கொள்கையை மீறி தாலி கட்டியது இதனால் தான்! காரணம் பகுத்தறிவு இல்லை! விக்ரமன் விளக்கம்
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலம் அடைந்த விக்ரமன் திருமணத்திற்கு பிறகு தன்னுடைய மனைவி பிரீத்தியோடு பேட்டி ஒன்றில் கலந்து கொண்டிருக்கிறார். அப்போது தான் பகுத்தறிவு பேசும் நபராக இருந்து கொண்டு தாலி கட்டியது எதற்காக என்று விளக்கம் கொடுத்திருக்கிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசனில் ரன்னராக தேர்வான விக்ரமன் 2016ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான விண்ணைத்தாண்டி வருவாயா என்ற சீரியலில் கதாநாயகனாக நடித்திருந்தார். அந்த சீரியல் முழுமையாக காதல் கதையை மையமாகக் கொண்டு இருந்தாலும் பெரிய அளவில் அந்த சீரியல் பிரபலமாகவில்லை.

அதற்கு பிறகு விசிக மாநில செய்தி வாசிப்பாளராக களம் இறங்கி இருந்தார். அதன் மூலமாகத்தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த நிகழ்ச்சியில் மூலமாக பெரிய அளவில் பிரபலமடைந்தார் இதற்குப் பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் அதிகம் வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
சமீபத்தில் ஒரு திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த திரைப்படத்தில் உதவி இயக்குனராக இருக்கும் பிரீத்தி என்பவரை தான் விக்ரமன் திருமணம் செய்து இருக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு விக்ரமன் மீது கிருபா முனுசாமி என்பவர் புகார் கொடுத்து இருந்தார். அதில் தன்னை காதலிப்பதாக சொல்லி லட்சக்கணக்கில் பணம் வாங்கி ஏமாற்றி விட்டார் என்று அவர் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

தன் மீது இருக்கும் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக விக்ரமன் விளக்கம் கொடுத்திருந்தார். அதற்குப் பிறகு சில மாதங்களாக இந்த பிரச்சனை அமைதியாக இருந்த நிலையில் தான் விக்ரமன் எளிமையாக சென்னையில் திருமணத்தை செய்திருக்கிறார். இந்த திருமணத்தில் குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் கலந்து கொண்டனர்.
இது குறித்து இணையத்தில் அதிகமான விமர்சனங்கள் எழுந்து வருகிறது. விக்ரமன் பகுத்தறிவு பேசுபவர் ஆனால் அவர் எப்படி தாலி கட்டி திருமணம் செய்து கொள்ளலாம் என்று பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள். அதற்கு அந்த பேட்டியில் விக்ரமன் பதில் கொடுத்து இருக்கிறார்.
அதில் அவர் பேசுகையில் கொள்கையை மீறி நான் தாலி கட்டி விட்டேன் என்று பலர் பேசுகிறார்கள். ஆனால் தாலி கட்டிக் கொள்ள வேண்டும் என்பது என்னுடைய மனைவியோடு ஆசை. ஆனால் நான் இந்த ஒரு விஷயத்தை மட்டும் வேண்டாம் என்று சொன்னேன், தாலி என்பது பெண்ணை அடிமைப்படுத்தும் ஒரு விஷயமாகத்தான் நான் பார்க்கிறேன்.
ஆனாலும் அவங்க ஆசையை நிறைவேற்ற தான் நான் தாலி கட்டினேன். ஒரு பெண் ஆசைப்பட்ட விஷயத்தை நிறைவேற்றாததற்கு பெயர் பகுத்தறிவு இல்லை. அதற்கு பெயர் சுயநலம் என்று அந்த பேட்டியில் விக்ரமன் பேசியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications