Bigg Boss 7 finale: அர்ச்சனா வின்னர் ஆனதும் தூக்கி கொண்டாடிய அந்த 4 பேரு.. நெகிழ வைத்த அந்த காட்சி
சென்னை: விஜய் டிவில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக அர்ச்சனா தேர்வாகி இருக்கிறார். அவர் வெற்றி பெற்றதும் அவருடைய நண்பர்களான கூல் சுரேஷ், தினேஷ், விஷ்ணு, பிராவோ ஆகிய நான்கு பேரும் ஓடி வந்து அர்ச்சனாவை தூக்கி தங்களுடைய சந்தோஷத்தை வெளிக்காட்டி இருக்கின்றனர். பிக் பாஸ் மேடையில் இதுவரைக்கும் இல்லாத வகையில் அதிக நேரமாக கமல்ஹாசன் யார் வெற்றியாளர் என்பதை சொல்லாமல் போக்கு கட்டிக் கொண்டிருந்த நிலையில் கடைசி நேரத்தில் அர்ச்சனாவின் கையை தூக்கி வெற்றியை அறிவித்த போது அங்கிருந்த மாயா மற்றும் அவரை சார்ந்த குரூப் அனைவரும் அதிர்ச்சியில் இருந்தனர்.

ஆனாலும் மேடையில் வந்து சிலர் ஒதுங்கி நின்று கொண்டிருந்ததையும் பார்க்க முடிந்தது. என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.
அந்த வகையில் பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி இன்று முடிவுக்கு வந்திருக்கிறது. இதில் கிரான்ட்ஃபினாலேவில் டைட்டில் வின்னராக அர்ச்சனா தேர்வாகி இருக்கிறார். ஒரு சில நாட்களாகவே இந்த சீசனில் டைட்டில் வின்னராக அர்ச்சனா அல்லது மாயா தான் வருவார் என்று அதிகமாக ரசிகர்கள் மத்தியில் கருத்து எழுந்து வந்தது.
இந்த நிலையில் இன்று அர்ச்சனா வெற்றி பெற்று இருக்கிறார். மேடையில் அர்ச்சனாவின் வெற்றியை அறிவித்ததும் அவருடைய பெற்றோர்கள் ஆனந்த கண்ணீர் விட்டு இருந்தனர். அதுபோல இந்த சீசனில் டாப் 5 போட்டியாளர்களாக அர்ச்சனா, மணி, மாயா, தினேஷ், விஷ்ணு ஆகிய ஐந்து போட்டியாளர்கள் இருந்தனர். அதில் ஐந்தாவது இடத்தில் இந்த சீசனில் வெற்றியாளராக விஷ்ணு தேர்வாகி இருக்கிறார்.
அதை தொடர்ந்து நான்காவது இடத்தில் தினேஷ் தேர்வாகி இருந்தார். அதை தொடர்ந்து அர்ச்சனா, மாயா, மணி மூன்று பெரும் இறுதி கட்டத்தில் மேடைக்கு வந்திருந்தனர். அவர்களில் மாயா எவிக்டாகி வெளியே அனுப்பப்பட்டிருந்தார். அவர் செகண்ட் ரன்னர் ஆப்பாக தேர்வானதும் அர்ச்சனா மற்றும் மணி இறுதி கட்டத்தில் நின்று கொண்டிருந்தனர். அப்போது இதுவரைக்கும் இல்லாத வகையில் கமல்ஹாசன் இந்த முறை இவர்கள் இருவரில் யார் வெற்றியாளர் என்பதே சொல்வதில் அதிகமாக போக்கு காட்டிக் கொண்டிருந்தார்.
பிறகு ஒரு கட்டத்தில் அர்ச்சனா தான் வெற்றியாளர் என்று அறிவித்தார். அறிவித்த மறுகணமே அங்கிருந்த கூல் சுரேஷ், தினேஷ், பிராவோ, விஷ்ணு போன்றோர் ஓடி வந்து அர்ச்சனாவை கட்டிபிடித்து அவரை தூக்கி தலை மேல் வைத்து கொண்டாடி இருந்தனர். அப்போது மீதமுள்ள போட்டியாளர்கள் ஒதுங்கி நின்று கைகளை மட்டும் தட்டிக் கொண்டிருந்தனர். அதே நேரத்தில் தான் ஜெயிக்கவில்லை என்றாலும் வெற்றி பெற்ற அர்ச்சனாவை உடனே மணியும் ஓடி சென்று கட்டிப்பிடித்து தன்னுடைய அன்பை வெளிக்காட்டி வாழ்த்துக்களை கூறியிருந்தார். இந்த நெகிழ்ச்சியான காட்சிகளோடு இந்த சீசன் முடிவுக்கு வந்திருக்கிறது. அதே நேரத்தில் இந்த நிகழ்ச்சி முடிவடைந்ததும் மாயா, அர்ச்சனா, மணி போன்றோர் தங்களுக்கு வாக்கு அளித்த மக்களுக்கு சமூக வலைத்தளத்தில் நன்றி கூறி போஸ்ட் போட்டு இருக்கின்றனர்.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications