இரண்டாவது நாளே பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் 6 போட்டியாளர்கள்.. ஆரம்பமானது பிரச்சனை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி நேற்று பிரமாண்டமாக தொடங்கப்பட்டது.
இந்த நிலையில் இரண்டாவது நாளான இன்று அக்டோபர் இரண்டாம் தேதிக்கான முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

அதில் ஆறு போட்டியாளர்களுக்கு இரண்டாவது நாளே பிக் பாஸ் தண்டனை கொடுத்து இருக்கிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பற்றி பார்க்கலாம்.
அந்த வகையில் நேற்று அதாவது அக்டோபர் ஒன்றாம் தேதி மாலை ஆறு மணிக்கு பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி பிரமாண்டமாக தொடங்கப்பட்டது. இதில் முதல் நாளில் 18 போட்டியாளர்கள் அறிமுகமாகியிருக்கின்றனர். இதுவரைக்கும் இல்லாத வகையில் இந்த முறை இரண்டு வீடு கான்செப்ட் தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த வகையில் நேற்று அறிமுகமான போட்டியாளர்கள் அனைவரும் ஒரே வீட்டில் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் இரண்டாவது வீட்டில் போட்டியாளர்கள் எப்போது அறிமுகமாவார்கள் என்று இவர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் இன்று வெளியான பிரமோவில் அதற்கான விடை கிடைத்திருக்கிறது. பிக் பாஸ் வீட்டில் முதல் தலைவராக விஜய் தேர்வாகி இருக்கிறார். இந்த நிலையில் தற்போது வெளியான பிரமோவில் இந்த வார தலைவர் விஜய்யை கவராத போட்டியாளர்கள் பற்றி பிக்பாஸ் பேசி இருக்கிறார்.
அதில் ஐஸ், நெல்சன், பாவா செல்லதுரை, அனன்யா, வினுஷா, ரவீனா என இந்த ஆறு பேரும் அடுத்த பாதை வழியாக இரண்டாவது வீட்டிற்குள் செல்ல வேண்டும். இனி நீங்க இந்த வீட்டிற்குள் வரும்போது தான் உங்ககிட்ட நான் பேசுவேன். அது போல இன்னொரு வீட்டில் இருக்கும் அந்த ஆறு பேரும் எந்த காரணத்தைக் கொண்டும் அந்த வீட்டை விட்டு போக கூடாது என்று அதிரடியான கட்டளைகளை பிக் பாஸ் போட்டிருக்கிறார்.

இப்படியான முதல் பிரமோ வெளியாகி இருக்கும் நிலையில் அதற்கு அதிகமான ரசிகர்கள் பல நாட்களுக்குப் பிறகு பிக் பாஸ் குரலை கேட்டது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள். அதே நேரத்தில் முதல் நாளான நேற்று பிரதீப் பேசியது சரி இல்லை என்று சில கமெண்ட்கள் குவிந்து வருகிறது. அதற்கு அதிகமான லைக்குகளும் கிடைக்கிறது.
அதுபோல ஆரம்பமே இந்த சீசனில் அட்டகாசமாக இருக்கிறது என்றும் இந்த சீசனில் சண்டை சச்சரவுகள் இருக்குமா? அல்லது கலகலப்பாக இருக்குமா? என்று ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர். இந்த சீசனில் அதிகமான இளம் தலைமுறையினர் கலந்து கொண்டிருப்பதால் நிகழ்ச்சி சுவாரசியமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.













Click it and Unblock the Notifications