"அம்பேத்கர் பெயருக்கு தடையா?” பிக் பாஸ் தமிழில் ஸ்கூல் டாஸ்கில் நடந்த சர்ச்சை – கானா வினோத்தின் பேச்சு மியூட்!
சென்னை: சர்ச்சைகளுக்கு எப்போதும் பஞ்சம் வைக்காத நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் 9 தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் நடக்கும் ஒவ்வொரு சம்பவமும் சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறி விடுகிறது.

அம்பேத்கர் பெயருக்கு மியூட்
இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் 'ஸ்கூல் டாஸ்க்' நடந்து வருகிறது. இதில் பிரஜன் முதல்வர் (பிரின்சிபல்) ஆகவும், கனி, அமித் ஆகியோர் ஆசிரியர்களாகவும் பங்கேற்றுள்ளனர். இந்த டாஸ்கின் போது போட்டியாளர்களில் ஒருவரான கானா வினோத் பேசிய ஒரு விஷயம் தான் தற்போது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
வினோத்தின் பேச்சு
பிரஜன் வகுப்பெடுத்துக் கொண்டிருந்தபோது எழுந்து நின்ற கானா வினோத், ஒரு முக்கியக் கருத்தைக் கூறி, இறுதியில் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் பெயரை சுட்டிக்காட்டி பேசியுள்ளார். ஆனால், விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பிய வீடியோவில், அம்பேத்கர் பெயரை வினோத் குறிப்பிட்ட இடத்தில் மட்டும் 'மியூட்' போடப்பட்டுள்ளது. அதாவது, அவர் பேசிய அந்த பெயர் மறைக்கப்பட்டு, சத்தம் ஒலிக்காமல் வெளியிடப்பட்டுள்ளது.
ரசிகர்கள் கேள்வி
கானா வினோத் குறிப்பிட்ட அந்தக் கருத்து வருமாறு: "நீ கற்ற கல்வி உன் சமுதாயத்திற்கு பயன்படவில்லை என்றால் நீ சாவதே மேல்". இப்படிப்பட்ட சமூக நீதி சார்ந்த ஒரு முக்கியமான கருத்தைக் கூறியபோது, அதற்குக் காரணமான முன்னோடித் தலைவரின் பெயரை மட்டும் மறைத்தது ஏன் என்று சமூக வலைதளங்களில் கடும் விவாதம் எழுந்துள்ளது.
சர்ச்சை வெடித்தது
இதைக் கண்ட நெட்டிசன்கள் மற்றும் பார்வையாளர்கள், "பிக் பாஸ் வீட்டுக்குள் அம்பேத்கர் பெயரை பயன்படுத்தத் தடை இருக்கிறதா?" என்று விஜய் டிவிக்கு கடுமையான கேள்வி எழுப்பி வருகின்றனர். ஒரு கல்விச சூழல் சார்ந்த டாஸ்கில் இத்தகைய ஒரு முக்கியத் தலைவரின் பெயரைக் கூடப் பயன்படுத்தக் கூடாது என்று நிகழ்ச்சி தரப்பு நினைத்தது ஏன் என்ற குழப்பம் நிலவுகிறது.
சமூக நீதியை பேசுபவரின் பெயரே மறைக்கப்பட்டது, பிக் பாஸ் நிகழ்ச்சியின் மீது மேலும் ஒரு விமர்சன புள்ளியை பதிந்துள்ளது.












Click it and Unblock the Notifications