ரஜினி நடிக்க வேண்டிய படத்திற்கு 3 மடங்கு சம்பளம் கேட்ட விஜயகாந்த்! ஷாக் கொடுத்த தாணு

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினிகாந்த் நடிக்க வேண்டிய படத்தில் விஜயகாந்தை நடிக்க வைக்க அணுகிய போது அவர் 3 மடங்கு சம்பளம் கேட்டதாக தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் அனுபவம் வாய்ந்த இயக்குநர்களே அடுத்தடுத்து படங்களை நடிப்பதும், அவர்களின் படங்களில் மட்டுமே ஹீரோ, ஹீரோயின்கள் நடிப்பதுமாக இருந்தது. இதனால் புதியவர்களுக்கு வாய்ப்பு என்பது இல்லாமல் இருந்தது.

television Rajinikanth vijayakanth

சினிமா கனவுடன் எண்ணற்ற இளைஞர்கள் தங்கள் ஊரை விட்டு சென்னைக்கு வந்து பல நாட்கள் பட்டினி கிடந்து திரைப்படக் கல்லூரியில் சேர்ந்தனர்.

அப்படி திரைப்பட கல்லூரியில் சேர்ந்தவர்கள் சினிமாவில் இயக்குநராவதற்கு முக்கிய காரணம் விஜயகாந்த் என சொல்லலாம். அவர்களது படங்களுக்கு தனது சம்பளத்தை குறைத்துக் கொண்டும் தாராளமாக கால்ஷீட் கொடுத்தும் விஜயகாந்த் உதவினார்.

இவ்வாறு விஜயகாந்த் அறிமுகப்படுத்தியவர்தான் சின்ன கவுண்டர் படம் எடுத்த ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர். அது போல் ஹீரோ, ஹீரோயின் என்ன சாப்பிடுகிறார்களோ, அதே உணவு, அதே தரத்தில் டெக்னீசியன்களுக்கும் வழங்க வேண்டும் என விஜயகாந்த் உத்தரவிட்டார்.

விஜயகாந்த் தனது கல்லூரியில் ஏழை மாணவர்களுக்கு இலவச சீட் கொடுத்திருக்கிறார். அது போல் தன்னை தேடி வந்தவர்களுக்கு தேவையான உதவிகளை அள்ளி அள்ளி கொடுத்திருக்கிறார். நலிவடைந்த தயாரிப்பாளர்களுக்கும் அவர்களை கை தூக்கி விடும் வகையில் படம் செய்து கொடுத்திருக்கிறார்.

அவர் இறந்து ஓராண்டுக்கு மேல் ஆகும் நிலையில் அவர் நினைவலைகளை பல்வேறு பிரபலங்கள் பகிர்ந்துள்ளனர். அந்த வகையில் ஒரு சேனலுக்கு கலைப்புலி எஸ் தாணு, விஜயகாந்த் குறித்து பேட்டி அளித்துள்ளார்.

அவர் கூறுகையில் "விஜயகாந்தை வைத்து படம் தயாரிக்க வேண்டும் என நினைத்து அவரின் நண்பர் ராவுத்தரை சந்தித்தேன். அதிக ஊதியம் சொன்னால் நான் ஓடிவிடுவேன் என நினைத்த ராவுத்தர், விஜயகாந்த் வாங்கும் ஊதியத்தை விட 3 மடங்கு அதிகமாக கேட்டார்.

அவர் கேட்டதுமே நானும் உடனே சம்மதம் சொல்லிவிட்டேன். அட்வான்ஸ் எப்போது வேண்டும் என நான் கேட்டதும் ராவுத்தர் ஷாக்காகிவிட்டார். அப்போது உருவான படம்தான் கூலிக்காரன். இந்த படத்தை முதலில் ரஜினிகாந்தை வைத்து எடுக்க முடிவு செய்திருந்தோம்.

ஆனால் ரஜினிதான், இந்த கதை விஜிக்கு நன்றாக இருக்கும். அவரை வைத்து எடுங்கள் என சொன்னார்" என கலைப்புலி எஸ்.தாணு பேட்டி அளித்துள்ளார். இந்த படம் 1987 ஆம் ஆண்டு ரிலீஸானது.

இந்த படத்தை ராஜசேகர் இயக்கினார். இந்த படத்தில் விஜயகாந்துடன் ரூபினி, ஜெயசங்கர், ராதாரவி, நாகேஷ், எஸ்.எஸ்.சந்திரன், தியாகு, ஸ்ரீவித்யா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இதில் எஸ்பிபி, எஸ் ஜானகி பாடிய குத்துவிளக்காக குலமகளாக பாடல் பிரபலமானது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+