பாக்கியலட்சுமி: ஈஸ்வரி மீது விழுந்த கொலை பழி.. பாக்யா வேற இப்படி சொல்றாங்க! ராதிகா கொடுத்த அதிர்ச்சி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஜூன் 19ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் ராதிகாவிற்கு வயிற்றில் அடிபட்டதால் கரு கலைந்து விட்டது என்று மருத்துவமனையில் சொல்ல அதை கேட்டு கோபி அதிர்ச்சியாகி இருக்கிறார். அப்போது ராதிகா ஈஸ்வரி மீது குற்றச்சாட்டை வைத்திருக்கிறார்.
அந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் டாக்டர் ராதிகாவை பரிசோதனை செய்து கொண்டிருக்க வெளியில் எல்லோரும் பதற்றத்தோடு இருக்க, கோபி அம்மாவுக்கு ஒன்னும் ஆகாது என்று மயூவிடம் ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கிறார். அப்போது கமலா அது எப்படி எதுவும் ஆகாமல் இருக்கும் வயிற்றில் பிள்ளையை வைத்துக்கொண்டு கீழே விழுந்து இருக்கா என்று கோபப்படுகிறார்.

பிறகு டாக்டர் கோபியையும் கமலாவையும் உள்ளே கூப்பிட்டு குழந்தை கலைந்து விட்டதாக சொல்ல, இருவரும் அதிர்ச்சி அடைகின்றனர். வெளியில் வந்த கமலா மயூவை பிடித்துக் கொண்டு உனக்கு தம்பியோ தங்கச்சியா வரும்னு ஆசையாக காத்திருந்தேன். இப்ப எதுவும் இல்லாமல் போயிடுச்சு என்று கதறி அழுகிறார். பிறகு ராதிகாவை பார்க்க போன கோபி கையை பிடித்துக் கொண்டு ஆறுதல் சொல்ல போக ராதிகா உங்களை பார்க்கவே புடிக்கல,

இந்த குழந்தை வேண்டாம் என்று சொன்னீங்க இப்போ எதுவும் இல்லாம போயிடுச்சு என்று கோபப்படுகிறார். கமலா எல்லாத்துக்கும் காரணம் உங்க அம்மா தான் என்று அதிர்ச்சி கொடுக்க கோபி வாய்க்கு வந்ததெல்லாம் பேசாத எங்க அம்மா அப்படி எதுவும் செய்ய மாட்டாங்க என்று சொல்ல அவங்க ராதிகா கீழே விழும்போது பின்னாடி நின்னுட்டு இருந்தாங்க என்று கமலா சொல்ல, ராதிகா யோசித்துப் பார்த்து அவங்க தான் என்ன புடிச்சு தள்ளுனாங்க என்று கோபியிடம் கோபப்படுகிறார்.

வெளியே வந்த கோபி ஈஸ்வரி ஏற்கனவே சொன்ன விஷயங்களை நினைத்து பார்த்து அம்மா தான் இப்படி பண்ணிட்டாங்களா என்று நம்புகிறார். அந்த நேரத்தில் ஈஸ்வரி போன் போட்டு ராதிகாவிற்கு என்ன ஆச்சு குழந்தைக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே என்று கேட்க கோபி எப்படி எதுவும் ஆகாமல் இருக்கும்? அந்த குழந்தையே இல்லாமல் போயிடுச்சு. இப்போ உங்களுக்கு சந்தோஷமா? என்று திட்டுகிறார்.

இதை அடுத்து ஈஸ்வரி பாக்யாவிடம் வந்து விஷயத்தை சொல்லி நான் தான் காரணம் என்று சொல்றாங்க என்று புலம்ப பாக்கியா அவர் ஏதோ வருத்தத்தில் சொல்றார். நீங்க அதை எல்லாம் பெருசா எடுத்துக்காதீங்க, அந்த வீட்டில யாருமே இல்ல நீங்க எங்க வீட்டுக்கு வாங்க என்று கூப்பிட அதற்கு ஈஸ்வரி வேண்டாம் நான் அந்த வீட்டுக்கு போறேன் என்று கிளம்பி போகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications