பிக் பாஸ் 8: ரவீந்தரை அடிக்க பாய்ந்த ரஞ்சித்.. வெடித்த கலவரம்.. ரெட் கார்டு யாருக்கு?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் அக்டோபர் ஒன்பதாம் தேதிக்கான இரண்டாவது ப்ரோமோவில் ரவீந்தர் மற்றும் ரஞ்சித் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அப்போது ரஞ்சித் ரவீந்தரை அடிக்க பாயும் போது இடையில் அருண் கீழே விழுந்து இருக்கிறார். இதனால் இன்று யாருக்கு ரெட் கார்டு கொடுக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.
எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று சொல்வது போலத்தான் இன்றைய எபிசோடில் யாரும் எதிர்பார்க்காத பெரிய சம்பவம் ஒன்று நடக்க இருக்கிறது. பிக் பாஸ் தமிழ் சீசன் எட்டாவது நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளில் இருந்தே போட்டியாளர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டு விட்டது. பிரச்சனை ஏற்படவில்லை என்றாலும் பிரச்சனையை ஏற்படுத்துவதுதான் பிக்பாஸின் வேலை என்பதை வீட்டிற்குள் கோடு போட்டு காட்டி விட்டார்.

பிக் பாஸ் எதிர்பார்த்தது போலவே போட்டியாளர்களும் நின்றால் குற்றம், உட்கார்ந்தால் குற்றம் என்று சொல்வது போல எதற்காகத்தாலும் வீண் விவாதம் செய்து கொண்டிருக்கின்றனர். இன்று காலை வெளியான ப்ரோமோவில் விஜே விஷால் மற்றும் பவித்ரா இருவருக்கும் இடையே சண்டை நடந்தது. அதில் விஜே விஷால் என்னை பார்த்து டி போட்டு கூப்பிடுகிறார் அது எனக்கு பிடிக்கவில்லை என்று பவித்ரா சண்டையிட்டு இருந்தார்.
அந்த சண்டைக்கு மத்தியில் இதற்கு சமாதானம் செய்யப் போன ரவீந்தர் மற்றும் ரஞ்சித் இடையே பெரும் சண்டை வந்திருக்கிறது. அதாவது தற்போது வெளியான ப்ரோமோவில் ரஞ்சித் இடம் பவித்ரா நீங்க கலாய்க்கிற மாதிரி எதுவும் பேசினீங்களா? என்று கேட்க, அதற்கு அந்த நேரத்தில் ரவீந்தர் நீங்க எதுக்கு தேவையில்லாம அந்த பெண்ணை பத்தி பேசினீங்க என்று ரஞ்சித்திடம் கையை நீட்டி பேசுகிறார்.
அதற்கு ரஞ்சித் கையை இறக்கு என்று சொல்கிறார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் கைகலப்பாக மாறப்போகுது போல இருக்கிறது. அதில் ரஞ்சித்தை அருண், ஜெஃப்ரி, அர்னாவ், தீபக் உட்பட பலர் பிடித்திருக்கிறார்கள். அப்போது ரஞ்சித் தன்னைப் பிடித்திருந்தவர்களை பிடித்து தள்ளும்போது அருண் கீழே விழுந்து விடுகிறார். அதோடு நிற்காமல் ரவீந்தர் மேலும் பேசிக்கொண்டே இருக்கிறார்.
ரஞ்சித் நீ கையை நீட்டி பேச நான் ஒன்னும் உன் வீட்டு வேலைக்காரர் கிடையாது என்று சொல்கிறார். பிறகு ரவீந்தர் ஒரு சோபாவில் உட்கார்ந்து இருக்கிறார். அவர் ரஞ்சித்திடம் டேய் என்ன பண்ணுவ என்று கத்தி பேச, ரஞ்சித் தன்னை பிடித்திருந்தவர்களை தள்ளிவிட்டு ஓடி வருகிறார். இந்த ப்ரோமோ இப்போது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இது உண்மையான சண்டையா? அல்லது ஆண்கள் அணியில் இவர்கள் பிளான் போட்டு இப்படி சண்டை போடுகிறார்களா? என்ற சந்தேகம் வருகிறது. 24 மணி நேர எபிசோடில் இந்த காட்சிகள் இன்னும் வரவில்லை. ஒருவேளை இது உண்மையான சண்டையாக இருந்தால் ரவீந்தர் அல்லது ரஞ்சித் இவர்கள் இருவரில் ஒருவருக்கு ரெட்கார்ட் கொடுத்து வெளியேற்றப்படுவார்கள்.
முதல் நாள் ரவீந்தர் டாஸ்க் விளையாடும்போது காலில் அடிபட்டிருந்தபோது அவரை முழுமையாக கவனித்துக் கொண்டது ரஞ்சித் தான். ஆனால் இன்று இருவருக்கும் இடையே இவ்வளவு பெரிய சண்டை ஏற்பட்டு இருப்பது குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications