பிரியங்காவுக்கு சளைத்தவரல்ல தாமரை..வெளுத்து வாங்கிய பிக் பாஸ் அணி
சென்னை: இன்று இரவு பிக்பாஸ் நிகழ்ச்சியில் நியூ இயர் செலிப்ரேஷன் மிக சிறப்பாக கொண்டாடி உள்ளனர்.
ஆட்டம் பாட்டத்துடன் பிக்பாஸ் போட்டியாளர்கள் கொண்டாடி வருவதை பார்க்கும் போது நிகழ்ச்சிக்கு விறுவிறுப்பு கூடியது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
அன்சீனில் கலக்கல்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய அன்சீன் ப்ரமோவை பார்த்து ரசிகர்கள் என்ஜாய் பண்ணி வருகின்றனர். என்ன தான் எபிசோடுகளில் போட்டியாளர்கள் அடித்துக் கொண்டிருந்தாலும் இன்றைய அன்சீனில் போட்டியாளர்கள் போட்ட ஆட்டத்தை பார்த்ததும் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக தான் இருந்து வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல நேரங்களில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் எபிசோடுகளில் சண்டைக் காட்சிகளை மட்டுமே ஒளிபரப்பாகி வருகின்றனர். ஆனால் அன்சீனில் தான் ரசிகர்களை கவர்ந்த பல சுவாரசியமான நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது என்று கூறி வருகின்றனர்.
இருவரும் சளைத்தவர் அல்ல
நேற்றைய எபிசோடுகளில் டிக்கெட் டு பினாலே டாஸ்க்கில் டிக்கெட்டை வெல்வதற்காக போட்டியாளர்கள் போட்டி போட்டுக்கொண்டு அடிதடியில் இறங்கி இருந்தனர். இதனால்தான் இந்த நிகழ்ச்சிக்கு சுவாரஸ்யமே இல்லை என்று பலர் கூறிக் கொண்டிருந்த நேரத்தில் இன்றைய எபிசோடு காண புரோமோ ரசிகர்களை கவர்ந்துள்ளது. நேற்றைய எபிசோடுகளில் அடிபிடி என ஆரம்பித்து பிரியங்காவும் தாமரைச் செல்வியின் இன்று டான்ஸ்ஸராகவும் பட்டையைக் கிளப்பிக் கொண்டு இருக்கின்றனர். இவர்களில் இருவரும் சளைத்தவரல்ல என்று நிரூபித்து வருகின்றனர்.
தொடங்கிய கொண்டாட்டம்
பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைவதற்கு இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில் நேரடியாக பைனலுக்கு செல்லும் போட்டியாளர்களாக டாஸ்க்குகள் இந்த வாரத்தில் நடைபெற்றது. தற்போது அதற்கான டிக்கெட்டை அமீர் வெற்றி பெற்றுள்ள நிலையில் சக போட்டியாளர்கள் இனி போராடித்தான் கடைசிக் கட்டத்திற்கு முன்னேற வேண்டும். இந்த நிலையில் இன்று நியூ இயர் செலிப்ரேஷன் சிறப்பாக கொண்டாட பிக்பாஸ் அனுமதி கொடுத்திருக்கிறது.
Recommended Video
பிரியங்காவின் கொண்டாட்டம்
இவர்களின் ஆட்டத்தை பார்த்து இதுதான் பார்ட்டி பீலிங்கா என்று பிரயங்கா கூக்குரலிட அதை பார்த்து அவருடைய ரசிகர்கள் என்ஜாய் பண்ணி வருகின்றனர். இந்த வாரம் முழுக்க சண்டை சச்சரவுகளை பார்த்துக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு இன்றைய டான்ஸ் நிகழ்ச்சிகள் எனர்ஜி ஊட்டுவதாக இருக்கிறது என்று பலர் கமெண்டுகளை கூறி வருகின்றனர்.