 30ம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.

அதில் செழியன் வீட்டிற்கு வராமல் மாலினி வீட்டில் இருப்பது பற்றி பாக்யாவுக்கு தெரிய வருகிறது.

Baakiyalakshmi Serial 2023 September 30th episode full update

அதே நேரத்தில் பாக்யா கேட்டரிங் விஷயத்தில் தோற்றுப் போனதை வைத்து கோபி அவமானப்படுத்த கடைசியில் அவருக்கு பாக்யா பதிலடி கொடுக்கிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் பாக்கியா சோகமாக உட்கார்ந்து இருக்க, வெளியே போயிட்டு அமிர்தாவும் எழிலும் வீட்டிற்கு வருகின்றனர். அப்போது எழில் பாக்கியாவிற்கு ஆறுதல் கூறி சாப்பிட வைக்கிறார். இனி வீட்டு கஷ்டம், பண விஷயத்தை பற்றி கவலைப்படாதம்மா நான் இருக்கிறேன். என்னால் முடிந்ததை நான் செய்கிறேன் என்று எழில் சொல்லிக் கொண்டிருக்க அதற்கு பாக்கியா சந்தோஷப்படுகிறார்.

Baakiyalakshmi Serial 2023 September 30th episode full update

அதைத்தொடர்ந்து கணேசன் அமிர்தாவை தேடி சென்னைக்கு போனதால் அவருடைய பெற்றோர் என்ன செய்வதென்று தெரியாமல் பேசிக்கொண்டு இருக்கின்றனர். அதோடு இந்த பிரச்சினையை பற்றி அமிர்தாவிடம் சொல்லலாமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருக்கின்றனர். அதைத்தொடர்ந்து செழியன் மாலினியுடன் அவருடைய வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்.

அப்போது பாக்கியா செழியனுக்கு போன் செய்கிறார். அப்போது செழியனிடம் எங்கே இருக்கிறாய் என்று பாக்யா கேட்க, அதற்கு நான் ஆபீஸில் தான் இருக்கிறேன் என்று சொல்கிறார். அந்த நேரத்தில் மாலினி வந்து தண்ணீர் வேண்டுமா என்று செழியனிடம் கேட்க, அந்த குரல் பாக்யாவிற்கு கேட்டு விடுகிறது. அதற்கு பாக்யா செழியனை நீ உடனடியாக வீட்டுக்கு வரவேண்டும் என்று சொல்கிறார்.

Baakiyalakshmi Serial 2023 September 30th episode full update

பிறகு செழியன் வீட்டிற்கு வந்து விட உனக்கு ஒரு பொண்டாட்டி இருக்கா, குழந்தை வரப்போகுது அதை எல்லாம் மறந்துடாத. நான் ஏற்கனவே கேள்வி கேட்காமல் விட்டு தான் என்னுடைய நிலைமை இப்படி ஆயிடுச்சு. நீ என்னுடைய மூத்த மகன் உன்னுடைய கடமையை மறந்துடாத என்று அட்வைஸ் கொடுக்கிறார். அதற்கு செழியன் நான் எந்த தப்பும் பண்ணலாமா என்று சமாளித்துவிட்டு அந்த இடத்தை விட்டு போகிறார்.

Baakiyalakshmi Serial 2023 September 30th episode full update

அதைத் தொடர்ந்து அடுத்த நாள் பாக்கியா தெருவில் சென்று கொண்டிருக்கும்போது கோபி வந்து நக்கல் அடிக்கிறார். அப்போது பாக்கியா இப்படியே என்னுடைய நிலைமை இருந்திடாது. கண்டிப்பா என்னுடைய நிலைமை மாறும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அதற்கு கேண்டின் கைவிட்டுப் போயும் பாக்கியாவிற்க்கு திமிர் மட்டும் குறையவில்லையே என்று கோபி நக்கல் அடித்து விட்டு அந்த இடத்தை விட்டு போகிறார். அப்போது பாக்கியாவும் செல்வியும் யோசித்தபடி நிற்கின்றனர். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+