ஜீவானந்தம் வீட்டை சுற்றிய கும்பல்.. மனைவி சொன்ன வார்த்தை.. கடைசியில் குணசேகரன் வேறு அப்படி..!
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஆகஸ்ட் 18ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் ஜீவானந்தத்திடம் அவருடைய மனைவி, மகள் குறித்து உருக்கமாக பேசிக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் குணசேகரன் வீட்டில் இருக்கும் பெண்களிடம் கத்திக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் யாரும் எதிர்பார்க்காத பல அதிரடியான திருப்பங்கள் வந்து கொண்டே இருக்கிறது. அதுவும் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று யூகிக்க முடியாத பல அதிரடியான கதைக்களமும் தொடங்கியிருக்கிறது. இதுவரைக்கும் ஜீவானந்தத்திற்கு மனைவி மற்றும் மகள் இருப்பது தெரியாமல் இருந்த நிலையில் இப்போது அவர்களுடைய அறிமுகம் வந்திருக்கிறது.
அதே நேரத்தில் இதுவரைக்கும் கோமாவில் இருந்த அப்பத்தா கண் முழித்திருப்பதால் இனி அப்பத்தா என்ன வார்த்தை பேச போகிறார் என்று எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆனால் அப்பத்தாவை பேச விடாமல் நேற்றைய எபிசோடில் பேசு பேசு என்று சொல்லியே குணசேகரன் அனைவருடைய காதுகளையும் செவிடாக்கியிருந்தார். வீட்டில் இருப்பவர்கள் மட்டுமல்லாமல் சீரியலை பார்ப்பவர்களையும் குணசேகரன் கத்தி பேசி கடுப்பாக்கி இருந்தார்.

இந்த நிலையில் இன்றைய எபிசோடு காண ப்ரமோ வெளியாகி இருக்கிறது. அதில் ஜீவானந்தம் தன்னுடைய மகள் தனியாக அமர்ந்திருக்கும் போது அவருக்கு தெரியாமல் பின்னாடியே வந்து அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கிறார். பிறகு ஜீவானந்தத்தின் மனைவி தனியாக ஜீவானந்தத்திடம் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது எனக்கு வெண்பாவை நினைக்கும் போது தான் பயமாக இருக்கிறது. அவள் உங்கள ரொம்ப மிஸ் பண்றா என்று கூறுகிறார். இதைக் கேட்டதும் ஜீவானந்தம் பீல் பண்ணுகிறார்.
அதே நேரத்தில் குணசேகரன் எல்லா பொம்பளைகளுமே கிருமினலா இருந்தால் எத்தனை கிரிமினல் கூட்டத்துக்குள் வாழறது. ஒரு மனுஷன் 80 வயசு கிழவிக்கும் பயப்பட வேண்டி இருக்கு. எட்டு வயசு தாராக்கும் பயப்பட வேண்டியிருக்கு. எல்லாத்துக்கும் ஒரு முடிவு கட்டனும் என்று கத்திக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இன்று என்ன நடக்கப் போகிறது என்ற பெரும் எதிர்பார்ப்பு அனைவரும் மனதிலும் எழுகிறது.












Click it and Unblock the Notifications