முன்னாடிலாம் இப்படி இல்ல..ஆனால்? இப்போ மாறிடுச்சு..கணவர் பற்றி உருக்கமாக பதிவு வெளியிட்ட தீபிகா
சென்னை: டிஸ்னி ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் கனா காணும் காலங்கள் சீரிஸில் ஒன்றாக நடித்து சில நாட்களுக்கு முன்பு தீபிகா மற்றும் ராஜா வெற்றி பிரபு திருமணம் செய்து இருந்தனர்.
இந்த நிலையில் திருமணத்திற்கு பிறகு ராஜா வெற்றி பிரபு பற்றி தீபிகா பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அதைத்தொடர்ந்து தீபிகா பதிவிற்கு ராஜா வெற்றி பிரபு பதில் கொடுத்திருக்கிறார்.

சீரியலாக இருந்தாலும் சரி, சினிமாவாக இருந்தாலும் சரி ஒன்றாக நடிப்பவர்கள் திருமணம் செய்து கொள்வது ஒன்றும் புதிய விஷயம் இல்ல. அந்த வகையில் இப்போது புது ஜோடியாக இடம் பிடித்தவர்கள் தான் கனா காணும் காலங்கள் சீரியல் தீபிகா மற்றும் ராஜா வெற்றி பிரபு இவர்களுக்கு சமீபத்தில் தான் திருமணம் முடிந்திருந்தது.
நாங்கள் ஒன்றாக நடித்திருந்தாலும் காதலிக்கவில்லை என்றும் நண்பர்களாக பழகி வந்த நிலையில் வீட்டில் திடீரென்று மாப்பிள்ளை பார்க்கும்போது இருவரும் பேசி பெற்றோரின் சம்மதத்தோடு திருமணம் செய்து இருக்கிறோம் என்றும் தீபிகா கூறி இருந்தார். திருமணத்திற்கு பிறகு ஹனிமூன் சென்று வந்து இந்த தம்பதி மீண்டும் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் தீபிகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்று ராஜா வெற்றி பிரபு குறித்து உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், திருமணத்திற்கு பிறகு எங்கள் வாழ்க்கை ரொம்பவே மாறிடுச்சு. இப்போ காலை வேலையில் நடைபயிற்சி செய்ய போகும் போது கூட பச்சைக் கொடியால் சூழப்பட்ட அமைதியை தேடுகிறோம்.
இதற்கு முன்னாடி நாங்க ரெண்டு பேரும் 24 மணி நேரமும் ஒன்றாக செலவழித்தது இல்ல. ஆனா இப்போ அவரை தொடர்ந்து என்னுடைய பக்கத்திலேயே வைத்திருப்பது, என்னுடைய அறையை பகிர்ந்து கொள்வதும் கற்பனைக்கு எட்டாத விதத்தில் வித்தியாசமாகத்தான் இருக்கிறது. அவர் என்னோடு இருப்பது பெரிய விஷயமாக தோன்றுகிறது. அதோடு அவர் என்னை கடந்து செல்லும் ஒவ்வொரு முறையும் நான் அதை அனுபவித்து மகிழ்கிறேன்.
எனக்கு பிடித்த என்னுடைய நண்பர், (கணவர்) எனக்கு என்னுடைய ரூம்மெட் ஆவதை விட அழகானது எதுவாக இருக்க முடியும்? திருமணத்திற்கு பிறகு அவர் முன்னாடி நான் எளிமையா இருப்பதும், அவர் என்னுடைய பக்கத்திலே இருப்பதும் என்னை அதிர்ஷ்டசாலியா உணர வைக்கிறது. அவர் எனக்காக செய்யும் ஒவ்வொரு சின்ன சின்ன விஷயமும் எனக்கு தனி சிறப்பாகவும், மதிப்பாகவும் பீல் பண்ண வைக்கிறது.
எங்கள் உறவில் அவர் வைத்திருக்கும் அன்பும் மரியாதையும் கடலை விட பெரியது என்று தோன்றுகிறது. ஒவ்வொரு கணமும் நான் அவரை காதலிப்பதை என்னால் தடுக்க முடியவில்லை. அதைவிட அழகானது என்னன்னா, அவர் எனக்காக செய்யும் செயல்கள் எல்லாம் அவருடைய இருந்து இயற்கையாகவே செய்கிறார். இதையெல்லாம் ஒருவருடைய வாழ்க்கையில் பெறுவது என்பது பெரிய விஷயம். அது எனக்கு கிடைச்சிருக்கு.
இன்னைக்கு என்னால நான் என்னுடைய வாழ்க்கையில் உண்மையான மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் நிறைவையும் கண்டுபிடித்துவிட்டேன் என்று நம்பிக்கையோடு சொல்ல முடியும். அது மட்டும் இல்ல, தெறி திரைப்படத்தில் மித்ரா நான் முழுமையா இப்பதான் உணர்கிறேன்னு சொல்லும்போது கூட அந்த காட்சியை என்னால் தொடர்பு படுத்திக் கொள்ள முடியாது என்று நினைத்தேன்.

ஆனால் இப்போ நான் அனுபவிக்கும் போது ஒருத்தங்க திருப்தி அடைவதற்கும், முழுமை அடைவதற்கும் பெரிய ஆடம்பரமான விஷயங்கள் தேவையில்லை என்பதை என்னால் உணர முடிஞ்சிருக்கு. அதுபோல நீங்க இப்போது வாழ்க்கையைப் பற்றி நிச்சயம் அற்றதாக நினைச்சுக்கிட்டு இருக்கீங்க. ஆனா ஒரு நாள் சுரங்க பாதையில் முடிவில் ஏற்படும் வெளிச்சம் போல அற்புதமான தருணங்களை அனுபவிப்பீர்கள் என்று தன்னுடைய கணவர் குறித்து தீபிகா மனதில் இருப்பதை கொட்டி இருக்கிறார்.
இதற்கு தீபிகாவின் கணவரான ராஜா வெற்றி பிரபு, எனக்கு இவ்வளவு அழகா எக்ஸ்பிரஷன் பண்ண தெரியாது. ஆனா இந்த தலைப்பு உண்மையில் என்னை ஆழமாக நீ காதலிக்கிறாய் என்பதை பிரதிபலிக்கிறது. என்னையும் அதே சிறந்த நண்பராக உணர வைத்ததற்கு நன்றி தீபிகா என்று கூறியிருக்கிறார்.
-
நடிகர் விவேக் பிரசன்னாவின் சகோதரர் யார் தெரியுமா? 100க்கும் மேற்பட்ட ஹிட் படங்களுக்கு பாடல் எழுதியவர்! நெகிழ்ச்சி கதை -
நான் அடிச்சா தாங்க மாட்ட.. கெத்தாக இறங்கிய திரிஷா.. ஓஹோ விஷயம் இது தானா? போட்டி அவங்க கூடவா? -
இந்த அம்மா கையில் இருக்கும் குழந்தை யார் தெரியுதா? தனுஷ்க்கு ஜோடி! இப்போ உருக்கமான பதிவு -
அரசியல் சதுரங்கத்தில் தோற்றுவிட்டேன்.. திமுகவில் இருந்து விலகியது ஏன்? விஜய் மாஜி மேனேஜர் விளக்கம் -
இறுதி கெடு விதித்த டிரம்ப்.. ஈரான் கையில் எடுத்த பிரம்மாஸ்திரம்! மின்நிலையங்களில் திரளும் இளைஞர்கள் -
Iran-US war LIVE: போர் நிறுத்தம் அறிவித்தாலும் தொடரும் தாக்குதல் -
இனி யாராவது அத்துமீறுவீங்க.. எல்லையில் பாம்பு, முதலையை விடும் பிஎஸ்எப்? வங்கதேசத்துக்கு தூக்கம் போச்சு -
ரூ.25 கோடி வரி கட்டியிருக்கிறேன்.. எப்படி சொத்துகளை மறைக்க முடியும்.. டென்ஷனான ஆதவ் அர்ஜுனா! -
ரூ.73 கோடி ட்விஸ்ட்.. விருதுநகரில் விஜய பிரபாகரன் அதிரடி.. புயலென கிளம்பும் மெகா பிசினஸ் சாம்ராஜ்யம் -
2021 vs 2026.. அடியோடு மாறிய ஓ பன்னீர்செல்வம் சொத்து மதிப்பு.. மகன்கள் தந்த 3 கோடி கடன் -
டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ.. முக்கியமான முடிவை எடுக்க வேண்டிய நேரம்! -
Edappadi: "எடப்பாடியால்" வந்த வினை! தகர்ந்த "234" கனவு! Form கூட fillup செய்ய தெரியாதா? விஜய் கோபம்?












Click it and Unblock the Notifications