பிக் பாஸ் 8: ஜாக்குலின் எடுத்த ரிஸ்க்.. அவருக்கே வினையாக போனது! அதிரடியாக வெளியேற்ற காரணம் இதுதானா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சியில் இருந்து ஜாக்குலின் இந்த வாரத்தில் வெளியேற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதோடு 5 லட்சம் பணப்பெட்டியை எடுப்பதற்காக அவர் செய்த முயற்சி அவருக்கு வினையாக முடிந்துவிட்டது என்று கூறப்படுகிறது. என்ன நடந்தது என்று பார்க்கலாம்.

விஜய் டிவியில் பிக் பாஸ் தமிழ் சீசன் 8வது நிகழ்ச்சி கடந்த அக்டோபர் ஆறாம் தேதியில் பிரமாண்டமாக தொடங்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி இந்த வார ஞாயிற்றுக்கிழமை முடிவடைய இருக்கிறது. கிராண்ட் பினாலேவில் யார் ஜெயிக்க போகிறார்கள் என்று எதிர்பார்ப்பின் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

television bigg boss tamil 8 bigg boss 8 8

இந்த வாரத்தில் ஆறு போட்டியாளர்கள் மட்டுமே இறுதி கட்டத்திற்கு சென்று இருக்கிறார்கள். ஏற்கனவே எவிக்ஷனான போட்டியாளர்களும் கடந்த வாரத்திலிருந்து பிக் பாஸ் வீட்டிற்குள் வந்து கொண்டிருக்கிறார்கள். அதே நேரத்தில் உள்ளிருக்கும் போட்டியாளர்களில் மனநிலையை குழப்ப வைக்கவும் வகையில் போட்டியாளர்கள் சில பிரச்சனைகளிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அதுபோல இந்த வாரத்தில் சில டாஸ்குகள் புதியதாக தொடங்கப்பட்டிருக்கிறது. இதற்கு முன்பு கடைசி வாரத்திற்கு முந்தைய வாரத்தில் டாஸ்க் தொடங்கும். அதில் எந்த நபர் வேண்டும் என்றாலும் பெட்டியை எடுத்துக்கொண்டு விளையாட்டில் இருந்து வெளியேறி விடலாம். ஆனால் இந்த முறை கடைசி வாரத்தில் தான் பணப்பெட்டி டாஸ்க் வைக்கப்பட்டிருக்கிறது.

அதிலும் இதுவரைக்கும் இல்லாத வகையில் புதுமையாக டாஸ்க் தொடங்கப்பட்டிருக்கிறது. அதில் ஒரு அறைக்குள் பணப்பெட்டி வைக்கப்பட்டிருக்கிறது. அதில் கொஞ்சம் கொஞ்சமாக பணத்தின் தொகை அதிகரிக்கிறது. ஆனால் அதற்கு அந்த பெட்டிக்கான தூரமும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

குறிப்பிட்ட நேரத்திற்குள் பெட்டியை தூக்கிக்கொண்டு போட்டியாளர் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்து விட வேண்டும் என்பதுதான் டாஸ்க் அப்படி வரவில்லை என்ற அந்த போட்டியாளர் எலிமினேட் ஆவார். அந்த வகையில் முதல் போட்டியாளராக முத்துக்குமரன் 50,000 பணப்பெட்டியை தூக்கி தன்னுடைய வெற்றி அமௌன்ட் உடன் இணைத்து இருக்கிறார்.

அவரை தொடர்ந்து ரயான், பவித்ரா, விஷாலும் பண பெட்டியை எடுத்து வெற்றி பெற்று இருக்கிறார்கள். ஆனால் சௌந்தர்யா பாதியிலேயே மீண்டும் வீட்டுக்குள் திரும்ப வந்துவிட்டார். அதைத்தொடர்ந்து ஜாக்குலின் முயற்சி செய்தபோது குறிப்பிட்ட நேரத்திற்குள் அவர் வீட்டிற்குள் திரும்ப முடியாமல் எவிக்ஷன் ஆகி இருக்கிறார்.

இந்த சீசனில் இதுவரைக்கும் யாரும் செய்யாத சாதனையை ஜாக்குலின் செய்திருந்தார். 15ஆவது வாரங்கள் இந்த நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில் 15 வாரமும் இவர் நாமினேஷனில் இடம் பிடித்திருந்தார். எல்லா வரமும் இவரை மக்கள் காப்பாற்றி இருந்தனர். ஆனால் கடைசி வாரத்தில் இவர் எடுத்த முடிவே இவருக்கு வினையாக வந்திருக்கிறது. அதனால் இவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+