அமீரின் மாஸ்டர் பிளான்... மாட்டிக்கொண்ட சிபி...இது வேற லெவல் மூவ் தான்
சென்னை: தன்னுடைய மனநிலையை கூறி அமீர் பேசியதை பார்த்து சிபியின் மனதில் இவ்வளவு மாற்றமா??
இதுதான் வேற லெவல் திறமை என்று அமீரின் முயற்சியைப் பார்த்து ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

அமீரின் புது முயற்சி
பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் டாஸ்க் ஆக கேஸ் பெட்டி டாஸ்க் இருந்து வருகிறது. இந்த பெட்டியை தூக்கிக்கொண்டு நடக்க போவது யார் என்று ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு கூடி இருக்கும் நிலையில் தற்போது ஒவ்வொரு போட்டியாளரும் செய்யும் செயல்கள் வேற லெவல் இருந்து வருகிறது என்று கூறி வருகின்றனர். பணத்தின் மீது தனக்கு இருக்கும் கண்ணை எடுக்க விடாமல் அடுத்தவர்களை அதை தூக்கி வைக்கும் முயற்சியில் அமீர் ஈடுபட்டுள்ளார்.

நிரூப்பின் எடுபடாத முயற்சி
கடந்த வாரத்தில் நடந்த டாஸ்க்கில் ஜெயித்து நேரடியாக பைனலுக்கு செல்லும் டிக்கெட்டை அமீர் பெற்றிருந்தாலும், இந்த வாரம் யார் பெட்டியை தூக்கிக் கொண்டு நடையைக் கட்ட போவது என்பது யாருக்கும் புரியாத புதிராக இருந்து வருகிறது. இதில் எப்படியும் தனக்கு போட்டியாக இருக்கும் போட்டியாளர்களை வெளியேற்றிவிட வேண்டும் என்று ஒவ்வொரு போட்டியாளர்களும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். அதனால்தான் நிரூப் ஆரம்பத்தில் அனைவரிடமும் மனமாற்றம் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

அமீரின் அழுத்தமான கருத்து
நான் உண்மையா எடுத்துட்டு போலாம்னு பிளான் பண்ணியிருக்கிறேன். நான் டிக்கெட் ஃபினாலே ஜெயித்ததால் அடுத்த வாரம் பினாலே போயிருவேன் தெரியும். பிராக்டிகலா யோசிக்கும்போது வின் பண்ண வாய்ப்பேயிலலை என்று தெரிகிறது என்று கூறியிருக்கிறார். இதற்கு பிரியங்கா அவரை சமாதானம் செய்யும் விதமாக பணத்தை இன்னும் ஏற்றினால் என்ன செய்வா?? என்று கேள்வியை எழுப்பி இருக்கிறார். அதற்கு அமீர் பணத்தை ஏற்ற வில்லை என்றால் என்ன செய்ய?? இதோடு முடித்து விட்டால்!!! என்று எதிர்க்கேள்வி கேட்டிருக்கிறார். அதுவும் இல்லாமல் எதுவும் இல்லாமல் நான் நடுவில் நிற்பேனா?? யோசித்துப் பார்க்கும்போது இது தான் புத்திசாலித்தனம் என்று தோனுது என்று கூறியிருக்கிறார். அதற்கு சிபி கையை கொடுத்து கட்டித்தழுவி தன்னுடைய ஆதரவை தெரிவித்து இருக்கிறார்.

மாட்டிக்கொண்ட சிபி
அமீர் பேசிக்கொண்டிருக்கும்போது சிபி தோலில் தட்டி, கட்டிப்பிடித்து சூப்பர் என்று வாழ்த்துக் கூறிவிட்டு இந்தப் பணப் பெட்டியை தூக்கி விட்டு கிளம்பி விட்டார் என்று சமூக வலைத்தளத்தில் செய்திகள் பரவி வருகிறது. இதை பார்த்ததும் ரசிகர்கள் இதுதான் சிறப்பான முன்னேற்றம் என்று கூறிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் பல ரசிகர்கள் நிரூப் இதை செய்தால் அவர் கோளை ஆனால் சிபி செய்தால் இது தைரியமான செயலா??என்று கேள்விகளை எழுப்பி வருகின்றனர். ஆரம்பத்திலிருந்து நிரூப் தான் பயந்தாங்கோலி என்று கூறிக்கொண்டிருந்த சிபி தற்போது செய்திருக்கும் செயலும் அப்படித்தான் இருக்கிறது என்று கூறி வருகின்றனர். ஆனால் ஒரு சிலர் அமீர் தான் போகப் போவதாக கூறி அடுத்தவர்களை மனம் மாற்றி விட்டார் என்று கூறிவருகின்றனர்.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications