முன்னேறிய முன்னணி சீரியல்.. டிஆர்பியில் சரிவடைந்த எதிர்நீச்சல்.. மாற்றத்திற்கான காரணம் இதுதானா?
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் இந்த வாரம் இனிய சீரியலை விட டி ஆர் பி யில் பின்னணியில் இருக்கிறது
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் கடந்த வாரம் மூன்றாவது இடத்தில் இருந்த நிலையில் இந்த வாரம் டிஆர்பியில் சரிவடைந்து நான்காவது இடத்தை பிடித்திருக்கிறது.
இதுவரைக்கும் இல்லாத வகையில் டிஆர்பியில் இந்த முறை எதிர்நீச்சல் சீரியல் குறைவடைந்ததற்கு காரணம் பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
எதிர்நீச்சல் சீரியல் இந்த வருடத்தின் மூன்றாவது வாரத்தில் ஐந்தாவது இடத்தை பிடித்திருக்கிறது.
புதியதாக ஒளிபரப்பாகி வரும் இனியா சீரியல் இந்த முறை நான்காவது இடத்தை பிடித்திருக்கிறது.
எதிர்நீச்சல் சீரியலில் இதுதான் நடக்கிறது... வெளியே தெரியாத ரகசியங்கள் இருக்கு.. உளறிய கரிகாலன்
இரவு நேர சீரியல்கள்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஒரு சில சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் குறைவான காலத்தில் அதிக வரவேற்பு பெற்று விடும். அந்த மாதிரி தான் தற்போது இரவு நேர சீரியல்களான கயல், வானத்தைப்போல, சுந்தரி, இனியா, எதிர்நீச்சல் இருந்து வருகிறது. அதிலும் எதிர்நீச்சல் சீரியல் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் சீரியலாகவும், பெண்கள் அடிமைப்படுத்துவதை தகர்த்தெறியும் சீரியலாகவும் பலர் இதை புகழ்ந்து வருகின்றனர். இதனாலே இந்த சீரியலுக்கு ரசிகர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர்.
இயக்குனர் திருச்செல்வனின் சீரியல்
எதிர்நீச்சல் சீரியலை பல வருடங்களுக்குப் பிறகு இயக்குனர் திருச்செல்வம் இயக்கி வருகிறார். இந்த சீரியலுக்கு வசனங்கள் நடிகை ஸ்ரீவித்யா எழுதி வருகிறார். இந்த நிலையில் இந்த சீரியலில் பல எதிர்பார்க்காத நிகழ்வுகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அப்பத்தாவை பொங்கலோடு காலி பண்ணி விட வேண்டும் என்று குணசேகரன் பல்வேறு பிளான்களை எடுத்திருந்தார். அது மட்டுமல்லாமல் கிராமத்தில் பொங்கல் நிகழ்வுகள் களைகட்டி இருந்தது.
ஐந்தாவது இடம்தான்
பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டிருந்தாலும் எதிர்நீச்சல் சீரியல் கிராமப்புறங்கள் மற்றும் நகரப்புறங்களில் டிஆர்பி யின் அளவில் ஐந்தாவது இடத்தை தான் பிடித்திருக்கிறது. இது இந்த சீரியலில் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. தற்போது தான் இந்த சீரியல் 300 நாட்கள் கொண்டாட்டத்தை கொண்டாடி இருந்தனர் .இந்த நிலையில் இந்த வாரத்தில் இந்த சீரியல் டிஆர்பியில் 8.59 அளவை பெற்றிருக்கிறது. கடந்த வாரத்தில் இந்த சீரியல் 9.11 பெற்றிருந்த நிலையில் இந்த வாரத்தில் குறைவதற்கு என்ன காரணம் என்பது பலருடைய கேள்வியாக இருக்கிறது.
முன்னேறிய இனியா
இந்த நிலையில் தற்போது புதியதாக தொடங்கப்பட்ட இனியா சீரியல் இந்த முறை 8.69 பெற்று நான்காவது இடத்தை பிடித்திருக்கிறது. கடந்த வாரத்தில் எதிர்நீச்சல் சீரியல் நான்காவது இடத்தில் இருந்த நிலையில் தற்போது இனியா சீரியல் நான்காவது இடத்தை பிடித்திருக்கிறது இனியாவுக்கு திடீரென ஏற்பட்ட ஆக்சிடென்ட் மற்றும் திருமணத்தில் ஏற்பட்ட குளறுபடிகளால் இந்த சீரியல் அதிகமாக ரசிகர்களின் விரும்பப்பட்டு வருகிறதா? அல்லது ஏற்கனவே நடிகை ஆலியா மானசாவிற்கு அதிகமான ரசிகர்கள் இருப்பதால் இந்த சீரியலை அவர்கள் தொடர்ந்து பார்த்து வருகிறார்களா என்று பல்வேறு கேள்விகள் குவிந்து வருகிறது.