For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வெண்பாவின் நாடகத்தை போட்டு உடைத்த ஹேமா..ரோகித்தின் எதிர்பார்க்காத முடிவு.. பரபரப்பான கடைசி கட்டம்

Google Oneindia Tamil News

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மாவில் ஹேமா தற்கொலை செய்யப் போகிறேன் என மருத்துவமனை மொட்டை மாடியில் ஏறி நின்று கொண்டு அனைவரையும் மிரட்டிக் கொண்டிருக்கும்போது அங்கே வந்த வெண்பா மொத்த உண்மையை போட்டு உடைத்து இருக்கிறார்.

கடைசி நேரத்தில் வந்து பாரதி உண்மையை சொன்னாலும் மொத்த குடும்பத்திற்கும் ஹேமா சொன்ன வார்த்தையால் எதிர்பாராத அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

நினைத்தது நடக்காத ஏமாற்றத்தில் ராதிகா.. அதிர்ச்சி கொடுக்கும் கோபி.. எழில் பாட்டியால் அடுத்த பிரச்சனைநினைத்தது நடக்காத ஏமாற்றத்தில் ராதிகா.. அதிர்ச்சி கொடுக்கும் கோபி.. எழில் பாட்டியால் அடுத்த பிரச்சனை

ஹேமா செய்த எதிர்பாராத செயல்

ஹேமா செய்த எதிர்பாராத செயல்

பாரதி கண்ணம்மா சீரியலின் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் மருத்துவமனையில் இருக்கும் ஹேமா நர்சிடம் தனக்கு ட்ரிப்ஸை கழட்டி விட சொல்கிறார். கழட்டிவிட்டதும் ஹேமா தான் அப்பா யார் என்று கேட்டால் அம்மாவும் சொல்ல மாட்டேன் என்கிறார். சொல்ல வந்த பாட்டியையும் சொல்ல விடமாட்டேன் என்கிறார் ஏன் நான் தெரிந்து கொள்ளக்கூடாது என்று இவர்கள் நினைக்கிறார்கள். இன்று இதை நான் எப்படியாவது தெரிந்து கொள்ள வேண்டும் என்று பெட்டில் இருந்து எழுந்து வெளியே சௌந்தர்யா மற்றும் வேணு அமர்ந்திருக்க அவர்கள் இருவருக்கும் தெரியாமல் லிப்டில் ஏறி மொட்டை மாடிக்கு சென்று விடுகிறார்.அங்கே மொட்டை மாடியில் யாரும் உள்ளே வராத வகையில் டோரை லாக் செய்துவிட்டு மொட்டை மாடி உச்சியில் ஏறி நின்று கொண்டிருக்க வாட்ச்மேன் பார்த்து கீழே வா என்று கத்திக் கொண்டிருக்கிறார்.

மீண்டும் அதே கேள்வி

மீண்டும் அதே கேள்வி

மருத்துவமனையில் இருப்பவர்கள் அனைவரும் அங்கே கூடிவிட கண்ணமாவிடம் நர்ஸ் ஓடிவந்து விஷயத்தை சொன்னதும், கண்ணம்மா அங்கே சென்று கதறிக்கொண்டு ஹேமாவை கீழே வா என அழைக்க, ஹேமா நான் வரமாட்டேன், என்னுடைய அப்பா யார் என்று மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருக்கிறார். அடுத்ததா சௌந்தர்யாவும், வேணும் அங்கே வருகின்றனர். அவர்கள் அகிலனுக்கு போன் செய்து அகிலனும் அஞ்சலியோடு அங்கே வருகிறார். மொத்த குடும்பமும் கெஞ்சி கொண்டிருக்கின்றனர்.

ரோகித்தின் கேள்வி

ரோகித்தின் கேள்வி

அதே நேரத்தில் வெண்பாவின் அறையில் டாக்டர் வந்து பரிசோதித்துக் கொண்டிருக்கும் போது, வெண்பா தெரியாமல் ஏதோ ஒரு கோபத்தில் செய்துவிட்டேன் என்று கூறிக் கொண்டிருக்கிறார் அப்போது ரோகித் மற்றும் ஷர்மிளா வெண்பாவை நல்லா திட்டுங்க என டாக்டரிடம் சொல்லிக் கொண்டிருக்கும்போது மருத்துவமனையில் இருப்பவர்கள் எல்லாம் ஓடுவதை பார்த்து இவர்களும் ஓடி சென்று வெளியே நின்று பார்க்க, அங்கே ஹேமா மேலே நிற்பதை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். ரோகித் மற்றும் சர்மிளா கீழே வா என ஹேமாவிடம் கத்தி கொண்டு இருக்க, நான் வரமாட்டேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். எதற்காக இப்படி செய்கிறாள் என்று ரோகித் கேட்க என்னுடைய அப்பா யார் என்று சொன்னால் தான் நான் வருவேன் என்று ஹேமா சொல்கிறார். இதை பார்த்த வெண்பா சிரிப்பு சிரித்துக் கொண்டிருக்கிறார்.

மொத்த உண்மையும் தெரிந்தது

மொத்த உண்மையும் தெரிந்தது

எல்லோரும் சமாதானம் செய்தாலும் ஹேமா அதை ஏற்றுக் கொள்ளாமல் இந்த வெண்பா தான் உங்க அம்மா மோசமானவள், உனக்கு அப்பா யார் என்றே தெரியாது. உங்க அம்மாவுக்கே அப்பா யார் என்று தெரியாது, நீ அப்பா பேரு தெரியாத பிள்ளை என்று என்னை பார்த்து சொன்னார் என்று சொன்னதும் மொத்த குடும்பமும் அதிர்ச்சியாகின்றனர். அடுத்து ரோகித் வெண்பாவை திட்டுகிறார். குழந்தை இடம் எப்படி பேச வேண்டும் என்று உனக்கு தெரியாதா? நீ எல்லாம் ஒரு பொண்ணா என்று திட்டிக் கொண்டிருக்க, கண்ணம்மா என்னை யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை, நீ கீழே வா என்று சொல்லிக் கொண்டிருக்க, அப்போது அங்கே பாரதி வந்து சேர்க்கிறார். பாரதி ஹேமா நிற்பதை பார்த்து அதிர்ச்சியாகி கதறி அழுகிறார். நான்தான் உன்னுடைய அப்பா கீழே வந்துவிடு என்று கெஞ்சி கொண்டிருக்கிறார். இங்கே இருக்கிற கண்ணம்மா நான் தொட்டு தாலி கட்டின என்னுடைய பொண்டாட்டி. நீயும் லட்சுமியும் தான் என்னுடைய சொந்த பிள்ளைகள் என்று தரையில் முழங்கால் இட்டு அழுகிறார். நீங்கள் சொல்வதை நான் நம்ப மாட்டேன் என்று சொல்லி லட்சுமி இடம் கேட்க லட்சுமி ஆமா இவர்தான் நம்முடைய அப்பா என்று சொல்கிறார். லட்சுமி மற்றும் குடும்பத்தினர் அனைவரையும் இதே பதிலை சொல்வதால் நம்பிய ஹேமா நான் கீழே வரேன். ஆனால் எப்படி இறங்க வேண்டும் என்று எனக்கு தெரியலையே என சொல்ல, அனைவருக்கும் பெரிய அதிர்ச்சி கிடைக்கிறது. ஏற்கனவே மாடிப்படிக்கு செல்லும் கதவை அகிலன் உட்பட மருத்துவமனையில் இருக்கும் அனைவரும் உடைத்துக் கொண்டிருக்கும் போது ஹேமாவோடு இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

English summary
In Bharthi Kannamma aired on Vijay TV, when Hema is standing on the terrace of the hospital and threatening everyone that Hema is going to commit suicide, Venba comes there and breaks the whole truth.Bharthi comes at the last moment and tells the truth, but Hema's words give an unexpected shock to the entire family.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X