Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருநெல்வேலி Slang-னு எதுவும் இல்ல.. சாதிக்கு தான் Slang இருக்கு.. மாரி செல்வராஜ் சொன்ன காரணம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கிய "வாழை" திரைப்படம் தியேட்டரில் வெளியாகி அதிகமான வரவேற்பு பெற்று இருக்கும் நிலையில் செல்வராஜ் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது திருநெல்வேலி Slang என்று எதுவும் கிடையாது, சாதிக்கு தான் Slang இருக்கு என்று பேசியது இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக உருவாகிக்கொண்டிருக்கும் மாரி செல்வராஜ் கடந்த 2006 ஆம் ஆண்டுதான் தமிழ் சினிமாவில் நுழைந்தார். இவருடைய இயக்கத்தில் வெளியான பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்று வருகிறது. இதுவரைக்கும் அவர் இயக்கிய திரைப்படங்கள் எல்லாமே சூப்பர் டூப்பர் வெற்றியாகிக் கொண்டிருக்கிறது.

television mari selvaraj

குறிப்பாக தேசிய விருதும் பரியேறும் பெருமாள் திரைப்படத்திற்கு பெற்றிருக்கிறது. அதுபோல தனுஷ் நடித்த கர்ணன், மாமன்னன் உட்பட பல திரைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. இந்த நிலையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வாழை திரைப்படம் வெளியாகி இருக்கிறது. இந்த திரைப்படமும் தியேட்டர்களில் வெற்றி படமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு பெற்று இருக்கும் இந்த திரைப்படத்தை பலரும் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். இயக்குனர் மாரி செல்வராஜின் சொந்த ஊர் திருநெல்வேலி உள்ள புளியங்குடி என்ற கிராமம்தான். இந்த கிராமத்தில் இருந்து நடிக்க வேண்டும் என்று சென்னைக்கு வந்த மாரி செல்வராஜ் இயக்குனர் ராமனிடம் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார்.

அப்போது ராம் இயக்கத்தில் வெளியான கற்றது தமிழ் என்ற திரைப்படத்தில் சின்ன கேரக்டரில் நடித்திருக்கிறார். அதுபோல தங்க மீன்கள், தரமணி போன்ற படங்களிலும் ராமின் உதவியாளராக பணியாற்றி இருக்கிறார். அதற்கு பிறகு தான் மாரி செல்வராஜ் இயக்குனராக மாறி இருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு விருது வாங்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மாரி செல்வராஜ் தன்னுடைய சொந்த ஊரான திருநெல்வேலி குறித்து பேசி இருக்கிறார்.

television mari selvaraj

அந்த வீடியோ இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது அதில் அவர் பேசுகையில் திருநெல்வேலி ஸ்லாங்குனு கிடையாது. அங்கு ஜாதிக்கு தான் ஸ்லாங்கு இருக்கு. சினிமாக்களில் காட்டுவது திருநெல்வேலி கிடையாது. திருநெல்வேலி ஒரு ஜாதிக்கு ஒரு ஸ்லாங்கு இருக்கும். அங்க அப்படித்தான் ஒரு சிக்கல் இருக்கிறது. நீங்க ரொம்ப நுணுக்கமா பாத்தா ஒருத்தங்க பேசுறதை வச்சு அவங்க என்ன சாதி என்று கண்டுபிடித்துவிடலாம்.

எலி, பாம்பு கறி எல்லாம் சாப்பிட்டு இருக்கிறோம்.. ஓபன் ஆக பேசிய இயக்குனர் மாரி செல்வராஜ்
சினிமாக்கு என்று திருநெல்வேலி ஸ்லாங் பேசுறாங்க ஆனா திருநெல்வேலியின் உண்மையான ஸ்லாங் அது கிடையாது. நான் என்னுடைய அம்மாவை "யம்மோ" என்று கூப்பிடுவேன். "யம்மோ சாப்பாடு இருக்கா" என்று கூப்பிடுவேன். ஆனால் இன்னொரு நண்பன் அவனுடைய அம்மாவை "ஆத்தா" என்று கூப்பிடுவான். அதுபோல இன்னொரு நண்பன் "அம்மே" என்று கூப்பிடுவான். இன்னொரு நண்பன் "அம்மா" என்று கூப்பிடுவார்கள்.

இப்படி அம்மாவையே பலவிதமான கூப்பிடக்கூடிய வழக்கம் திருநெல்வேலியில் இருக்கு. அதுபோல திருநெல்வேலியில் பொது தலைவர்களை ஜாதி தலைவர்களாக மாற்றுகிறார்கள் என்ற கோபம் தான் எனக்கு ஒரு வலியாக இருக்கிறது. அதை எப்படியாவது மாத்தணும், புதுசா இந்த உலகத்தை பார்க்கிற ஜெனரேஷன் கூட ஒரு தலைவரை சாதி தலைவரா பார்க்க கூடாது என்று தான் மாமன்னன் படத்தில் நான் பேசினேன் என்று அந்த பேட்டியில் மாரி செல்வராஜ் பேசியிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+