ஜெனி கேட்ட சரியான கேள்வி! இது பலருக்கும் பாடம்.. கடைசியில் ரசிகர்கள் சொன்னதே நடந்துவிட்டது!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் மார்ச் 28ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அந்த வகையில் மன்னிப்பு கேட்ட செழியனிடம் ஜெனி நடந்து கொண்ட விதம் இன்று அனைவரையும் பாராட்ட வைத்திருக்கிறது. இதுவரைக்கும் இந்த சீரியலில் பல சொதப்பல்கள் நடந்திருந்தாலும் இன்று செழியன் மற்றும் ஜெனி பேச்சுவார்த்தை தெளிவாக இருந்தது.

அதே நேரத்தில் செழியன் மற்றும் ஜெனி பிரச்சனை இன்றைய எபிசோடில் முடிவுக்கு வந்திருக்கிறது. இதை தொடர்ந்து இனி பாக்யாவிற்கு என்ன பிரச்சனை வரப்போகிறது என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கலாம். ஆனால் இனி பாக்கியா பிசினஸில் தான் பிரச்சனை வர இருக்கிறது.

Baakiyalakshmi Serial march 28th promo and episode full update

அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் செழியனும் ஜெனியும் ஒரே ரூமுக்குள் ஒருவரை ஒருவரை பார்த்ததும் ஜெனி கோபப்பட்டு நீ தான் வெளியே பூட்டிட்டு வந்தியா என்று திட்ட அதற்கு செழியன் வெளியே பூட்டிட்டு எப்படி உள்ளே வர முடியும்? என்று பதில் சொல்ல, அதற்கு நீ என்ன வேணாலும் பண்ணுவே என்று ஜெனி கோபப்படுகிறார். அதோடு கதவை திறக்க சொல்லி கத்தி கொண்டு இருக்க, செழியன் இதுவரைக்கும் நான் எவ்வளவோ முறை உன் கிட்ட பேச முயற்சி பண்ணுனேன்.

Baakiyalakshmi Serial march 28th promo and episode full update

ஆனா என்னால பேச முடியல இந்த முறை தயவு செய்து நான் பேசுவதை கொஞ்சம் கேளு என்று கெஞ்ச அதற்கு ஜெனி கோபப்படுகிறார். உன்னை எனக்கு எவ்வளவு வருஷமா தெரியும்? எவ்வளவு லவ் பண்ணி போராடி கல்யாணம் பண்ணுனோம் அப்படி இருந்தும் உனக்கு அந்த மாலினி முக்கியமா போயிட்டாளா? என்று ஜெனி கோபப்பட்டு கத்த அதற்கு செழியன் நான் செஞ்சது தப்புதான் என்ன மன்னிச்சிடு என்று காலில் விழுந்து கெஞ்ச அதற்கு ஜெனி மன்னிக்க முடியாது என்று சொல்கிறார்.

Baakiyalakshmi Serial march 28th promo and episode full update

அதற்கு செழியன் நீ இல்லன்னா நான் செத்துப் போயிருவேன் என்று சொல்ல, அதற்கு ஜெனி நான் உன் கூட இருந்தா செத்துப் போயிடுவேன் என்று சொல்லி கத்தி பேசுகிறார். இதையெல்லாம் வெளியே இருந்து பாக்யா, எழில், மரியம் எல்லோரும் கேட்டு பதறுகிறார்கள். ஜெனி கதவைத் தட்ட மரியம் கதவை திறக்கப் போகிறார். அதற்கு பாக்யா வேண்டாம் கொஞ்சம் வெயிட் பண்ணலாம் என்று சொல்லுகிறார்.

பிறகு செழியன் நான் என்ன பண்ணா என்னை நம்புவே என்று சொல்லி கெஞ்ச அதற்கு ஜெனி நீ என்ன பண்ணாலும் நான் நம்ப மாட்டேன் என்று சொல்ல, மறுபடியும் செழியன் காலில் விழுந்து கெஞ்சுகிறார். அதற்கு ஜெனி பளார் பளார் என்று கன்னத்தில் அறைகிறார். அதோடு உனக்கு எப்படி எனக்கு துரோகம் பண்ண மனசு வந்து என்று மீண்டும் ஜெனி கேட்டு அழுகிறார்.

Baakiyalakshmi Serial march 28th promo and episode full update

பிறகு இருவரும் மாறி மாறி குற்றம் சொல்கின்றனர். அதற்கு ஜெனி இதெல்லாம் ஒரு காரணமாக நீ சொல்லுவியா? என்று மீண்டும் சொல்லி செழியனை அடிக்கிறார். பிறகு அங்கே அமைதி நிலவ வெளியே இருப்பவர்கள் பயந்து போய் என்ன ஆச்சுன்னு தெரியலையே என்று கதவை திறந்து பார்க்க, அங்கே செழியன் ஜெனியும் கட்டிப்பிடித்து நிற்க அதை பார்த்து குடும்பத்தினர் சந்தோஷப்படுகின்றனர். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+